என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
    • பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உயர்நிலை பள்ளியில படித்து வரும் தன் மகனை ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
    • ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் ஆசிரியையுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

    அமெரிக்காவின் தென் கரோலினாவில் ஆசிரியை ஒருவர் 18 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அந்த மாணவனின் தாய் கையும் களவுமாக பிடித்து ஆசிரியையை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    தெற்கு கரோலினாவில் உள்ள தெற்கு மெக்லென்பர்க்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 18 வயது மாணவன் படித்து வருகிறான். இவனை அவனது பெற்றோர் ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் அடிக்கடி 26 வயதான ஆசிரியையுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளியிலும் இதுகுறித்து வதந்தி பரவிய வண்ணம் இருந்துள்ளது.

    இதனால் அந்த மாணவின் பெற்றோர் அவனை ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் டிராக்கிங் செயலியை (Life360) பயன்படுத்தியுள்ளனர்.

    லைஃப் 360 செயலி ஒரு குடும்ப சமூக நெட்வொர்க் செயலியாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை இந்த செயலி மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கும்.

    அந்த மாணவனின் தாய் இந்த செயலியை பயன்படுத்தி தனது மகனை கண்காணித்து வந்துள்ளார். ஒரு நாள் அவரது மகன் இருக்கும் இடத்தை அந்த செயலி மூலம் தெரிந்து கொண்ட தாய், அதன்வழியாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    ஆப்போது ஒரு பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் அவரது மகன் இருப்பதாக காண்பித்துள்ளது. அந்த காருக்குள் எட்டிப்பார்த்த அந்த தாய்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    அவரது மகன் படித்து வரும் அதே பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியை, அநத மாணவனுடன் தகாத உறவில் இருப்பதை கண்டுள்ளார். இருவரும் ஒன்றாக இருப்பதை போட்டோ எடுத்து, உடனடியாக அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாடு தழுவிய விடுமுறை அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படும். இந்த விடுமுறையின்போதுதான் ஆசிரியை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார்.

    • வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
    • "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).

    தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

    டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.

    எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

    ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.

    கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

    டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.

    இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
    • விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.

    பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.

    விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.

    அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

    • சுரங்கங்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது.
    • பிணைக்கைதிகளையும் சுரங்கங்களில் அடைத்து வைத்திருக்கலாம் என நம்புகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் காசா மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசா அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைத்துள்ளது.

    என்றபோதிலும் வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியற்றுடன் சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. அதற்கு ஏற்ப பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை வைத்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருக்கலாம். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கென ஒரு பாணியை வகுத்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ப்ரூஸ் திகழ்ந்தார்
    • ஒவ்வொரு நொடியையும் அவருடன் செலவிடுகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    1990களில் முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis).

    வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவற்றில் தனி முத்திரையுடன் நடித்து, பிற முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக தனது திரைப்படங்களையும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களாக அமைத்து கொண்டார்.

    தற்போது 68 வயதாகும் ப்ரூஸ் வில்லிஸிற்கு எம்மா ஹெமிங் எனும் மனைவியும் மேபல் மற்றும் எவ்லின் என இரு மகள்களும் உள்ளனர்.

    துரதிர்ஷ்டவசமாக, கடந்த பிப்ரவரி மாதம் "ஃப்ரன்டோ டெம்போரல் டிமென்சியா" (FTD) எனப்படும் மருத்துவ தீர்வு இல்லாத மூளை நோயினால் ப்ரூஸ் பாதிக்கப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

    இத்தகவல், உலகெங்கும் உள்ள ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    "சில வருடங்களாகவே ப்ரூஸ் வாழ்வில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் அதிகம் இருந்தாலும், 2 மாதங்களாக அவருக்கு கெட்ட நாட்களையே அதிகம் அனுபவிக்கும்படி உள்ளது. இது எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. அவர் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமுள்ளது என தெரியவில்லை. எனவே, கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அவருடன் இருந்து முழுவதுமாக உணர்ந்து செலவிடுகிறோம்" என ப்ரூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


    மூளை திசுக்களை தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிக முக்கியம் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, "ஜான் மெக்லேன்" எனும் நியூயார்க் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ப்ரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து 1988ல் வெளிவந்த டை ஹார்டு (Die Hard) திரைப்படம் 45 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு
    • குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ரான் டிசாண்டிங், கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் டிரம்ப் தனக்கான ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் உள்ளார்.

    அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. மாகாண வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதமும், கிறிஸ் கிறிஸ்டி 2 சதவீதமும் ஆதரவு உள்ளது. 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

    டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர் ஆஜராகி வருகிறார். ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு உள்ளது.

    • அர்னால்ட் தினசரி உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்து கொள்ளாதவர்
    • ஓய்வு எடுக்க தொடங்கினால் துரு பிடித்து விடுவோம் என்றார் அர்னால்ட்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன. இன்றும் அவரை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர். இன்றளவும் பல நட்சத்திர பாடிபில்டர்களுக்கு கனவு நாயகனாக திகழும் அர்னால்ட், உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து தெரிவித்தார்.






    "பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறி விட்டது. அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்" என ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான அர்னால்ட் கூறினார்.

    தவறாத கட்டுப்பாட்டின் காரணமாக அர்னால்ட் மேற்கொண்ட ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளால் கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுள்ளதால் இன்றளவும் பாடிபில்டர்களின் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

    • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

    சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

    • பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன.
    • இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவித்தது.

    காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

     

    ராபர்ட் வுட்

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறும்போது, "நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்" எனத் தெரிவித்தார்.

    • அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப் பத்திரிகையில், ஹண்டர் பைடன் 2016 முதல் 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்திருக்கிறார். இந்தப் பணத்தைப் எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார். ஆனால், 2016 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    அதிபர் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், ஹண்டரின் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே, 2018-ல் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக ஹண்டர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×