search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corruption Charges"

    • ஈஸ்வரன் அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி-யை சேர்ந்தவர்
    • உலகிலேயே சிங்கப்பூரில்தான் அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது

    சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60).

    கடந்த 2023 ஜூலை மாதம், அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி (People's Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

    பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுக்கள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எஃப் 1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை ஆங் பெங் செங் (Ong Beng Seng) எனும் கோடீசுவரர் நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    தான் செய்த உதவிக்கு பதிலாக ஈஸ்வரன், பல விமான பயணங்கள், சுற்றுலா, உலகின் பெரும் நட்சத்திர ஓட்டல்களில் பல முறை இலவசமாக தங்கும் வசதி, இலவச ஃபார்முலா 1 கார் பந்தய டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை 1,60,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு அந்த கோடீசுவரரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    27 குற்றச்சாட்டுகளிலும் "ஆங்" ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


    அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் தருவதில் உலகிலேயே சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது.

    அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் அதிக ஊதியம் பெற்றால், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக பணி புரிவார்கள் என அந்நாட்டில் நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    அந்நாட்டில் அமைச்சர்களின் தொடக்க மாத ஊதியமே 50,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் இருக்கும்.

    1986ல் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவாகும் நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    சுமார் 37 ஆண்டுகள் கடந்து தற்போது ஈஸ்வரன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

    • ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
    • விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.

    பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.

    விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.

    அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

    ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார். #Brazil #MichelTember #Corruption
    பிரேசிலியா:

    பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில், அணுசக்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கி 2 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) லஞ்சம் பெற்ற வழக்கில் மிச்சல் டெமரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    மேலும் இதே வழக்கில் மிச்சல் டெமரின் மந்திரி சபையில் நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை மந்திரி பதவி வகித்த மோரிரா பிராங்கோ, டெமரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லீமா பில்கோ ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    டெமருக்கு முன் பிரேசில் அதிபராக பதவி வகித்த லூயிஸ் இனாசியோ, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Brazil #MichelTember #Corruption
    பாகிஸ்தானில் ரூ.1,400 கோடி ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் குற்றவாளி என அந்நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #ShahbazSharif #Pakistan #Corruption
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி வகித்தபோது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் ரூ.400 கோடி மதிப்பிலான பஞ்சாப் சாப் சானி ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கூறிய 2 ஊழல் புகார்கள் தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப் மீது அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை (லஞ்ச ஒழிப்பு போலீசார்) வழக்குப்பதிவு செய்தது.

    ஷாபாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடமை கோர்ட்டில், ஆசியானா வீட்டு வசதி ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சையத் நஜாமுல் ஹாசன் வழக்கை விசாரித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய பொறுப்புடைமை முகமை சார்பில் ஆஜரான வக்கீல் அலி ஜான்ஜூவா, ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றசாட்டுக்குரிய ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது ஷாபாஸ் ஷெரீப்பின் வக்கீல், தனது கட்சிக்காரருக்கு உடல் நிலை சரி இல்லாததால், அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், எனவே தண்டனை அறிவிப்பை ஒரு வாரத்துக்கு தள்ளிப்போட வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். #ShahbazSharif #Pakistan #Corruption
    சீனாவின் முன்னாள் துணை நிதி மந்திரி சாங் ஷாவ்சுன் ஊழல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டார். #ZhangShaochunarrested #corruptioncharges
    பீஜிங்:

    சீனாவில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் க்சி ஜின்பிங்  உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் பல முன்னாள் மந்திரிகளும், முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை மந்திரி சாங் ஷாவ்சுன் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை. #ZhangShaochunarrested  #corruptioncharges
    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இரண்டு மாடி பங்களாவை சந்தை விலைக்கு குறைவாக வாங்கிய குற்றச்சாட்டில் இருந்து அந்நாட்டின் நிதி மந்திரி லிம் குவான் எங் இன்று விடுவிக்கப்பட்டார். #Malaysia #Malaysiafinanceminister
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பினாங் மாநில முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர், லிம் குவான் எங். மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது தலைமையிலான மந்திரிசபையில் தற்போது இவர் நிதி மந்திரியாக உள்ளார்.

    பினாங் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இரண்டு மாடி பங்களாவை சந்தை விலைக்கு குறைவாக வாங்கியதாக இவர்மீது முன்னாள் பிரதமர் நஜிப்  ரசாக் தலைமையிலான அரசு குற்றம்சாட்டி, கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அப்போது அவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

    இந்நிலையில், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக நடந்து வந்த வழக்கு விசாரணையின்போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டை தற்போதைய அரசு திரும்பப் பெற்றது. இதைதொடர்ந்து, இவ்வழக்கில் இருந்து லிம் குவான் எங்-கை விடுவித்து நீதிபதி ஹதாரியா சையத் இன்று தீர்ப்பளித்தார். #Malaysia #Malaysiafinanceminister
    ×