என் மலர்
பாகிஸ்தான்
- இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்
- இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- நேற்று முதன்முறயைாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா "ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor)" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் முக்கிய பயங்கரவாத குழுவின் தளபதி கொல்லப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்தியா முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 ஆகிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை வைத்துள்ளது. இந்த இரண்டு ஏவுகணைகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த பாகிஸ்தான் நாட்டின் உள்தயாரிப்பு ஏவுகணையாகும்.
நேற்று பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி டெல்லியை தாக்க முயற்சித்துள்ளது. இதை இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் மூலம் பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்" நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பன்யன் அல்-மர்சூஸ் (Bunyan al-Marsoos) அல்லது பன்யன் அல் மர்சூஸ் (Bunyan Ul Marsoos) அல்லது பன்யன்-அன்-மர்சூஸ் (Bunyan-un-Marsoos) அல்லது பன்யனுன் மர்சூஸ் (Bunyanun Marsoos) என அழைக்கப்படுகிறது.
இதற்கு ஈயத்தால் ஆன சுவர் என்பது பொருள் எனவும், கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது என்பது போல் பொருள்படும் எனவும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இந்தப் பெயருடன் பாகிஸ்தான் தன்னை ஒரு அசைக்க முடியாத சுவராகவோ அல்லது கட்டமைப்பாகவோ சித்தரிக்க விரும்புகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்டா-2 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். ஈது 400 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன்கொண்டது. எதிரி நாடுகளின் மிகவும் உள்பகுதிகள், ராணுவ தளங்கள், தகவல்தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை தாக்கக்கூடியதாகும்.
ஆபரேஷன் சிந்தூர் பெயர் காரணம்
'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.
பாகிஸ்தான் கிழக்கில் இந்தியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் சூழலில் மேற்கில் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவின் தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா உட்பட பலுசிஸ்தான் முழுவதும் பல மூலோபாய இராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) கூறியுள்ளது.
இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.
BLA செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச்சின் கூற்றுப்படி, அவர்களின் போராளிகள் கெச், மஸ்துங் மற்றும் கச்சி மாவட்டங்களில் ஆறு இடங்களில் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட IEDகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர்.
இந்தத் தாக்குதல்கள்களில் குறிப்பாக பாகிஸ்தான் படைகள், அவர்களின் விநியோகத் சங்கிலிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்டன.
- நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.
- சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.
இதற்கிடையே ஏற்கனவே பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் உலக வங்கி மற்றும் உலக நாடுகள் உதவி பெற்று வரும் சூழலில் தற்போது ஏற்பட்ட மோதல் அந்நாட்டுக்கு பெரிய அடியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்களைக் கோருகிறது.
பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.
அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் பொருளாதர அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
- கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
- கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.
ஆபரேஷன் சிந்தூா் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்க்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவை போலியானவை என்று உண்மை சரிபார்ப்பு மூலம் தெரிய வருகிறது. காசாவில் 2020 நடந்த தாக்குதலின் புகைப்படத்தை தவறாக கராச்சி துறைமுகம் என்று பகிரப்படுவதாக தெற்காசியாவில் தவறான தகவல் போக்குகளைக் கண்காணிக்கும் அங்கிதா மஹலனோபிஷ் தெரிவித்தார்.
மேலும் எக்ஸ் தளத்தின் குரோக் சாட்பாட்டும் இதை அவை போலியானவை என்று உறுதி செய்துள்ளது. மேலும் கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.
- ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.
- இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு உள்ளது.
இந்தியாவின் எல்லை பகுதிகளான ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்களையும், பஞ்சாபில் உள்ள பதான்கோட்டையும் பாகிஸ்தான் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது.மேலும் இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் துணிக்கப்பட்டது. இந்திய ராணுவம் பெரும்பாலான பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக அழித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் பரப்பும் ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது .
இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டவை மற்றும் பாகிஸ்தானை அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்ட பொறுப்பற்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நம்பகமான விசாரணை இல்லாமல் பாகிஸ்தான் மீது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை இந்தியா மீண்டும் மீண்டும் சுமத்துகிறது" என்று வெளியுறவு அலுவலகம் குற்றம் சாட்டியது.
இதற்கிடையே தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று என்று கவாஜா ஆசிப் தெரிவித்தார். "நாங்கள் தாக்கிவிட்டு, பின்னர் அதை மறுக்க மாட்டோம்," என்ற ஆசிப், பாகிஸ்தான் தாக்க முடிவு செய்யும்போது அது உலகம் முழுவதும் அறியப்படும் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
இருப்பினும், இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு இருப்பதாக ஆசிப் எச்சரித்தார்.
- இன்று காலை இந்திய ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்.
- இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களை குறிவைத்து இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷேன் சிந்தூர் என்ற பெயரில் 07-05-2025 அன்று 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தன்னிச்சையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இன்று காலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 இடங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் (Indian Air Force S-400 Sudarshan Chakra air defence missile systems) வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
அதேவேளையில் இந்தியா பாகிஸ்தானை நோக்கி டிரோன்களை செலுத்தியது. இந்த டிரோன்கள் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற இடங்களை தாக்கியது. இதில் லாகூர் வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 25 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகத் துறை {Inter-Services Public Relations (ISPR)} தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவால் செலுத்தப்பட்ட இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 25 ஹெரோப் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இருந்து டிரோன்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எதிரிகள் மற்றும் எதிரிகளின் அனைத்து நோக்கங்களையும் அழிக்கும் வகையில் பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
- ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
- பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரை யாற்றினார். அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தில் இருந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
"பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் தாக்குதல்கள் கோழைத்தனமானது.
பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைத்திருக்கலாம், ஆனால் தங்கள் நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை இந்தியா மறந்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்த னர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு, விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் நமது விமானிகள் எதிரிகளின் ஜெட் விமானங்களை வெடிக்கச் செய்தனர். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ச்சியான சண்டை நடந்து வருகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தங்கள் துணிச்சலைக் காட்டிப் போராடி வருகிறது.
எனது பாகிஸ்தான் மக்களே உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, நமது ராணுவத்துக்கு எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். நாம் நிச்சயமாக அவர்களை (இந்தியாவை) எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். நாட்டின் பாதுகாப்பிற்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் எனக்கு தேவை" என்று பேசினார்.
- 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது இந்தியா.
- 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் சொல்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரஃபேல் விமானங்கள் உள்பட 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபின் ஆலோசகர் ராணா சமானுல்லா கூறுகையில் "இந்தியா மேற்குகொண்டு எந்த பதற்றத்தையும் அதிகரிக்கவில்லை என்றால், பாகிஸ்தான் எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கையையும் எடுக்காது என்பதை உலகிற்கு அரசு மற்றும் ராணுவம் உறுதிப்பூண்டுள்ளது.
நாங்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இந்தியா மேலும் நடவடிக்கை மேற்கொண்டால், அதன்பின் கூடுதலாக பதிலடி கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா நள்ளிரவு நடத்திய வான்தாக்குதல் திட்டமிட்ட செயலாகும்.
- பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போர் விமானங்களை மட்டும் டார்கெட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் கூறுகையில் "இந்தியா நள்ளிரவு நடத்திய வான்தாக்குதல் திட்டமிட்ட செயலாகும். ஆனால் உண்மை என்ன? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக நேற்றிரவு 10 மணிக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைக்க பெற்றோம். அந்த நேரத்தில் கூட பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடித்தது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போர் விமானங்களை மட்டும் டார்கெட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால்தான் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. உத்தரவு வேறு மாதிரி இருந்திருந்தால் 10 முதல் 12 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்போம்" என்றார்.






