என் மலர்
பாகிஸ்தான்
- நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
- பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நதிநீர் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிந்து நதியின் நீரை இந்தியாவிற்குத் திருப்பிவிடுவதற்காக கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
ஜியோ நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் பங்கான தண்ணீரை இந்தியா திருப்பிவிட முயற்சிப்பது அவர்களின் நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறினார்.
"இந்தியா அத்தகைய கட்டமைப்பை (அணையை) உருவாக்க முயற்சித்தால், பாகிஸ்தான் அதை அழித்துவிடும்" என்று ஆசிப் கூறினார்.
நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும் என்று தெரிவித்திருந்தார்.
- இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி.
- ராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி, இது பாகிஸ்தானால் சோன்மியானி ரேஞ்சில் சோதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, 'எக்சர்சைஸ் சிந்து' என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பு பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஃபயர்பவர் தரவரிசையின்படி, இராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
- பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.
முன்னதாக நேற்று, வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு பாகிஸ்தான் எல்லையை மூடியது. இதனால் பாகிஸ்தானியர்கள் வெளியேற முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தனர். பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் 24 மணி நேரம் மவுனத்திற்கு பிறகு பாகிஸ்தான் தற்போது தங்கள் எல்லையை மீண்டும் திறந்துள்ளது. இதன்மூலம் எஞ்சியுள்ள பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.
- PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.
- சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.
பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.
இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
- அசீம் மாலிக் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22-ந்தேதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புடன் அசீம் மாலிக்கிற்கு அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது.
- மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம், ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.
2019 இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.
நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.
2019 ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
- இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ராணுவ தளபதிகளுடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
- இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.
- வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
- தனது வான்வெளிப் பகுதியை இந்திய விமான நிறுவனங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சஸ்பெண்ட் செய்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங பிரதமர் மோடியை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் பாகிஸ்தானை தாக்கலாம் என்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரும், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தனது சகோதரரும், பிரதமருமான ஷெபாஷ் ஷெரீஃபிடம் இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோசமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியா உடனான பதற்றத்தை கட்டுப்படத்த அனைத்து டிப்ளோமேட்டிக் வளங்களை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து நேற்று மாலை நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அப்போது நவாஸ் ஷெரீப் இந்த ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.
- இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
- அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.
- நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
- இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
நாடு முழுவதும் நமது அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறிவைக்கின்றன" என்று தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், இந்த தடை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்றும் அப்பாசி கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது பாதுகாப்புத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக பாகிஸ்தானைக் குறை கூறுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.






