என் மலர்
இஸ்ரேல்
- கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
- திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை பலியாகினர். 200 பேர் வரை பணய கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 52,000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பொது ஹமாஸ் இஸ்ரேல் பணய கைதிகள் பலரை விடுவித்தது. 1 மாதத்தில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. இதனால் காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு (காலவரையின்றி) அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது ஹமாஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே போரின் பேரில் காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முழுமையான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் போரின் போர்வையில் நிறுவ முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், ஹமாஸ் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படும் என்றுகூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
காசா போருக்கு எதிராக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலின் 2-வது பெரிய நகரமாக திகழ்ந்து வரும் டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் விமான நிலையம் மீது அவர்கள் முதல் முறையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமான பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம். இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.
- டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது.
இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
- லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
- போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
- போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஈஸ்டர் திங்கள் (ஏப்ரல் 21) அன்று காலை தனது 88 வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் போப் பிராசிஸ் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நீக்கியுள்ளது.
"போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்" என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளது கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
மறைந்த போப் பிரான்சிஸ் காசா - இஸ்ரேல் போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது.
- அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், தற்காலிக கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காசாவில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.
அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 2023, அக்டோபர் 7 இல் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை இறந்தனர்.
200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பலர் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் வைத்து கொல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதற்கிடையே மீதமிருக்கும் அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் நேற்று கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகள், 12 பெண்கள் அடங்குவர்.
- மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.


இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காசாவிலிருந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காசாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
- இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
காசா:
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள்.
- ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்.
இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், "நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய கற்கள் இருந்தது. ஆனால் அவள் இந்த குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள். அந்த கல் பார்ப்பதற்கே அழகாக இருந்தால் என் பெற்றோரை அழைத்தேன். அப்போதுதான் நாங்கள் ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்," என்றார்.

பின்னர் அந்தக் குடும்பத்தினர் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையத்திடம் (IAA) தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமி ஷிவ்வுக்கு நல்ல குடியுரிமைக்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கினர்.

இதனிடையே இஸ்ரேலின் தொல்பொருள் ஆணைய இயக்குனர் கூறுகையில், "இஸ்ரேல் நாட்டின் தேசிய பொக்கிஷத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த ஷிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு நன்றி. அனைவரும் அதைப் பார்த்து மகிழ முடியும். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு கண்காட்சியில் இந்த முத்திரையை நாங்கள் வழங்குவோம்" என்று கூறினார்.
- பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
- அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும்.
இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் அதிகமானோரை பணயக் கைதிகளை பிடித்துச் சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் இஸ்ரேலுக்கும்- ஹமாஸ்க்கும் இடையில் போர் மூண்டது. அடுத்த மாதம் (2023 நவம்பர்) பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அதன்பின் சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஏழு வார ஒப்பந்தத்தில் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏழு வாரத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் மார்ச் தொடக்கத்தில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. காசாவுக்கு செல்லும மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது.
இந்த நிலையில் காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி கொண்டிக்கிறோம் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும். காசா குடியிருப்புவாசிகள் ஹமாஸ் அமைப்பினரை வெளிப்படுத்தி, அனைத்து பணயக் கைதிகளையும் திருப்பு அனுப்ப வேண்டும்" என்றார்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 59 பணயக் கைதிகள் உள்ளனர். அவர்களில் 24 பேர் உயிரிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் நேற்று இரவில் இருந்து நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நம்பிக்கை தெரிவித்ததாக அல்-ஹயா கூறினார்.
- பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார்.
இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த முறை சரியாக 50 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.
ரமலான் முடிவை குறிக்கும் ஈத், சனிக்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை முடிவடைகிறது. ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா, ஒரு தொலைக்காட்சி அறிக்கையின் போது, குழுவின் "நேர்மறையான" பதிலையும் அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தினார் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை "முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது" என்றும், இஸ்ரேல் "இந்த திட்டத்தைத் தடுக்காது" என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறினார்.
எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார். இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியது. இஸ்ரேல் தரப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர் திட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது. மேலும் இம்மாத தொடக்கத்தில் முழுமையான மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது. இதுதவிர மீதமுள்ள 24 பணயக்கைதிகள் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் வரை அல்லது விடுவிக்கப்படும் வரை தனது படைகள் காசாவின் சில பகுதிகளில் நிரந்தரமாக இருக்கும் என்று கூறியது.
- காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.
காசா பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இது அதற்கு முந்தைய தாக்குதலில் பதிவான உயிரிழப்புகளை விட அதிகம் ஆகும். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் தினமும் உயிரிழந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் கடந்த ஒருவார காலத்திற்குள் காசா பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 17 மாதங்களில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடர் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரு்ம நிலையில், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு எகிப்து யோசனை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர் உள்பட ஐந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் காசா பகுதிக்குள் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை அனுமதித்து, ஒருவார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று எகிப்து அதிகாரி தெரிவித்தார்.
இதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பணயக்கைதிகள் விடுவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு சாதகமான பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், காசாவில் உள்ள ரெட் கிராஸ் அலுவலகத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.






