என் மலர்
வங்காளதேசம்
- இடைக்கால அரசு அரசியல் புதிய சாசனத்தில் கையெழுத்திட்டது.
- தங்களது கவலைகளை தீர்த்து வைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கோபம்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்
அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.
புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற காரணமாக இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்காலிக கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு நின்றிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திடீரென வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலமானார்.
- ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
டாக்கா:
வங்கதேசம் தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
- 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதன் பின், 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசை தேர்ந்தெடுக்க அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டின் சிறுபாண்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்கள் வீதிகளில் திரண்டு போராட்டங்களும் நடத்தினர். இதுகுறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்த இந்திய ஊடகங்களின் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும் முகமது யூனுஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க செய்தியாளர் மெஹ்தி ஹாசன் உடனான நேர்காணலின்போது அவர் இதை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல என்று அவர் கூறினார்.
இந்துக்கள் மீதான தாக்குதல் செய்திகள் தவறானவை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் முகமது யூனுஸ் தெளிவுபடுத்தினார்.
- வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
- மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது
வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார்.
- இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போராட்டம் வெடித்தது. வன்முறையாக மாறியதில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமாக இருக்கும் இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார். டாக்காவில் விமானம் மூலமாக வந்திறங்கிய அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் அந்த நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த உணவகம் ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
- திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே தந்தையால் காண முடிந்தது.
மகாராஷ்டிர மாநிலம் ஜாலகான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் ரஹீம் கான் (21 வயது).
இவர் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் கபே ஒன்றில் மாற்று சமூகத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
இந்த கபே ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
இந்நிலையில் சுலைமானை நெருங்கிய 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை உணவகத்தில் இருந்து காருக்கு இழுத்துச் சென்று உள்ளே ஏற்றி, பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளது.
பின்னர் மயக்கமடைந்த அவரை அவரின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுள்ளது. அப்போது அந்த கும்பலை தடுக்க முயன்ற சுலைமானின் தாய், சகோதரியை அந்த கும்பல் தாக்கிவிட்டு சென்றுள்ளது.
சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
போலீசார் கூற்றுப்படி, சுலைமானை அந்த கும்பல் கட்டைகள் மற்றும் இரும்பக் கம்பிகளால் தாக்கியதில் அவரின் உள்ளுறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்த சுலைமான் போலீசில் சேர காத்திருந்தார். சம்பவத்தன்று அவரின் தந்தை போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க சென்றிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே அவரால் காண முடிந்தது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார் அந்த கும்பலை தீவிரத்துடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- வங்கதேசத்தில் கடந்த வருடம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- தற்போது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருந்து வருகிறார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் நிறைவு அடைந்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தொலைகாட்சியில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது "இடைக்கால அரசின் சார்பில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் பாதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
- முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிரடியாக விளையாடி அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் 63 ரன்னில் அவுட்டானார். ஹசன் நவாஸ் 33 ரன்னில் வெளியேறினார்.
வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்கதேச அணி 104 ரன்னில் சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 74 ரன்னில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்கதேசம் அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது சாஹிப்சாதா பர்ஹானுக்கும், தொடர் நாயகன் விருது ஜேகர் அலிக்கும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
- 16 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம்.
- காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளிக்கூடம் மீது விழுந்து மோதிய விபத்தில், பள்ளியில் இருந்த 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. வங்கதேசத்தின் பயிற்சி போர் விமானம் திடீரென இந்த பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளியில் படித்து வந்த 6ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவற்றில் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.
டாக்கா:
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.
- இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
- சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை வங்கதேச அரசு வெளியிட்டது. இதையடுத்து, இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில், சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
- போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 5 தனது பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.
பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.
இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.
குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.






