என் மலர்
உலகம்
- காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஜெனீவா:
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை குறித்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளைத் தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
- புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் அயடோலா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்.
- ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.
காசா எல்லையில் உள்ள ஹமஸ், சில பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் இணைந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிக ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதுதவிர இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த ஹமஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் என்றும், 908 பேர் படுகாயம் அடைந்தது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1,600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இஸ்ரேல் அரசும் ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
- வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆபரேஷன் அக்சா ஃபிளட் என்ற பெயரில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுத குழுக்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. மிக கொடூரமான தாக்குதலோடு, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்குள் ஹமஸ் ஆயுதக்குழு நுழைந்து துப்பக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசும் தனது ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் துவங்கிவிட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துவிட்டது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில், காசா மற்றும் இஸ்ரேல் இடையேயான தடுப்பு வேலி தகர்க்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதோடு ரத்த காயங்களுடன் பெண் ஒருவரை ஹமஸ் பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹமஸ் தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருக்கிறது.
- பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
- பலர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குளுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து, ஹெராட் பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் பலர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரமான ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கி.மீ (25 மைல்) தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டது" என்றது.
- ஹமஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
- ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.
பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று மிக கொடூரமான தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் துவங்கிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
"இஸ்ரேல் குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது கூட்டு முயற்சியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. இது போர். ஹமாஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். எதிரிகள் இதுவரை சந்திக்காத பதிலடியை சந்திக்க உள்ளனர்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு வங்கி பகுதிகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. தாக்குதலுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக ஹமஸ் அறிவித்து இருந்தது. ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு காசாவில் தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
திடீர் தாக்குதல் மற்றும் போர் காரணமாக சிம்சாட் தோரா விடுமுறை தினத்திலும் சைரன் மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் அப்பகுதி முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
வெடிகுண்டு தாக்குதல் ஒருபுறமும், மற்றொரு புறம் மோட்டார்சைக்கிள் மற்றும் பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் புகுந்த காசா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
- நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
- இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது. இதற்கு வருகிற 10-ந் வரை காலக்கெடு விதித்தது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வருகிற 10-ந் தேதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
- விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது
- விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்தனர். விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
- தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.
- அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷியா - அமெரிக்கா மோதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் ரஷியாவில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷிய அரசு வெளி யேற்றியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த 2 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, எங்கள் தூதரக அதிகாரிகளை ரஷிய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது.
அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
- மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
அமெரிக்காவுக்கு, மெக்சிகோ நாட்டு வழியாக பலர் அகதிகளாக செல்ல முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு மெக்சிகோவில் ஒரு பஸ்சில் வெனிசுலா, ஹைதி ஆகிய நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள், அமெரிக்காவுக்கு சென்றனர். அப்போது ஒக்சாக்கா நெடுஞ்சாலையில் அந்த பஸ் விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் மூன்று சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது. அந்த வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
- ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது.
- சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன.
uவாஷிங்டன்:
அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்திலும் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இரு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் ஜோ பைடன்-ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை தான் சந்திக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் சந்திப்பு குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடைபெற சாத்தியம் உள்ளது" என்றார்.
வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியுபெங்யு கூறும்போது, "சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன. இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட வேண்டும். உறுதியான நடவடிக்கை களுடன் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தையை மேம்படுத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார். ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் ஜோபைடன்-ஜின்பிங் சந்திப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.






