search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் போர்: 200-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
    X

    இஸ்ரேல் போர்: 200-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

    • இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்.
    • ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.

    காசா எல்லையில் உள்ள ஹமஸ், சில பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் இணைந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

    சற்றும் எதிர்பாராத நேரத்தில் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிக ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதுதவிர இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த ஹமஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் என்றும், 908 பேர் படுகாயம் அடைந்தது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1,600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×