என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகி உள்ளார்.
    • இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ரானா இடம்பிடித்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி அவர் தனது 3-வது ஓவரில் 26 ரன்களைக் கொடுத்து, அறிமுக ஆட்டத்தில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இருந்தாலும் பின்னர் கம்பேக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள்

    30 - யுவராஜ் சிங் vs டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் (இங்கிலாந்து), தி ஓவல், 2007

    30 - இஷாந்த் சர்மா vs ஜேம்ஸ் ஃபால்க்னர் (ஆஸ்திரேலியா), மொஹாலி, 2014

    28 - குர்னால் பாண்டியா vs பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), புனே, 2021

    26 - ஹர்ஷித் ராணா vs பில் சால்ட் (இங்கிலாந்து), நாக்பூர், 2025*

    26 - ரவி சாஸ்திரி vs மைக் கேட்டிங் (இங்கிலாந்து), ஜலந்தர், 1981

    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
    • இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இலங்கை -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே களமிறங்கினர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 36 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

    ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 1, கமிந்து மெண்டிஸ் 13, கேப்டன் தனஞ்செயா டி சில்வா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் - ரமேஷ் மெண்டிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தானர்.

    இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குசல் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இந்தியா- இங்கிலாந்து போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3 சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 6000-க்கு கூடுதலான ரன்களும் பந்து வீச்சில் 600 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 6-வது வீரராக உள்ளார்.

    முதல் 5 வீரர்களில் கபில்தேவ் (இந்தியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), டேனியல் வெக்டோரி (நியூசிலாந்து), ஷகீப் அல்ஹசன் (வங்கதேசம்), ஜடேஜா (இந்தியா) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    மேலும் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலிலும் முதல் இந்தியராக ஜடேஜா இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் சானத் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    2-வது இடம் முதல் 5-வது இடங்கள் முறையே ஷகீப் அல்ஹசன் (317), டேனியல் விக்டோரி (305), ஜடேஜா (222), அப்துர் ரசாக் (207) ஆகியோர் உள்ளனர்.

    இங்கிலாந்து - இந்தியா இடையேயான போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்

    ஜடேஜா (42 விக்கெட்டுகள்)

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (40 விக்கெட்டுகள்)

    ஆண்ட்ரூ பிளின்டாப் (37 விக்கெட்டுகள்)

    ஹர்பஜன் சிங் (36 விக்கெட்டுகள்)

    ஸ்ரீநாத், அஸ்வின் (35 விக்கெட்டுகள்)

    • சச்சின் மனைவி மற்றும் மகளுடன் ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை மரியாதை நிமர்த்தமாக குடும்பத்துடன் சந்தித்தார். சச்சின் மற்றும் அவரது மனைவி, மகள் சாரா ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார். பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    சச்சின் டெண்டுல்கர், இந்த மாதம் இறுதியில் நடக்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து தரப்பில் பட்லர், பேத்தேல் அரை சதம் அடித்தனர்.
    • இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட்- பென் டக்கெட் களமிறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி ரனகளை குவித்தார்.

    அவர் 26 பந்தில் 43 எடுத்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் டக்கெட் 32 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹாரி ப்ரூக் டக் அவுட்டில் வெளியேறினார். இதனை தொடர்ந்து 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜோரூட் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து கேப்டன் பட்லர் மற்றும் ஜேக்கப் பேத்தேல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்லர் 52 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 5, பிரைடன் கார்ஸ் 10 என வெளியேறினர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகளும் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஜேக்கப் அரை சதம் கடந்தார். அவர் 51 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

    • டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
    • சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன் நடக்கும் ஒருநாள் தொடர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் முதல் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை. 

    இது தவிர இன்றைய போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகி உள்ளனர்.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • நட்சத்திர வீரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
    • வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக அறிவித்து இருக்கிறார்.

    இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருக்கிறார்.

    முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் இவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    35 வயதான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளின் போது ஸ்டோய்னிஸ் காயத்தில் அவதியுற்றதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    • இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் விளையாடும் போட்டி விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தப் போட்டிகள் ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு அணிகளும் மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

    இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுடன் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி செப்டம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பபயணம் செய்து விளையாடுகிறது. இதில் இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    வங்கதேசத்துடன் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:

    நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).

    போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).

    • டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
    • சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன் நடக்கும் ஒருநாள் தொடர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

    • இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை கொங்கடி திரிஷா பெற்றார்.
    • அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்னும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்னும் எடுத்தார்.

    ஐதராபாத்:

    இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கொங்கடி திரிஷா தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

    மேலும், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    ×