என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மார்கிரம் 136 ரன்கள் விளாசினார்.
- பவுமா 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். ஸ்டார்க் தாக்குப்பிடிதது விளையாடியதால் 2ஆவது நாளில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகவில்லை.
நேற்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு மார்கிரம்- பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது, மேலும் ஒரு ரன் எடுத்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மார்கிரம் நங்கூரமாக நின்ற விளையாடினார். ஸ்டப்ஸ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த பெடிங்காம் மார்கிராமுக்கு சப்போர்ட்டாக விளையாடினார்.
அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்றபோது, மார்கிராம் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக் பெடிங்காம் உடன் வெர்ரைன் ஜோடி சேர்ந்தார்.
இறுதியாக 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய லைகா கோவை கிங்ஸ் 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார். பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
- இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றது.
ஆக்லாந்து:
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பேட்டிங்கில் அசத்திய சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்நிலையில், டி 20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.
சேலம்:
டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.
சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.
இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
- துஷார் ராஹேஜா 28 பந்தில் 74 ரன்கள் விளாசினார்.
- முதல் விக்கெட்டுக்கு திருப்பூர் 6.5 ஓவரில் 73 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேலம் அணிபந்து வீச்சை தெர்வு செய்தது.
அதன்படி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அமித் சாத்விக், துஷார் ராஹேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
6.5 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. அமித் சாத்விக் 28 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் துஷார் ராஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ராஹேஜா ஆட்டமிழக்கும்போது திருப்பூர் அணி 11.3 ஓவரில் 117 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சேலம் அணி சிறப்பாக பந்து வீசி ரன் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தியது. இதனால் ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்ற நிலையில் இருந்து 175 ரன்களை தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.
டேரில் பெராரியோ (10), பிரதோஷ் ரஞ்சன் பால் (25), முகமது அலி (2), உதிரசாமி சசிதேவ் (18), சாய் கிஷோர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:-
அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், டேரில் பெராரியோ, சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், ஏ. இசக்கி முத்து, எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்.
சேலம் ஸ்பார்டன்ஸ்:
எஸ். அபிஷேக், ஹரி நிஷாந்த், ஆர். கவின், பூபதி குமார், நிதிஷ் ராஜகோபால், சன்னி சந்து, எஸ். ஹரிஸ் குமார், எம். முகமது, எம். பொய்யாமொழி, ரஹில் ஷா, எம்.இ. யாஷ் அருண் மொழி.
- டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
- இந்திய வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகிறார்கள்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய ஏ அணியும் இங்கிலாந்து சென்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையில் வீரர்களை பகிர்ந்து கொண்டு பயிற்சி போட்டி நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அகமதாபாத் விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார்.
அதேபோல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரி உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவ விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர்.
- முதல் 8 போட்டிகள் கோவையில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டி சேலத்தில் நடக்கிறது.
- சேலம் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேலம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளது.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:-
அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், டேரில் பெராரியோ, சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், ஏ. இசக்கி முத்து, எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்.
சேலம் ஸ்பார்டன்ஸ்:-
எஸ். அபிஷேக், ஹரி நிஷாந்த், ஆர். கவின், பூபதி குமார், நிதிஷ் ராஜகோபால், சன்னி சந்து, எஸ். ஹரிஸ் குமார், எம். முகமது, எம். பொய்யாமொழி, ரஹில் ஷா, எம்.இ. யாஷ் அருண் மொழி.
- 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் சேர்த்தது.
- ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்சில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (11ஆம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்னில் சுருண்டது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். லபுசேன் (22), கவாஜா (6), கேமரூன் க்ரீன் (0), ஸ்மித் (13), டிராவிட் ஹெட் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
அலேக்ஸ் ஹேரி தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க்கு தாக்குப்பிடித்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 1344 ரன்கள் எடுத்திருந்தது.
ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நாதன் லயன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.
9ஆவது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக 207 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் கடைசி விக்கெட்டாக 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலியா 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.
இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.
மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
- கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்த 138 ரன்னில் சுருண்டது.
உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.






