என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
- முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், "கருண் நாயர் சிறப்பான பங்களிப்பைத் தருவதாக நாங்கள் உணர்கிறோம். 3-வது இடத்தில் களமிறங்கும் வீரரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், நமக்குப் பலனளிக்காத சிறிய விஷயங்கள் சரிசெய்யப்படும்"என்று தெரிவித்தார்.
- கயானா அமேசான் வாரியர்ஸ் 196 ரன்கள் அடித்தது.
- ரங்க்பூர் ரைடர்ஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்- நுருல் ஹசன் தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களம் இறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 48 பந்தில் 67 ரன்கள் விளாசினார். ரஹ்மதுல்லா குர்பாஸ் 38 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய்ஃப் ஹசன் 41 ரன்களும், இஃப்திகார் அகமது 46 ரன்களும் அடித்தும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. வெயின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 160 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்து அணியால் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹபீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து சாம்பியன்ஸ் களம் இறங்கியது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும், 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தொடக்க வீரர் பில் முஸ்டார்ட் 58 ரன்கள் அடித்ார். இயன் பெல் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
இனறு இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.
- கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார்.
- அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் இன்ஜினீயர் "கருண் நாயர் 20 மற்றும் 30 என அற்புதமான ரன்களை அடித்துள்ளார். அழகான டிரைவ் போன்ற ஷாட்களால், அழகான 30 ரன்களை பெற்றுள்ளார். ஆனால், 3ஆவது இடத்தில் களம் இறங்குபவரிடம் அழகான 30 ரன்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை" என்றார்.
- கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- பொல்லார்டு 13,854 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்டலர் 77 ரன்கள் விளாசினார். 31 ரன்கள் எடுத்திருக்கும்போது 13 ஆயிரம் ரன்னைத் தொட்டர். இதன்மூலம் டி20-யில் 13 ஆயிரம் ரன்னைக் கடந்த 7ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பொல்லார்டு 13,854 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்களுடன் 3ஆவது இடத்திலும், சோயிப் மாலிக் 13,571 ரன்களுடன் 4ஆவது இடத்திலும், விராட் கோலி 13,543 ரன்களுடன் 5ஆவது இடத்திலும், வார்னர் 13,395 ரன்களுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஜாஸ் பட்லர் டி20-யில் மொத்தமாக 13,046 ரன்கள் அடித்துள்ளார்.
- மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கிடையே, இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். ஜோ ரூட் தற்போது 13,259 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் 30 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டையும், 31 ரன்களை எடுத்தால் ஜேக் காலீசையும், 120 ரன்கள் எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் சாதனையையும் முறியடிப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம்.
- அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார்.
அதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில்:-
ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும்.
அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் கிளவுஸ் அவரது விரல்களை பாதுகாக்கும். ஆனால் கிளவுஸ் இன்றி அவர் மைதானத்தில் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அது அவருடைய காயத்தை மேலும் மோசப்படுத்தும்.
எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம். அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.
என்று ரவி சாஸ்திரி கூறினார்.
- கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன்.
- வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில்:-
இங்கிலாந்து மண்ணில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வெளிப்படையான ரகசியம் தான். லார்ட்ஸ் மைதானத்திலும் இந்திய அணி தடுமாற அதுவே காரணம். அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று இந்திய அணி செய்யும் மிகப்பெரிய தவறு யாதெனில் இங்கிலாந்து மைதானங்களில் முறையான பவுலர்களுடன் விளையாட வேண்டும்.
கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை. இவர்களில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்க அவர் நிச்சயம் ஆலோசித்தாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
என ரகானே கூறினார்.
- முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 120 ரன்கள் எடுத்தது.
- 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி டிம் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சீஃபர்ட்- டெவோன் கான்வே களமிறங்கினர். இதில் சீஃபர்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து கான்வே - ரச்சின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
- லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
வெல்லிங்டன்:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
- வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவரே- பிரையன் பென்னட் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பிரையன் பென்னட் 20 பந்தில் 21 எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- பிரதிகா ராவல் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சவுத்தம்டான்:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.
அதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது.
பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் ஆட்டமிழந்து சென்றபோது அவரது விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் சோபி எக்லெஸ்டோனின் தோளில் இடித்தார். இது ஐ.சி.சி. நடத்தை விதிகள் லெவல் 1-ஐ மீறிய குற்றமாகும். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.






