என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.
    • இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 311 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கவுள்ளது. 

    • இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
    • ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    இங்கிலாந்து அணி 186 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 3 விக்கெட் இருக்கிறது.

    ஜோ ரூட் நேற்று 10 சாதனைகளை முறியடித்தார். அதன் விவரம் வருமாறு:-

    1. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ராகுல் டிராவிட் (13, 288 ரன்), காலிஸ் (13, 289), ரிக்கி பாண்டிங் (13,378) ஆகி யோரை ஜோ ரூட் முந்தினார். அவர் 13,409 ரன்க ளுடன் தெண்டுல்கருக்கு (15,921 ரன்) அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.2

    2. 157-வது டெஸ்டி விளையாட்டில் அவருக்கு 38-வது சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் இலங் கையை சேர்ந்த சங்ககராவை சமன் செய்தார். டெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), பாண்டிங் (41) ஆகியோருக்கு அடுத்தபடி யாக உள்ளார்.

    3. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் (12) எடுத்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். அவர் ஸ்டீவ் சுமித்தை (11 செஞ்சுரி) முந்தினார்.

    4. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஜோ ரூட் 9-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். பிராட்மேன் தான் ஒரு நாட்டுக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரராக இருந்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 8 சதம் அடித்து இருந்தார்.

    5. மான்செஸ்ட் மைதானத்தில் டெஸ்டில் 1000 ரன் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    6. 2-க்கு மேற்பட்ட மைதானத்தில் 1000 ரன்னை எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் ஆவார். கிரகாம் கூச், அலிஸ்டயர் குக் ஆகியோருடன் இணைந்தார். ஜோ ரூட் லார்ட்ஸ் மைதானத்தில் 2166 ரன்னும், மான்செஸ்ட் மைதானத்தில் 1128 ரன்னும் எடுத்துள்ளார்.

    7. 50 ரன்னுக்கு மேல் அவர் 104-வது முறையாக தொட்டார். காலிஸ், பாண்டிங்கை (இருவரும் தலா 103 தடவை) முந்தினார். டெண்டுல்கர் 119 முறையுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    8. ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜேக் ஹோப்ஸ் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். ஹோபஸ் ஆஸ்திரேலியா விற்கு எதிராக 12 சதம் அடித்து இருந்தார்.

    9. ஜடேஜா பந்தில் ஜோ ரூட் 588 ரன்களை எடுத்து உள்ளார். இதன் மூலம் அவர் ஸ்டீவ் வாக்கை முந்தினார். ஸ்டீவ் வாக் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 577 ரன்களை எடுத்து இருந்தார்.

    10. ஜோ ரூட் டெஸ்டில் சொந்த மண்ணில் 7195 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயவர்த்தனேவை முந்தினார். இலங்கையை சேர்ந்த அவர் சொந்த நாட்டில் 7167 ரன் எடுத்து உள்ளார். பாண்டிங் (ஆஸ்திரேலியாவில் 7578 ரன்), டெண்டுல்கர் (இந்தியாவில் 7216 ரன்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் சேஸிங் செய்தது

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டிம் டுவிட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். அத்துடன் ஆஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.

    37 பந்தில் சதம் விளாசிய டிம் டேவிட், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணி வீரர்களில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் விளாசியுள்ளனர்.

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 198 ரன்கள் குவித்தது.
    • தென்ஆப்பிரிக்கா அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

    இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ரன்கள் விளாசினார். சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2ஆவது இடத்தில் உள்ளது.

    இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    • இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
    • ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒல்லி போப் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தது. அரை சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் ஆனார். சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
    • சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள்தான் தேவை.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 38ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியில் சங்கக்கரா சாதனையுடன் இணைந்துள்ளார்.

    மேலும், 120 ரன்களை தொட்டபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13379 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக 13378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் 2ஆவது இடத்தில் இருந்தார். அவரது சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடனும் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள் தேவை.

    இந்த நிலையில் ஜோ ரூட்டால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஜோ ரூட்டின் வயது என்ன? 35 வயதுதான் ஆகிறது. பல வருடங்களாக அவரது ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அது அதிகரித்துக் கொண்டிருந்தது. அவரால் சச்சின் அடித்த ரன்னை விரட்ட முடியுமா? பார்ப்போம். அவர் அதைச் செய்யக்கூடும்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    ஜோ ரூட்டுக்கு தற்போது 35 வயதாகிறது. குறைந்த பட்சம் 40 வயது வரை விளையாட வாய்ப்புள்ளது. இதே ஃபார்மில் இருந்தால் 2542 ரன்கள் சாத்தியமே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • 38 சதங்கள் அடித்து சங்கக்கரா சாதனையை சமன் செய்துள்ளார்.
    • டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிராவ்லி (84), பென் டக்கட் (94), ஆலி போப் (71) அரைசதங்கள் அடித்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் சதம் விளாசினார்.

    இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக இது அவருடைய 12ஆவது சதம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 சதங்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியில் சங்கக்கரா உடன் 3ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 51 சதங்கள் அடித்துள்ளார். கல்லீஸ் 45 சதங்கள் அடித்துள்ளனர்.

    மேலும், 120 ரன்கள் எடுத்திருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருந்த ரிக்கி பாண்டிங் (13,378) சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 38ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டக்கட் மற்றும் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 5 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. கிராவ்லி 84 ரன்களும், டக்கட் 94 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்தது. போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆலி போப் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்னில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே 37 சதங்கள் அடித்துள்ளார். இது அவரின் 38ஆவது சதமாகும். இந்தத் தொடரில் இது அவரின் 2ஆவது சதமாகும்.

    • அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார்.
    • நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அதிவேகமாக யார்க்கராக வீசிய பந்தை ரிஷப் பண்ட் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் லேசாக உரசியபடி நேராக அவரது வலது காலை பலமாக தாக்கியது. ஷூவை கழற்றி பார்த்த போது, பந்து தாக்கிய இடத்தில் ரத்தக்கசிவுடன் வீங்கி இருந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் அவரது கால்பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு அவசியம். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

    அதே சமயம் மான்செஸ்டர் டெஸ்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு 2-வது நாளில் பேட்டிங் செய்த பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவைப்பட்டால் 2-வது இன்னிங்சிலும் பேட் செய்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விக்கெட் கீப்பிங் பணியை அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் கவனிக்கிறார்.

    இந்நிலையில் என்ன ஆனாலும் அணிக்காக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறியதாவது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்க்கு முன் ரிஷப் பண்டிடம் உன் கைவிரல் எப்படி இருக்கிறது? உடைந்து விட்டதுதானே என்றேன். அதற்கு விரல்கள் உடைந்தாலும், நான் விளையாடுவேன் என்றார்.

    அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார். நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    • நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார்.
    • ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 358 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியின் முதல் நாளில் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் வலது கால் விரலில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவர் பாதியில் வெளியேறினார். நேற்றைய 2-ம் ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூர் விக்கெட் விழுந்ததும் கால் காயத்துடன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

    நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார். இதில் அரைசதம் அடித்தார். பின்னர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் காயத்துடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டை டெண்டுல்கர் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

    இதுதொடர்பாக டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார். அவரது 50 ரன்கள், உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்து வதற்கு தேவையான மன உறுதியை நினைவூட்டுகிறது. இந்த துணிச்சலான முயற்சி நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்போது, உங்களுடைய நாட்டுக்காக எந்தளவில் விளையாடினாலும் இது போன்ற தைரியம் மற்றும் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும். காயத்தையும் தாண்டி பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்டுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

    அதேபோல் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறும் போது, ஆண்டிகுவாவில் அனில் கும்ப்ளே தாடை உடைந்ததைத் தாண்டி விளையாட வந்ததைப் பார்த்துள்ளேன். அது போன்ற நிகழ்வை இனிமேல் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் ரிஷப்பின் தைரியம் மூலம் அதை பார்த்தேன் என்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
    • 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
    • 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.

    காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.

    தற்போது நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் தேவைபட்டால் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெல் கவனித்து வருகிறார்.

    இதற்கிடையே 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்து அவருக்கு தேர்வுக் குழு அழைப்பு விடுத்தது.

    ஆனால் தான் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படுவதாகவும், இதனால் தன்னால் 5-வது டெஸ்டில் ஆட முடியாது என்றும் இஷான் கிஷன் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து வேறு வீரர்களை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனை அணியில் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×