என் மலர்
விளையாட்டு
- கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
- இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
- பரோடா மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
- 1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளில் தத்தாஜி விளையாடியுள்ளார்
இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவர், தத்தாஜிராவ் கெய்க்வாட் (Dattajirao Gaekwad).
இன்று தத்தாஜிராவ் கெய்க்வாட், தனது 95-வது வயதில், முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளினால் காலமானார்.
பரோடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தத்தாஜிராவ் கெய்க்வாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வலது கர பேட்ஸ்மேனான தத்தாஜி, 1952ல் இங்கிலாந்தின் லீட்ஸ் (Leeds) மைதானத்தில், விஜய் ஹசாரே (Vijay Hazare) தலைமையிலான அணியில், சர்வதேச அளவிலான தனது முதல் கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் தொடக்க வீரராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர், பின்னர் "மிடில் ஆர்டர்" விளையாட்டில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.
1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளை தத்தாஜி விளையாடியுள்ளார்.
1959ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார்.
1961ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இறுதியாக இந்தியாவிற்காக விளையாடினார்.
பரோடா சார்பில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் 1947லிருந்து 1961 வரை விளையாடியவர் தத்தாஜி. இப்போட்டிகளில், 3139 ரன்களை குவித்து, 14 சதங்களும் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தத்தாஜி கெய்க்வாட்டின் மகன் அன்சுமன் கெய்க்வாட் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். அன்சுமன், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மேட்சுகளில் விளையாடியவர் என்பதும் 90களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தத்தாஜி கெய்க்வாட்டின் மரணத்தை தொடர்ந்து, "93 வருடம் 349 நாட்கள்" வயதில் வாழும், செங்கல்பட் கோபிநாத், இந்தியாவின் அதிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எனும் அந்தஸ்தை பெறுகிறார்.
- பேட்டிங் தரவரிசையில் ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
இதன் முதல் 3 இடங்கள் முறையே இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (807 புள்ளி), இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி), ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (717 புள்ளி) உள்ளனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் (677 புள்ளி) 2-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (675 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை.
ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் ( 452 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (360 புள்ளி) 2-ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (358 புள்ளி) 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் (347 புள்ளி) 4-ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (345 புள்ளி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- முதல் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெர்த்:
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஷ் - வார்னர் களமிறங்கினர். மார்ஷ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 16, ஜோஸ் இங்கிலிஸ் 1, மேக்ஸ்வெல் 12 என வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து டிம் டேவிட் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றிக்காக போராடிய டிம் டேவிட் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.
- ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார்.
பெர்த்:
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கினர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 79 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. சார்லஸ் 4, மேயர்ஸ் 11, பூரன் 1, சேஸ் 37, பவல் 21 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். குறிப்பாக ஆடம் ஜாம்பா ஓவரை விளாசி தள்ளினர்.
குறிப்பாக ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது.
- 2021-ம் ஆண்டு பும்ரா- சஞ்சனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை.
இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.

அந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.. ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு" என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
2014-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது.
- சிஎஸ்கே அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் உறுதியாக இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அது என்னவென்றால், அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
- முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.
கொல்கத்தா:
10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பல்தான் (81 புள்ளி), தபாங் டெல்லி (69 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (65 புள்ளி) ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, உ.பி.யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் வாய்ப்பை இழந்தன.
பிளே ஆப் சுற்றில் நுழைய எஞ்சிய 2 இடத்துக்கு பாட்னா பைரேட்ஸ் (63 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (60 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (54 புள்ளி) ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 119-வது 'லீக்' ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 வெற்றி, 7 தோல்வி, 3 டையுடன் இருக்கும் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி ஏற்கனவே 50-28 என்று கணக்கில் அந்த அணியை வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் பதிலடி கொடுத்து 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.
- இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
- கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
மேற்கு ஜாவா:
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.
அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.
அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.
இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.
- இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர்.
- ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள்.
பெனோனி:
தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஜூனியர் உலக் கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இறுதி சுற்றுக்கு முன்பு வரை எல்லா ஆட்டங்களிலும் பிரமாதமாக விளையாடி வெற்றிகளை குவித்த இந்தியா கிளைமாக்சில் கோட்டை விட்டு விட்டது. என்றாலும் கேப்டன் உதய் சாஹரன் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 397 ரன்), முஷீர் கான் (2 சதம் உள்பட 360 ரன்) சச்சின் தாஸ் (303 ரன்), சுழற்பந்து வீச்சாளர் சாமி பாண்டே (18 விக்கெட்) உள்ளிட்டோரின் செயல்பாடு பாராட்டும்படி இருந்தது.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய ஜூனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் அளித்த பேட்டியில், 'இறுதி ஆட்டத்தில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கி இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அசத்தியதால் வெற்றியாளராக இருக்கிறது. டாஸ் ஒரு பிரச்சினை இல்லை. ஏனெனில் ஆடுகளத்தன்மை நன்றாகவே இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் அதிகமாக போராடி இருக்கலாம்' என்றார்.
மேலும் கனித்கர் கூறுகையில், 'கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர். கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய முதிர்ச்சியமான ஆட்டம், இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும். ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள். நிச்சயம் இரு வீரருக்காவது இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் தாயகம் திரும்பியதும் அதற்குரிய மிகச்சிறந்த போட்டி காத்திருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி தொடர்ந்து முன்னெடுத்து செல்வது?, உயரிய கிரிக்கெட் போட்டிக்கு தங்களை எப்படி தயார்படுத்துவது? என்பதை இந்த தொடரில் இருந்து கற்றுள்ளனர்' என்றார்.
விராட் கோலி, யுவராஜ்சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி தான் இந்திய அணிக்குள் கால்பதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
- சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள்.
- கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நைரோபி:
கென்யாவை சேர்ந்த பிரபல நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ (அமெரிக்கா) மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) 2 மணி 35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2022-ம் ஆண்டு நடந்த வலென்சியா (ஸ்பெயின்) மற்றும் கடந்த ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதித்த 24 வயதான கெல்வின் வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் அவர் 2 மணி நேரத்துக்குள் பந்தய இலக்கை கடக்கும் நோக்குடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சியைமுடித்து மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் தனது பயிற்சியாளர் கெர்வாஸ் ஹகிசிமானா (ருவாண்டா) மற்றும் ஒரு இளம் பெண்ணுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கால்வாயில் இறங்கி பிறகு அருகில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள். படுகாயம் அடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அந்த நாட்டு அதிபர் வில்லியம் ருடோ, உலக தடகள சங்க தலைவர் செபாஸ்டியன் கோ உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
- விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.
ராஜ்கோட்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற நிலை இருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
2-வது டெஸ்ட் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த போட்டிக்கு 2 வாரங்கள் இருந்ததால் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்ட் முடிந்தவுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு சென்றது.
அபுதாபியில் 10 தினங்களில் ஓய்வு எடுத்த பிறகு இங்கிலாந்து அணி நேற்று மாலை இந்தியா திரும்பியது. அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ராஜ்கோட் வந்தனர்.
அப்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீரர் ரேகான் அகமது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.
ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் விசாரிக்கப்பட்டார். நிலமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு 2 நாள் விசா வழங்கினார்கள்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அடுத்த 2 தினங்களுக்குள் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேகான் அகமது மற்ற வீரர்களுடன் நுழைய அனுமதிக்கப்பட்டார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த சோயிப் பஷீர் விசா பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் அவரால் முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது.






