search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russell"

    • ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார்.

    பெர்த்:

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கினர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 79 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. சார்லஸ் 4, மேயர்ஸ் 11, பூரன் 1, சேஸ் 37, பவல் 21 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். குறிப்பாக ஆடம் ஜாம்பா ஓவரை விளாசி தள்ளினர்.

    குறிப்பாக ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது.

    • கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டி செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடி காரணமாக அந்த அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் கிடைத்து விட்டார் என ரசல் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததால் பவுலர்கள் கிரிப் செய்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பவுலர்கள் லென்த்தை தவறவிட்டதால் எங்களால் சிக்சர்கள் அடிக்க முடிந்தது. அதோடு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்றால் கூட அடிக்க முடியும் என்று உறுதியாக இருந்தோம். நான் அடித்த சில சிக்ஸர்கள் இங்கு மிகவும் எளிதாகவே இருந்தது. அதனால் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறி விட்டேன். இருந்தாலும் இந்த வருடம் எங்களுக்கு புதிய பினிஷராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார். நான் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட போது பந்தை ஒருவேளை தவறவிட்டால் ஒரு ரன் ஓடி வாருங்கள் என்று ரிங்கு சிங் என்னிடம் சொன்னார். நானும் பந்தை அடிக்க நினைத்து தவறவிட்டதால் ஓடிவந்து ரன் அவுட் ஆகி விட்டேன்.

    இருந்தாலும் நிச்சயம் கடைசி பந்தில் ரிங்கு சிங் போட்டியை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இந்த சீசன் முழுவதுமே அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த சீசனில் அவர் எங்கள் அணியின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிக்சர் மழை பொழிந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வார்னர், பேர்ஸ்டோவ் ரன்கள் குவித்து வரும் வரும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்.

    அவர் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ளார். நான்கிலும் பேட்டிங் செய்ய களம் இறங்கி 77 பந்துகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் 22 சிக்சர்கள் அடங்கும். 12 பவுண்டரிகள் அடங்கும். இரண்டு முறை நாட்அவுட். அவரது சராசரி 103.5 ஆகும். ஸ்டிரைக் ரேட் 268.83 ஆகும். சிக்சர் மட்டும் பவுண்டரி மூலமாகவே 180 ரன்கள் குவித்துள்ளார்.

    அவருக்கு அடித்தபடியாக அதே அணியின் நிதிஷ் ராணா 12 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 11 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல், பேர்ஸ்டோவ், வார்னர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர்.

    ஐதராபாத் அணிக்கெதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 44 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியும் அடித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் தலா இரண்டு சிக்சர், பண்டரிகள் விளாசினார். 19 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் கொல்கத்தா வெற்றி பெற்றது.



    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். இதனால் கேகேஆர் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    டெல்லிக்கு எதிராக 9.1 ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களம் இறங்கினார். 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 185 ரன்னாக உயர முக்கிய காரணமாக இருந்தார்.



    ஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 ரன்னை சேஸிங் செய்தது. கேகேஆர் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரில் மூன்று சிக்சர்களும், 19-வது ஓவரில் நான்கு சிக்சர்களுடன் விளாசினார். 13 பந்தில் 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து கேகேஆர் வெற்றி பெற்றது.
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன அந்த்ரே ரஸல் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் நாள் அணியில் சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார். #WI #Russell
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கப்பின் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 24 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.

    இந்த போட்டியின்போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகினார். அதன்பின் தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவில்லை. 2017-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கான விதிமுறையை மீறியதாக தடைபெற்றார். இந்நிலையில் தற்போது மூன்ற ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்தள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் இலங்கையை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியில்தான் ரஸல் இடம்பிடித்துள்ளார்.
    ×