என் மலர்
விளையாட்டு
- சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
- 'நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன்'
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டு வீரர் டைலர் மிஸ்லாஸுக் Tyler Mislawchuk நேற்று நடந்த ட்ரைலதான் போட்டியின் பின் 10 முறை வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ட்ரைலதான் என்பது நீச்சல், ஓட்டம், மற்றும் சைக்கிளிங் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டியாகும். அந்த வகையில் நேற்று நடந்த டிராலதான் போட்டியில் சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
முன்னதாக சியன் நதி மாசுபாடு காரணமாக ட்ரைலதான் போட்டிகள் தாமதமாக நடந்தது கவனிக்கத்தக்கது. மேலும் போட்டி தொடங்கும்போது, காற்றின் வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்தது. எனவே மாசுபாடு மற்றும் வெப்பநிலை காரணமாக டைலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய கனேடிய வீரர் டைலர், நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன், அங்கு குளிர்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 50 டிகிரி வரை குறையும். ஆனால் நான் இப்போது சம்மர் ஒலிம்பிக்சில் விளையாட வந்துள்ளேன் என்று தனக்கு 27 டிகிரி செல்ஸியசே அதிகம் என்ற அர்த்தத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் 1:44:25 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து டைலர் 9 வது இடம் பிடித்துள்ளார்.பிரிட்டன் வீரர் அலெக்ஸ் யீ [ Alex Yee] 1:43:33 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றுள்ளார்.
- இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
- இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயான் மோர்கன், "என் பார்வையில், இந்த நேரத்தில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரிடம் நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மெக்கல்லம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
- நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த இந்தியாவின் மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பங்கேற்றார். அதிலும், வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இதையடுத்து, துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் களமிறங்கிய மனு பாக்கர், தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று பிற்பகலில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வென்று ஒரே ஒலிம்பிக்கில் 3-ஆவது பதக்கத்தை மனு பாக்கர் உறுதி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மனு பாக்கரை சுமார் 40 பிராண்டுகள் ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளது எனவும் அவரது பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை இருந்த அவரது கட்டணம் தற்போது ரூ.1.5 கோடி வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
- சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
- இவர்கள் எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.
போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.
இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
அதில், "ஒவ்வொரு வீரருக்கும் பாரபட்சமின்றி விளையாட்டைப் பயிற்சி செய்ய உரிமை உண்டு. கெலிஃப் மற்றும் யூ-டிங் இருவரும் தங்களை பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்கி தான் குத்துச்சண்டை போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அவர்கள் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்த 2 வீராங்கனைகள் பற்றிய தவறான தகவல்களை நாங்கள் பார்த்து வருகிறோம். பெண்கள் பிரிவில் இந்த 2 வீராங்கனைகளும் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். .
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த 2 குத்துச்சண்டை வீராங்கனைகளும் தற்போது எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
- இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்கினர். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.
போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், 7-வது வீரராக களமிறங்கி துனித் வெல்லலகே 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 67 ரன்கள் அடித்தார். 29-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை துனித் வெல்லலகே எதிர்கொண்டார். அப்போது, வாஷிங்டன் சுந்தர் எல்பிடபிள்யூ அவுட் கேட்க நடுவர் இல்லை என்று கூறினார். இதனால் டிஆர்எஸ் எடுக்க இந்திய அணி முடிவு செய்தது.
அப்போது, வாஷிங்டன், ரோகித் சர்மாவை பார்க்க, அதற்கு அவர் கேலியாக, "என்ன? நீ சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறாய்? நான் உனக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா?" என்று கூறுகிறார்.
ரோகித் சர்மா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரகிறது.
- ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] கலந்துகொண்டார்
- தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
தோல்வியின் தாக்கமும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இந்நிலையில் ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் கலந்துகொண்ட 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] 200 மீட்டர் பெண்கள் ஒற்றயர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிக்கு தகுதி பெறும் சுற்றில் கனேடிய வீராங்கனையுடன் விளையாடினார்.

2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் 200 மீட்டரைக் கடந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய தமரா, திடீரென மயங்கி விழுந்தது அங்குள்ளவர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது. துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழு, தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றது.


தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தமரா, சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக ஒலிம்பிக் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னோடு போட்டியிட்ட கனேடிய வீராங்கனை சம்மர் மெக்லண்டோஷ் -ஐ Summer McIntosh விட 4.3 நொடிகள் தாமதமாக தமரா இலக்கை அடைந்ததால் காலிறுதிக்கு அவர் தகுதி பெறவில்லை.

- நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி), மாலை 3.35 மணி, விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), மாலை 3.50 மணி.
- நிஷாந்த் தேவ் (இந்தியா)- மார்கோ வெர்டே (மெக்சிகோ), (ஆண்கள் 71 கிலோ எடைபிரிவு கால்இறுதி ஆட்டம்), நள்ளிரவு 12.18 மணி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:
துப்பாக்கி சுடுதல்:-
ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று), பகல் 12 30 மணி, மனு பாக்கர் (பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டி), பகல் 1 மணி.
வில்வித்தை:-
தீபிகா குமாரி (இந்தியா)- மிச்செல் கிரோப்பன் (ஜெர்மனி), பகல் 1.52 மணி, பஜன் கவுர் (இந்தியா)- தியானந்தா கோருனிசா (இந்தோனேசியா), (பெண்கள் தனிநபர் 3-வது சுற்று), பிற்பகல் 2.05 மணி.
பாய்மரப்படகு:-
நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி), மாலை 3.35 மணி, விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), மாலை 3.50 மணி.
குத்துச்சண்டை:-
நிஷாந்த் தேவ் (இந்தியா)- மார்கோ வெர்டே (மெக்சிகோ), (ஆண்கள் 71 கிலோ எடைபிரிவு கால்இறுதி ஆட்டம்), நள்ளிரவு 12.18 மணி.
- துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர்.
- மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீன தைபே வீரர் சோ டைனுடன் மோதினார்.
போட்டியின் துவக்கத்தில் நன்றாக விளையாடி சீன வீரர் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன் பிறகு சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் 21-15 மற்றும் 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில், மேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்ஷ்யா சென் பெற்றுள்ளார்.
- திருப்பூர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல்.
- அதிரடியாக விளையாடிய அஸ்வின் அரை சதம் விளாசினார்.
சென்னை:
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.
அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மான் பப்னா, கனேஷ் மற்றும் அமித் சாத்விக் சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணி 100 ரன்களை கடக்க உதவினர்.
19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக விமல் குமார் - அஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். தொடங்கம் முதலே இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் எடுத்த நிலையில் விமல் குமார் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் அரை சதம் விளாசினார்.
இறுதியில் 10.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி வருகிற 4-ந் தேதி நடக்கவுள்ளது.
- ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
- ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 56 ரன்களும், துனித் வெலாலகே 67 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித் சர்மா 47 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யரும் நடையை கட்டினார். அவர் 23 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கே.எல். ராகுல் 31 ரன்னிலும், அக்சர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அக்சர் பட்டேல் அவுட்டாகும்போது இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.
ஷிவம் டுபே ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் குல்தீப் யாதவ் (2) ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 211 ரன்கள் எடுத்திருந்தது.
20 ரன் தேவை என்ற நிலையில் ஷிவம் டுபே உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். முகமது சிராஜை வைத்துக் கொண்டு ஷிவம் டுபே அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 5 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்தார். இதனால் போட்டி டை ஆனது. அடுத்த பந்தில் ஷிவம் டுபே எல்.பி.டபிள்யூ ஆனார். ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழக்க போட்டி டையில் முடிந்தது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் 108 ரன்னில் சுருண்டது.
சென்னை:
டிஎன்பிஎல் தொடரின் குவலிபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மான் பாப்னா அதிகமாக 26 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், சுபோத் பாதி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது.
- துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மனு பாக்கர்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று மதியம் நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது. மாலையில் நடந்த வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இதற்கிடையே, இரவில் நடந்த அரையிறுதியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா-அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம்-வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் தென் கொரிய ஜோடி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி அடைந்த அங்கிதா-தீரஜ் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்க ஜோடியுடன் விளையாடியது.
இதில் அமெரிக்க ஜோடியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய ஜோடி.






