என் மலர்
விளையாட்டு
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 70 ரன்னும், டேரில் மிட்செல் 57 ரன்னும், கேன் வில்லியம்சன் 55 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நியூசிலாந்து 35 ரன்கள் முன்னிலை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 2 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால் ஜோடி 147 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
கருணரத்னே 83 ரன்னிலும், சண்டிமால் 61 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 13 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதினார்.
இதில் பன்சோத் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதல் இன்னிங்சில் 376 ரன்களை குவித்து ஆல்அவுட் ஆனது.
- இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா (5) துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா அணியில் சுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது, நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
- வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ் தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்திருந்தது. ஷன்டோ 15 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் மேலும் 4 ரன்கள் அடித்து 8 ரன்னில் ஆட்டிழந்தார். அதேவேளையில் ஷன்டோ 20 ரன்கள் எடுத்த நிழைலயில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் 40 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடனேயே, வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.
இதனால் வங்கதேசம் 2-வது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெஹிது ஹசன் மிராஸ் மற்றும் டஸ்கின் அகமது களத்தில் இருந்தனர். இதில், டிஸ்கின் 11 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். ஹசன் மிராஸ் உடன் நஹிட் ராணா ஜோடி சேர்ந்தார். நஹிட் ராணா 11 ரன்களில் அவுட்டானார்.
இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ் தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- பும்ரா 3 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.
- அர்ஷ் தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ் தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்திருந்தது. ஷன்டோ 15 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் மேலும் 4 ரன்கள் அடித்து 8 ரன்னில் ஆட்டிழந்தார். அதேவேளையில் ஷன்டோ 20 ரன்கள் எடுத்த நிழைலயில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் 40 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடனேயே, வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.

இதனால் வங்கதேசம் 2-வது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெஹிது ஹசன் மிராஸ் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், அர்ஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- அஸ்வின் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- வங்கதேச பந்து வீச்சாளர் ஹசன் முகமது 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
நேற்று காலை மேகமூட்டமாக காணப்பட்டதால் முதல் செசனில் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இதனால் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை விரைவாக சாய்த்தார். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருக்கும்போது ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 56 ரன்னில் வெளியேறினார். கே.எல். ராகுல் 16 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் சதம் அடிக்க ஜடேஜா சதத்தை நெருங்கினார். இந்த ஜோடியை வங்கதேச பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஹசன் முகமது
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய 86 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். ஜடேஜா- அஸ்வின் ஜோடி 199 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த அர்ஷ் தீப் 17 ரன்கள் எடுதது ஆட்டமிழந்தார். அஸ்வின் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார். பும்ரா கடைசி விக்கெட்டாக 7 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று 11.1 ஒவரில் 37 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பந்து வீச்சாளர் ஹசன் முகமது 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் விளாசினார்.
- அந்த போட்டியில் பிளின்டாப் -யுவாரஜ் சிங் இடையே மோதல் ஏற்பட்டது.
2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் தொடர்ந்து அடித்தார். அந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஏதோ கூற மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கோபமடைந்த யுவராஜ் சிங்கை டோனி சமாதானப்படுத்தினார். இதற்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து யுவராஜ் சிங் பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் டோனி என்னிடம் 'நீங்கள் எப்பொழுது எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கும்" என்று கூறினார்.
பிளின்டாப் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து விட்டு கடைசி பந்தில் நான் ஒரு ரன் எடுத்தேன். அப்பொழுது பிளின்டாப் அது ஒரு அதிர்ஷ்டமான ஷாட் என கூறினார். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கழுத்தை அறுப்பேன் என கூறினேன். கோபத்தில் இருந்த நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன். அதன்படி 6 சிக்சர்களை அடித்தேன்.
ஆனால் இந்த பிரச்சினையை எல்லாம் பிளின்டாப் மைதானத்திலேயே விட்டு விட்டார். போட்டி முடிந்ததும் அவர் எனக்கு இதையெல்லாம் கூறி கை குலுக்கினார். இதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.
- டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.
பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 'டாஸ்' ஜெயிக்கும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆனால் நேற்றைய டெஸ்டில் வங்காளதேச அணி டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கு 'டாஸ்' ஜெயித்து ஒரு அணி முதலில் பந்து வீசுவது 42 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1982-ம் ஆண்டு இந்தியா- இங்கிலாந்து டெஸ்டில் இவ்வாறு நடந்தது. அந்த போட்டி டிராவில் முடிந்தது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 339 ரன்கள் எடுத்தது.
- அஸ்வின் 102 ரன்களிலும் ஜடேஜா 86 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வினுக்கு சென்னை மைதானத்தில் இது 2-வது சதமாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு 106 ரன்கள் எடுத்திருந்தார். இதையும் சேர்த்து இங்கு தனது 5-வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.
இதன் மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சதத்துடன், பலமுறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்த 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கேர்பீல்டு சோபர்ஸ் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (சென்னை மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ன்ஸ் (ஆக்லாந்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இங்கிலாந்தின் இயான் போத்தம் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம், 3 முறை 5 விக்கெட்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த அஸ்வின் பின்னர் அளித்த பேட்டியில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது.
இன்றைய டெஸ்டுக்குரிய ஆடுகளம், பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று உள்ளது. கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பந்து வீச்சாளர்கள் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் போது அடித்து ஆடலாம். ஒரு கட்டத்தில் வியர்த்து கொட்டி களைத்து போன போது அதை கவனித்த ஜடேஜா அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். இனி 2 ரன்களை 3 ரன்களாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவரது யோசனை மீண்டு வர உதவிகரமாக இருந்தது' என்றார்.
மேலும் அவர், 'புதிய பந்து ஓரளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளைய தினம் (இன்று) புத்துணர்ச்சியோடு போட்டியை தொடங்குவோம். ஆடுகளத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. அது சீக்கிரம் காய்ந்து விடும் என்று நம்புகிறேன்' என்றார்.
- ஜெய்ஸ்வால் 10 இன்னிங்சில 755 ரன்கள் குவித்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடிக்கவும், அஷ்வின் (102*)- ஜடேஜா (86*) ஜோடி அபாரமாக விளையாடவும் இந்தியா சரிவில் இருந்து மீண்டு முதல் நாள் ஆட்ட முடிவில் 80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ளது.
ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 755 ரன்கள் விளாசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத் 743 ரன்கள் அடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் டேவ் ஹக்டன் 687 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்சன் 680 ரன்களும் அடித்துள்ளனர்.
- துலீப் கோப்பை லீக் போட்டி ஆந்திராவின் அனந்தபூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர்.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா பி சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்ததது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
- கமிந்து மெண்டிஸ் சதமும், குசால் மெண்டிஸ் அரை சதமும் கடந்தனர்.
கொழும்பு:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவன் கான்வே 17 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஆன டாம் லதாம் அரை சதம் கடந்து 70 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 39 ரன் எடுத்தார்.
இதனையடுத்து கை கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் டான் பிளண்டெல் சிறப்பாக விளையாடி, 2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்னும், டாம் பிளண்டெல் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து இன்னும் 50 ரன்கள் பின்தங்கி உள்ளது.






