என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உங்கள் தொலைநோக்கு தலைமை ஆக்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
    • உலகளவில் ஆக்கியை வலுப்படுத்துவதில் ஒன்றாக வேலை செய்ய எதிர்நோக்குகிறோம்.

    சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் 49-வது நிர்வாக குழு கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. மக்காவுவை சேர்ந்த தய்யூப் இக்ராம் சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் ஜே. மனோகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    அடுத்த 8 ஆண்டுகளுக்கு சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆக்கி இந்தியா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. உங்கள் தொலைநோக்கு தலைமை ஆக்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது, மேலும் உங்கள் தொடர் வழிகாட்டுதலின் கீழ் இந்த விளையாட்டு மேலும் செழிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் முழு ஆதரவையும் உறுதி அளிக்கிறோம். உலகளவில் ஆக்கியை வலுப்படுத்துவதில் ஒன்றாக வேலை செய்ய எதிர்நோக்குகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.

    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

    • ஆஸ்திரேலியா அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
    • இலக்கை ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    இந்தியா 'ஏ' - ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 161 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 223 ரன்னும் எடுத்தன. 62 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரெல் 19 ரன்னுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய துருவ் ஜூரெல் 68 ரன்னிலும், நிதிஷ்குமார் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா 29 ரன்னும், தனுஷ் கோடியன் 44 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 77.5 ஓவர்களில் இந்தியா ஏ 229 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4 விக்கெட்டும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம் கோன்ஸ்டாஸ் 73 ரன்னுடனும், வெப்ஸ்டர் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், தனுஷ் கோடியன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 16-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.

    கெபேஹா:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் (107 ரன், 50 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) இந்தியா 202 ரன்கள் குவித்தது. திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்தனர். அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் அசத்திய இந்திய அணியினர் தென்ஆப்பிரிக்காவை 17.5 ஓவர்களில் 141 ரன்னில் அடக்கி வெற்றியை வசப்படுத்தினர். வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கலக்கினர்.

    கடைசியாக தனது 11 சர்வதேச 20 ஓவர்களில் தொடர்ச்சியாக வெற்றியை குவித்துள்ள இந்திய அணி தனது ஆதிக்கத்தையும், உத்வேகத்தையும் தொடரும் ஆவலுடன் உள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்களான ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் மற்றும் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கில் சொதப்பியது சறுக்கலை சந்திக்க காரணமாக அமைந்தது. அத்துடன் பந்து வீச்சில் ஜெரால்டு கோட்ஜீ தவிர மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    தனது வெற்றியை தொடர இந்திய அணி முழு முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க தென்ஆப்பிரிக்க அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தை பொறுத்தவரை மொத்தம் 4 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்கா மூன்றில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இங்கு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் (2023-ம் ஆண்டு) மட்டும் களம் கண்டுள்ள இந்திய அணி மழையால் பாதித்த அந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 2012-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து 146 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் குருகர், மார்கோ யான்சென், அன்டில் சிம்லேன், ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், நபயோம்ஜி பீட்டர் அல்லது ஒட்னில் பார்ட்மேன்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்களைக் குவித்தது.

    நிகோலஸ் பூரன் 38 ரன்னும், ஷெபர்ட் 35 ரன்னும், குடகேஷ் மோடே விளாசி 33 ரன்னும், ரசல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 4 விக்கெட்டும் அடில் ரஷீத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    வில் ஜாக்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லர் டக் அவுட்டானார்.

    பிலிப் சால்டுடன் இணைந்தார் ஜேக்கப் பெதெல். இந்த ஜோடி இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    ஜேக்கப் பெதெல் அரை சதம் கடந்தார். பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இங்கிலாந்து 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 103 ரன்னும், பெதெல் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதனால்

    18 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    நிகோலஸ் பூரன், ஆண்ட்ரூ ரசல் ஜோடி அதிரடியாக ஆடியது. பூரன் 38 ரன்னும், ரசல் 30 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் குடகேஷ் மோடே விளாசி 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்களைக் குவித்தது.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 4 விக்கெட்டும் அடில் ரஷீத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீராங்கனை கோகோ காப் கோப்பை வென்றார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.

    இதில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார்.

    இதில் கோகோ காப் 3-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பை வென்று அசத்தினார்.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • அரையிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்து வீரருடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்கதேசம் 252 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ 72 ரன்னும், ஜாகர் அலி 37 ரன்னும், சவும்யா சர்க்கா 35 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ரஹமத் ஷா மட்டும் தாக்குப்பிடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 68 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஐந்தாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் முதல் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 2வது இடத்திலும் உள்ளன.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வென்றது.

    தம்புலா:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரேஸ்வெல், சகாரி போக்ஸ் ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் வெல்லலகே 3 விக்கெட்டும், துஷாரா, ஹசரங்கா, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    பதும் நிசங்கா 19 ரன்னும், குசால் பெராரா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 23 ரன்னும், பானுகா ராஜபக்ச 4 ரன்னும், ஹசரங்கா 22 ரன்னும் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

    இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
    • கம்பீரின் பறிச்சி முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் முதல் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். கடைசியாக உலகக்கோப்பை  வெற்றியோடு ராகுல் டிராவிட் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐபில் தொடரில் கொல்கத்தா அணியை திறமையாக டிரைன் செய்து வெற்றி பெற வைத்ததால் கவுதம் கம்பீர்தான் வேண்டும் என்று பிசிசிஐ அரும்பாடுபட்டு அவரை தலைமை கோச்சாக கொண்டுவந்தது.

     

    ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

    இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

    இந்த நிலையில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 6 மணி நேரம் ஆய்வு நடத்தியது. இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட கம்பீரிடம் இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. கம்பீரின் பறிச்சி முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

     

    வர இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி [BGT] சீரிஸில் இந்தியா தோற்றால் நிச்சயம் கம்பீரின் பதவி பறிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்றும், ஓடிஐ மட்டும் டி 20 போட்டிகளில் மட்டும் கம்பீர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×