search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korea Open"

    • அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்றனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு ஏற்கனவே 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்தியது.

    காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்று இறுதிச்சுற்றை உறுதி செய்தனர்.

    இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில், சாத்விக்-சிராஜ் ஜோடி இந்தோனேசியாவின் ஆல்பியன் ஆர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாத்விக்-சிராஜ் ஜோடி 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கொரிய ஓபன் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்-சிராக் ஜோடி கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும், கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் முதல் முறையாக இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

    சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இந்தோனேசிய சூப்பர் 1000 மற்றும் சுவிஸ் ஓபன் சூப்பர் 500 என இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    யோசு:

    கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

    • ஆண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனோய் தோல்வியடைந்தார்.
    • ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் லீ சிக் யுவுடன் மோதினார். இதில் ஹாங்காங் வீரர் 21-15, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பான் வீரர் கோடா நரோகாவுடன் மோதினார். இதில் ஜப்பான் வீரர் 21-14, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தினார்.

    • பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
    • ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், உள்ளூர் வீரர் சோய் ஜி ஹூனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி

    பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் பை யூ போவிடம் தோல்வியடைந்தார்.

    சிந்து 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நடைபெற்றது.

    கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். #SainaNehwal
    கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சாய்னா நேவால் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

    5-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார். சாய்னாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3-ம் நிலை வீராங்கனையான ஒகுஹாரா 2-வது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 16-10 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 20-16 என முன்னிலை பெற்றிருந்தார்.

    ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என சாய்னா இருந்த நிலையில், ஒகுஹாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்று 22-20 என வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப் பிறகு சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். சாய்னா இந்த தோல்வியின் மூலம் ஒகுஹாராவிற்கு எதிராக தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
    கொரியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
    தென்கொரியா ஓபன் பேட்மிண்டன் சியோல் நகரில் நநடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் ஹியோ மின்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 21-11, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் சமீர் வர்மா டென்மார்க் வீரரிடமும், வைஷ்ணவி அமெரிக்கா விராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
    ×