என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்று பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது இங்கிலாந்தா? ஆப்கானிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

    • பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
    • சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் பங்குக்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தொடங்கிய அவர் 2018 இல் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கில் 2023 இல் கைதானார். கடந்த மாதம் பாக். நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இலிருந்து வெளியேறியபின் இம்ரான் கான் சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    தங்களது சந்திப்பு குறித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் சிறையில் அந்த ஆட்டத்தை பார்த்தார்.

    முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என்று இம்ரான் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் விமர்சித்து  கேள்வி எழுப்பியதாக அலிமா கூறினார். 

     

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    பெங்களூரு:

    மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து டியாண்ட்ரா டாட்டின் 26, தனுஜா கன்வர் 16 என அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

     

    கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனையடுத்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்க உள்ளது.

    இறுதியில் டெல்லி அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது . இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்களும் எடுத்தனர்.

    இந்த வெற்றிக்கு பின்னர் புள்ளிப்பட்டியல் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு டெல்லி கேப்ட்டல்ஸ் அணி முன்னேறியுள்ளது.

    • லாகூர் கடாஃபி மைதானம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
    • பஞ்சாப் மாகாண போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல் பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. லாகூர் நகர் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளதால் கடாஃபி மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஹோட்டல், வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வருகை, மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லுதல் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு பணியில் அம்மாகாண போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அனால் சில போலீசார் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் சிலர் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாப் மாகாண நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட போலீசாரை அதிரடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதில் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.

    போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-3 என ரூப்லெவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹேலிஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

    ரஷியா வீரரான ரூப்லெவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் ஷிகா பாண்டே, மாரிசேன் காப், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து டியாண்ட்ரா டாட்டின் 26, தனுஜா கன்வர் 16 என அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.

    டெல்லி அணி தரப்பில் ஷிகா பாண்டே, மாரிசேன் காப், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஒவ்வொரு மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.
    • துபாயில் மட்டுமே இந்திய அணி ஆடுவதால், வேறு மைதானங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    துபாய்:

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுவது, மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் அளிக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    துபாயில் மட்டுமே இந்திய அணி ஆடுவதால், வேறு மைதானங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், மற்ற அணி வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பாகிஸ்தானிலேயே மூன்று நகரங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். ஒவ்வொரு மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.

    ஒவ்வொரு பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப, அணி தேர்வில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், இந்திய அணி எங்குமே பயணம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என அனைத்துமே பழகிப் போயிருக்கும்.

    மேலும், துபாய் மைதானத்தில் உள்ள பிட்ச்சில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்பதால், இந்திய அணி 5 சுழல் பந்துவீச்சாளர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்திருக்கிறது.

    அதே சமயம், பாகிஸ்தானில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கும் என்பதால், மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே தங்கள் உத்தேச அணியில் தேர்வு செய்துள்ளன. உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலும் இந்த வித்தியாசம் பெரிய அளவில் தெரிந்தது.

    பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு முழு நேர சுழல் பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருந்தார். ஆனால், இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் ஆடினர். இந்திய அணிக்கு, தாங்கள் ஆடும் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடைபெறப் போகிறது என்பது தெரிந்ததால் தான், ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

    இந்தியாவிற்கு தங்கள் சூழ்நிலை முன்பு தெரிந்திருப்பதால், அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள் தங்கள் பணியை மட்டும் சிறப்பாக செய்தால், மற்றொரு சர்வதேச கோப்பையை வெல்வார்கள்.

    என நாசர் ஹுசைன் கூறினார். 

    • பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும்.
    • குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருக்க வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தாங்கள் எதிர்கொண்ட முதல் போட்டியில் நியூசிலாந்து இடமும் அடுத்த போட்டியில் இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

    பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பில்டிங் என அனைத்துமே சொதப்பியதுதான். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிக அளவு டாட் பால்களை சந்தித்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா மட்டும் ஐசிசியை விமர்சித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இது போல் அட்டவணை அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும். வங்கதேசம் தற்போது நன்றாக விளையாடி வந்தாலும் நமது வீரர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்.

    ஆனால் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி நாம் தோல்வியை தழுவி விட்டோம். இதன் மூலம் கடும் நெருக்கடி நமது வீரர்களுக்கு ஏற்பட்டு விட்டது. பாகிஸ்தான் அணி ஏன் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியை விளையாடவில்லை.

    குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்குமே சமமான அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் என்று ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-1), 10-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
    • கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக தன்னை நியமித்தால், அணியை வழிநடத்த தயாராக உள்ளதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது,

    கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருக்கிறது. தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பு. கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.

    அணியின் கேப்டனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டியில் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
    • தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதவுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    பி பிரிவில் யார் செல்லப் போகிறார் என்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ராவல்பிண்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போடுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ராவல்பிண்டியில் இந்த நாளில் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ராவல்பிண்டியில் பெரிய அளவு மைதானத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வசதி இல்லை. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சி இருக்கும் தங்களுடைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

    உதாரணத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதேபோன்று ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மூன்று புள்ளிகள் உடன் தொடரை முடிவு செய்யும்.

    அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதனால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக நடந்தால் மட்டுமே இந்த குழப்பம் தவிர்க்கப்படும்.

    • இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
    • அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

    அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.

    எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    ×