என் மலர்
விளையாட்டு
இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு குழுவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடி வருகிறது.
இதில் இஷாந்த் சர்மாவுக்கு 32 வயதும், உமேஷ் யாதவுக்கு 33 வயதும், முகமது ஷமிக்கு 29 வயதும், புவனேஷ்வர் குமாருக்கு 30 வயதும் ஆகிறது. பும்ராவுக்கு 26 வயதாகிறது.
இந்த ஐந்து பந்து வீச்சாளர்களில் நான்கு பேரை வெளிநாட்டு தொடருக்கு இந்திய அணி அழைத்துச் செல்லும். ஆனால் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டால் சிக்கலாகி விடும். இங்கிலாந்து தொடரின்போது புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரால் விளையாட முடியவில்லை.
தற்போது முடிந்த நியூசிலாந்து தொடருக்கு புவனேஷ்வர் குமார் தயாராகவில்லை. நன்றாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் அவர் இருந்திருந்தால் போட்டி நிச்சயமாக மாறியிருக்கும். முதல் போட்டியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார்.
ஆனால் 2-வது டெஸ்டுக்கு முந்தைய நாள் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்விங் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் மன்னர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவால் புதுப்பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
தற்போது அவர்களுக்கு வயதாகி கொண்டே வருவதால் வேகப்பந்து வீச்சு யுனிட்டில் சிறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போது விளையாடி வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் இளம் வயதை கொண்டிருக்கவில்லை. ஆகவே இதை கவனமாகவும், விழிப்புடனும் கையாள வேண்டும். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்து அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியம். சில வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
கிரிக்கெட்டில் மாற்றம் என்பது நடைபெறும் நிகழ்வுதான். அந்த சிறிய மாற்றங்கள் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும். அதைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். தனிப்பட்ட முறையில் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கையை நசுக்க முடியாது. அவர்கள் சிறப்பாக விளையாடும்போது, மாற்று வீரர்கள் தேவையில்லை. இந்த மாற்றங்கள் நடக்கும் என்பது எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நவ்தீப் சைனி எங்களது திட்டத்தில் உள்ளார். இன்னும் இரண்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பார்வை உள்ளது. அவர்ளின் விளையாட்டு தரம் சர்வதேச அளவில் மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். அதை கவனமாக கையாள்வது அவசியம்’’ என்றார்.
இதில் இஷாந்த் சர்மாவுக்கு 32 வயதும், உமேஷ் யாதவுக்கு 33 வயதும், முகமது ஷமிக்கு 29 வயதும், புவனேஷ்வர் குமாருக்கு 30 வயதும் ஆகிறது. பும்ராவுக்கு 26 வயதாகிறது.
இந்த ஐந்து பந்து வீச்சாளர்களில் நான்கு பேரை வெளிநாட்டு தொடருக்கு இந்திய அணி அழைத்துச் செல்லும். ஆனால் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டால் சிக்கலாகி விடும். இங்கிலாந்து தொடரின்போது புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரால் விளையாட முடியவில்லை.
தற்போது முடிந்த நியூசிலாந்து தொடருக்கு புவனேஷ்வர் குமார் தயாராகவில்லை. நன்றாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் அவர் இருந்திருந்தால் போட்டி நிச்சயமாக மாறியிருக்கும். முதல் போட்டியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார்.
ஆனால் 2-வது டெஸ்டுக்கு முந்தைய நாள் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்விங் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் மன்னர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவால் புதுப்பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
தற்போது அவர்களுக்கு வயதாகி கொண்டே வருவதால் வேகப்பந்து வீச்சு யுனிட்டில் சிறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போது விளையாடி வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் இளம் வயதை கொண்டிருக்கவில்லை. ஆகவே இதை கவனமாகவும், விழிப்புடனும் கையாள வேண்டும். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்து அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியம். சில வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
கிரிக்கெட்டில் மாற்றம் என்பது நடைபெறும் நிகழ்வுதான். அந்த சிறிய மாற்றங்கள் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும். அதைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். தனிப்பட்ட முறையில் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கையை நசுக்க முடியாது. அவர்கள் சிறப்பாக விளையாடும்போது, மாற்று வீரர்கள் தேவையில்லை. இந்த மாற்றங்கள் நடக்கும் என்பது எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நவ்தீப் சைனி எங்களது திட்டத்தில் உள்ளார். இன்னும் இரண்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பார்வை உள்ளது. அவர்ளின் விளையாட்டு தரம் சர்வதேச அளவில் மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். அதை கவனமாக கையாள்வது அவசியம்’’ என்றார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டனர். ஒன்றிரண்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மார்ச் 19-ல் காலேயில் தொடங்குகிறது. அதற்கு முன் மார்ச் 7-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரையும், மார்ச் 12-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
இதற்கான இங்கிலாந்து அணி இலங்கை வருகிறது. இதற்கு ஆயத்தமாகும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டிடம் கொரோனோ வைரஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ஜோ ரூட் இதற்கு பதிலளிக்கையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அணியின் ஏராளமான வீரர்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கிருமிகள் மற்றும் பாக்டீரியா பரவுவதை தடுக்க எங்களுடைய மருத்துவக்குழு குறிப்பிடத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க மாட்டோம். கைகளை ரெகுலராக சுத்தம் செய்வோம். பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பானை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்வோம்.
கொரோனா வைரஸால் இலங்கை தொடர் பாதிக்கப்படும் என்ற ஆலோசனை ஏதும் இல்லை. ஆனால், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் தொடர்ந்து எங்கள் அதிகாரிகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மார்ச் 19-ல் காலேயில் தொடங்குகிறது. அதற்கு முன் மார்ச் 7-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரையும், மார்ச் 12-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
இதற்கான இங்கிலாந்து அணி இலங்கை வருகிறது. இதற்கு ஆயத்தமாகும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டிடம் கொரோனோ வைரஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ஜோ ரூட் இதற்கு பதிலளிக்கையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அணியின் ஏராளமான வீரர்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கிருமிகள் மற்றும் பாக்டீரியா பரவுவதை தடுக்க எங்களுடைய மருத்துவக்குழு குறிப்பிடத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க மாட்டோம். கைகளை ரெகுலராக சுத்தம் செய்வோம். பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பானை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்வோம்.
கொரோனா வைரஸால் இலங்கை தொடர் பாதிக்கப்படும் என்ற ஆலோசனை ஏதும் இல்லை. ஆனால், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் தொடர்ந்து எங்கள் அதிகாரிகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனை எலிஸ் பெர்ரி உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிதான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்ததால், இரு அணி வீராங்கனைகளும் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தினர்.
நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீராங்கனையான எலிஸ் பெர்ரி மிட்-ஆஃப் திசையில் வந்த பந்தை பீல்டிங் செய்து வீசினார். அப்போது நிலைதடுமாறினார். அவரது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் திணறினார். அதன்பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.
காயத்தின் தன்மை மிக அதிகமான அளவில் இருப்பதால் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீராங்கனையான எலிஸ் பெர்ரி மிட்-ஆஃப் திசையில் வந்த பந்தை பீல்டிங் செய்து வீசினார். அப்போது நிலைதடுமாறினார். அவரது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் திணறினார். அதன்பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.
காயத்தின் தன்மை மிக அதிகமான அளவில் இருப்பதால் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ அல்லது போல்டாகிவிட்டால் மிக அதிகமான அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் விராட் கோலி எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். இன்-ஸ்விங் பந்தில் அவர் திணறியதை விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 30 வயதை கடந்து விட்டால் பார்வைத்திறன் சற்று குறைந்துவிடும். இதனால் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கபில்தேவ் விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘நீங்கள் 30 வயதை தாண்டும்போது, உங்களுடைய கண்பார்வை திறன் சற்று குறையும். இன்-ஸ்விங் பந்தை பிளிக் மூலம் பவுண்டரிக்கு விரட்டுவதுதான் விராட் கோலியின் பலம். ஆனால், தற்போது தொடர்ந்து இரண்டு முறை ஆட்டமிழந்துள்ளார்.
ஆகவே, அவரது கண்பார்வைத்திறனில் சற்று மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மிகப்பெரிய வீரர்கள் போல்டு அல்லது டபிள்யூ ஆகத் தொடங்கும்போது, அவர்கள் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆட்டமிழப்பு உங்களுடைய பார்வைத்திறன் சற்று குறைந்துள்ளது என்பதையும், உங்களுடைய பலம் பலவீனமாக எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம் என்பதையும் காட்டுகிறது.
18 வயதில் இருந்து 24 வயது வரை பார்வைத்திறன் உச்சமாக இருக்கும். அதன்பின் நீங்கள் எப்படி பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. சேவாக், டிராவிட், விவ் ரிச்சர்ட்சன் ஆகியோரும் இதுபோன்று கஷ்டப்பட்டார்கள்.
ஆகவே விராட் கோலி அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பார்வைத்திறன் குறையும்போது டெக்னிக் முறையை அதிகப்படுத்த வேண்டும். பவுன்சர் பந்தை முன்னதாக விரைவாக எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் தற்போது அதை கொஞ்சம் காலதாமதமாக எதிர்கொள்கிறார்’’ என்றார்.
இந்நிலையில் 30 வயதை கடந்து விட்டால் பார்வைத்திறன் சற்று குறைந்துவிடும். இதனால் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கபில்தேவ் விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘நீங்கள் 30 வயதை தாண்டும்போது, உங்களுடைய கண்பார்வை திறன் சற்று குறையும். இன்-ஸ்விங் பந்தை பிளிக் மூலம் பவுண்டரிக்கு விரட்டுவதுதான் விராட் கோலியின் பலம். ஆனால், தற்போது தொடர்ந்து இரண்டு முறை ஆட்டமிழந்துள்ளார்.
ஆகவே, அவரது கண்பார்வைத்திறனில் சற்று மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மிகப்பெரிய வீரர்கள் போல்டு அல்லது டபிள்யூ ஆகத் தொடங்கும்போது, அவர்கள் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆட்டமிழப்பு உங்களுடைய பார்வைத்திறன் சற்று குறைந்துள்ளது என்பதையும், உங்களுடைய பலம் பலவீனமாக எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம் என்பதையும் காட்டுகிறது.
18 வயதில் இருந்து 24 வயது வரை பார்வைத்திறன் உச்சமாக இருக்கும். அதன்பின் நீங்கள் எப்படி பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. சேவாக், டிராவிட், விவ் ரிச்சர்ட்சன் ஆகியோரும் இதுபோன்று கஷ்டப்பட்டார்கள்.
ஆகவே விராட் கோலி அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பார்வைத்திறன் குறையும்போது டெக்னிக் முறையை அதிகப்படுத்த வேண்டும். பவுன்சர் பந்தை முன்னதாக விரைவாக எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் தற்போது அதை கொஞ்சம் காலதாமதமாக எதிர்கொள்கிறார்’’ என்றார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்கால்.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. மஜும்தார் (ஆட்டமிழக்காமல் 149 ரன்) அபாரமாக விளையாடி சதம் அடிக்க பெங்கால் முதல் இன்னிங்சில் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடகா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியான வகையில் பந்து வீச பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
நேற்றைய ஆட்ட முடிவில் கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கர்நாடகா அணிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேலும் 254 ரன்கள் தேவைப்பட்டது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தேவ்தத் 52 ரன்கள் எடுத்த நிலையிலும், மணிஷ் பாண்டே மேலும் ஒரு ரன் சேர்த்து 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கர்நாடகா விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன. மிதுன் 38 ரன்களும், கவுதம் 22 ரன்களும் அடிக்க 177 ரன்னில் சுருண்டது.
இதனால் பெங்கால் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்கால் பந்து வீச்சாளர் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. மஜும்தார் (ஆட்டமிழக்காமல் 149 ரன்) அபாரமாக விளையாடி சதம் அடிக்க பெங்கால் முதல் இன்னிங்சில் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடகா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியான வகையில் பந்து வீச பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
நேற்றைய ஆட்ட முடிவில் கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கர்நாடகா அணிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேலும் 254 ரன்கள் தேவைப்பட்டது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தேவ்தத் 52 ரன்கள் எடுத்த நிலையிலும், மணிஷ் பாண்டே மேலும் ஒரு ரன் சேர்த்து 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கர்நாடகா விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன. மிதுன் 38 ரன்களும், கவுதம் 22 ரன்களும் அடிக்க 177 ரன்னில் சுருண்டது.
இதனால் பெங்கால் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்கால் பந்து வீச்சாளர் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் கொரோனா அச்சத்தால் விலகி உள்ளனர்.
புதுடெல்லி:
உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசுக்கு இதுவரை 3,100 பேர் வரை பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் ஜூன், ஜூலை மாதம் நடைபெற உள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக பல விளையாட்டுப்போட்டிகள் ரத்தாகி இருந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் கொரோனா அச்சத்தால் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஹரிஷ் போகட் (53 கிலோ) வினிஷ் நிர்மலா (50 கிலோ), அன்சு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), திவ்யா (68 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் விலகி உள்ளனர். அவர்கள் லக்னோவில் பயிற்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்வின் ஷா சர்வதேச ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற இருந்த இந்தப்போட்டி செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதேபோல கத்தார் மற்றும் தாய்லாந்தில் நடைபெற இருந்த மோட்டார் கிராண்ட் பிரீபந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசுக்கு இதுவரை 3,100 பேர் வரை பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் ஜூன், ஜூலை மாதம் நடைபெற உள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக பல விளையாட்டுப்போட்டிகள் ரத்தாகி இருந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் கொரோனா அச்சத்தால் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஹரிஷ் போகட் (53 கிலோ) வினிஷ் நிர்மலா (50 கிலோ), அன்சு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), திவ்யா (68 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் விலகி உள்ளனர். அவர்கள் லக்னோவில் பயிற்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்வின் ஷா சர்வதேச ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற இருந்த இந்தப்போட்டி செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதேபோல கத்தார் மற்றும் தாய்லாந்தில் நடைபெற இருந்த மோட்டார் கிராண்ட் பிரீபந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் பயிற்சிக்காக வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த டோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் டோனி.
38 வயதான அவர் 2 உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.
3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த அவர் 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி அந்த போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையோடு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு அதோடு ஓய்வு பெற டோனி திட்டமிட்டுள்ளார்.
மார்ச் 29-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுகிறார். இதில் அவர் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பை பெறுவார்.
ஆனாலும் இந்திய அணி நிர்வாகமும், கிரிக்கெட் வாரியமும் டோனி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
அதே நேரத்தில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து டோனி கழற்றிவிடப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
ஆனாலும் தனது அடுத்த கட்ட நிலை குறித்து டோனி கருத்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
உலக கோப்பை அரைஇறுதிக்கு பிறகு 8 மாதங்கள் அவர் எந்தப்போட்டியிலும் ஆடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் பயிற்சிக்காக டோனி வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
சிறிது தூரம் ஆடிய பிறகு உடற்பயிற்சியில் டோனி ஈடுபட்டார். பின்னர் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது வழக்கம் போல பெரிய ஷாட்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
முன்னதாக மைதானத்துக்கு வந்த டோனிக்கு சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டேடியத்தில் அவருக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் அவர் உள்ளே நுழைந்த போது டோனி, டோனி என்று கோஷமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
டோனியுடன் சக வீரர்கள் அம்பதிராயுடு, முரளி விஜய், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, உள்ளூர் வீரர்கள் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிள்ளது. மேலும் 5 தடவை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் டோனி.
38 வயதான அவர் 2 உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.
3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த அவர் 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி அந்த போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையோடு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு அதோடு ஓய்வு பெற டோனி திட்டமிட்டுள்ளார்.
மார்ச் 29-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுகிறார். இதில் அவர் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பை பெறுவார்.
ஆனாலும் இந்திய அணி நிர்வாகமும், கிரிக்கெட் வாரியமும் டோனி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
அதே நேரத்தில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து டோனி கழற்றிவிடப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
ஆனாலும் தனது அடுத்த கட்ட நிலை குறித்து டோனி கருத்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
உலக கோப்பை அரைஇறுதிக்கு பிறகு 8 மாதங்கள் அவர் எந்தப்போட்டியிலும் ஆடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் பயிற்சிக்காக டோனி வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
சிறிது தூரம் ஆடிய பிறகு உடற்பயிற்சியில் டோனி ஈடுபட்டார். பின்னர் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது வழக்கம் போல பெரிய ஷாட்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
முன்னதாக மைதானத்துக்கு வந்த டோனிக்கு சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டேடியத்தில் அவருக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் அவர் உள்ளே நுழைந்த போது டோனி, டோனி என்று கோஷமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
டோனியுடன் சக வீரர்கள் அம்பதிராயுடு, முரளி விஜய், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, உள்ளூர் வீரர்கள் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிள்ளது. மேலும் 5 தடவை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கும்போது விராட் கோலி ஒரு ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி என ராஸ் டெய்லர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 7 ரன்கள் தேவை என்ற நிலையில் 35-வது ஓவரை விராட் கோலி வீசினார். அப்போது ராஸ் டெய்லர் மற்றும் நிக்கோல்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்த ஓவரை நிக்கோல்ஸ் வீசினார். 4-வது பந்தை நிக்கோல் பவுண்டரிக்கு விரட்டினார். மற்ற ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார்.
அடுத்த ஓவரில் நியூசிலாந்து மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி நீண்ட காலமாக பந்து வீசவில்லை. தற்போது இந்த போட்டியில்தான் பந்து வீசினார்.
இதனை கிண்டல் அடிக்கும் வகையில் ராஸ் டெய்லர், ‘‘இந்திய அணியுடனான தொடர் சிறப்பாக இருந்தது. எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் எப்போதுமே கடிமான எதிர் அணி. வெற்றிக்கான ரன்னை அடிப்பதற்காக விராட் கோலியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓவரில் நியூசிலாந்து மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி நீண்ட காலமாக பந்து வீசவில்லை. தற்போது இந்த போட்டியில்தான் பந்து வீசினார்.
இதனை கிண்டல் அடிக்கும் வகையில் ராஸ் டெய்லர், ‘‘இந்திய அணியுடனான தொடர் சிறப்பாக இருந்தது. எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் எப்போதுமே கடிமான எதிர் அணி. வெற்றிக்கான ரன்னை அடிப்பதற்காக விராட் கோலியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அபாயகரமானதாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியடைந்தது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 165 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 191 ரன்களிலும் சுருண்டது. 2-வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் சேர்த்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். 2-வது இன்னிங்சில் ஒருவர் கூட 30 ரன்னைத் தாண்டவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடிய தொடரில் இதுவும் ஒன்று. இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரி 18.05 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரின்போது சராசரி 13.37-ம், 1969-70 தொடரில் 16.61-ம் ஆக இருந்தது. அதன்பின் தற்போது மோசமாக விளையாடியுள்ளனர்.
இரண்டு டெஸ்டிலும் ஒரு இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 242 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரில் 161 ரன்கள் எடுத்ததுதான் மிகவும் குறைவான ஸ்கோர்.
நியூசிலாந்தின் கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கான ஜோடி அற்புதமாக விளையாடியது. அந்த ஜோடிகளின் சராசரி 34.61 ஆகும். இரண்டு போட்டிகளிலும் ஆறு பார்ட்னர்ஷிப்பில் 205 ரன்கள் அடித்தனர். இரண்டு டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் அவர்கள் அடித்த ரன் முக்கிய பங்காற்றியது.
முதல் டெஸ்டில் கிராண்ட்ஹோம் - ஜாமிசன் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்களும், ஜாமிசன் - போல்ட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 38 ரன்களும் சேர்த்தன. 2-வது டெஸ்டில் ஜாமிசன் - நீல் வாக்னர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அதேவேளையில் இந்தியாவின் கடைநிலை வீரர்கள் 124 ரன்களே சேர்த்தது. சராசரி 10.33 ஆகும்.
மயாங்க் அகர்வால் அடித்த 58 ரன்களே இந்திய பேட்ஸ்மேன்களின் அதிபட்ச ஸ்கோராகும். 2002-03-க்கும் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் கண்டிராத தொடர் இதுவே ஆகும்.
விராட் கோலியின் (2, 19, 3, 14) சராசரி 9.50 ஆகும். இது அவருக்கு மிகவும் மோசமான 2-வது தொடராகும். இதற்கு முன் 2016-17-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. அப்போது ஐந்து இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்திருந்தார். சராசரி 9.20 ஆகும்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் சேர்த்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். 2-வது இன்னிங்சில் ஒருவர் கூட 30 ரன்னைத் தாண்டவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடிய தொடரில் இதுவும் ஒன்று. இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரி 18.05 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரின்போது சராசரி 13.37-ம், 1969-70 தொடரில் 16.61-ம் ஆக இருந்தது. அதன்பின் தற்போது மோசமாக விளையாடியுள்ளனர்.
இரண்டு டெஸ்டிலும் ஒரு இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 242 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரில் 161 ரன்கள் எடுத்ததுதான் மிகவும் குறைவான ஸ்கோர்.
நியூசிலாந்தின் கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கான ஜோடி அற்புதமாக விளையாடியது. அந்த ஜோடிகளின் சராசரி 34.61 ஆகும். இரண்டு போட்டிகளிலும் ஆறு பார்ட்னர்ஷிப்பில் 205 ரன்கள் அடித்தனர். இரண்டு டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் அவர்கள் அடித்த ரன் முக்கிய பங்காற்றியது.
முதல் டெஸ்டில் கிராண்ட்ஹோம் - ஜாமிசன் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்களும், ஜாமிசன் - போல்ட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 38 ரன்களும் சேர்த்தன. 2-வது டெஸ்டில் ஜாமிசன் - நீல் வாக்னர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அதேவேளையில் இந்தியாவின் கடைநிலை வீரர்கள் 124 ரன்களே சேர்த்தது. சராசரி 10.33 ஆகும்.
மயாங்க் அகர்வால் அடித்த 58 ரன்களே இந்திய பேட்ஸ்மேன்களின் அதிபட்ச ஸ்கோராகும். 2002-03-க்கும் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் கண்டிராத தொடர் இதுவே ஆகும்.
விராட் கோலியின் (2, 19, 3, 14) சராசரி 9.50 ஆகும். இது அவருக்கு மிகவும் மோசமான 2-வது தொடராகும். இதற்கு முன் 2016-17-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. அப்போது ஐந்து இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்திருந்தார். சராசரி 9.20 ஆகும்.
70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்று விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இன்சமாம் உல் ஹக்.
நியூசிலாந்து தொடர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் மோசமான வகையில் அமைந்தது. டி20, ஒருநாள், டெஸ்ட் என மொத்தமாக 11 இன்னிங்சில் விளையாடினார். இதில் ஒன்றில் மட்டுமே அரைசதம் அடித்தார்.
குறிப்பாக டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்சில் 38 ரன்களே அடித்தார். கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்கு இன்-ஸ்விங் பந்தை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என ‘டெக்னிக்’ குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் 70 சதங்கள் அடித்தபின் விராட் கோலியின் டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நான் அவருக்கு சொல்லும் ஆலோசனை ஏதாவது இருந்தால், அது கவலைப்பட வேண்டாம் என்பதுதான். இது கடந்து போகும். ‘டெக்னிக்’ குறித்து கூட பேச விரும்பவில்லை. டெக்னிக்கை மாற்றிக் கொள்ளக்கூடாது. அவர் வலிமையான மனநிலை கொண்ட வீரர். அவர் கலங்கி விடக்கூடாது.
பெரிய வீரர் வலிமையான மனநிலையை பெற்றிருப்பார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும். விராட் கோலி பழைய நிலைக்கு திரும்புவார். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சயீத் அன்வர் மற்றும் கங்குலி சிறப்பானவர்கள். உங்களுடைய வலிமை கூட பலவீனமாக மாறலாம். அதனால் நீங்கள் எப்படி ரன்கள் குவிக்கிறீர்களோ, அதே நிலையில் செல்ல வேண்டும்’’ என்றார்.
சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்சில் 38 ரன்களே அடித்தார். கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்கு இன்-ஸ்விங் பந்தை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என ‘டெக்னிக்’ குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் 70 சதங்கள் அடித்தபின் விராட் கோலியின் டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நான் அவருக்கு சொல்லும் ஆலோசனை ஏதாவது இருந்தால், அது கவலைப்பட வேண்டாம் என்பதுதான். இது கடந்து போகும். ‘டெக்னிக்’ குறித்து கூட பேச விரும்பவில்லை. டெக்னிக்கை மாற்றிக் கொள்ளக்கூடாது. அவர் வலிமையான மனநிலை கொண்ட வீரர். அவர் கலங்கி விடக்கூடாது.
பெரிய வீரர் வலிமையான மனநிலையை பெற்றிருப்பார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும். விராட் கோலி பழைய நிலைக்கு திரும்புவார். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சயீத் அன்வர் மற்றும் கங்குலி சிறப்பானவர்கள். உங்களுடைய வலிமை கூட பலவீனமாக மாறலாம். அதனால் நீங்கள் எப்படி ரன்கள் குவிக்கிறீர்களோ, அதே நிலையில் செல்ல வேண்டும்’’ என்றார்.
சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்கால் அணிக்கெதிரான அரையிறுதியில் கைவசம் ஏழு விக்கெட் உள்ள நிலையில் வெற்றிபெற 254 ரன்கள் தேவை என்ற நிலையில் கர்நாடகா உள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவரின் சதத்தால் பெங்கால் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சட்டர்ஜீ 40 ரன்னுடனும், முஜும்தார் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சட்டர்ஜீ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். மஜும்தார் 41 ரன்கள் சேர்த்தார். ஷபாஸ் அகமது 31 ரன்கள் சேர்க்க பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கர்நாடகா அணிக்கு இன்னும் 254 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவரின் சதத்தால் பெங்கால் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சட்டர்ஜீ 40 ரன்னுடனும், முஜும்தார் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சட்டர்ஜீ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். மஜும்தார் 41 ரன்கள் சேர்த்தார். ஷபாஸ் அகமது 31 ரன்கள் சேர்க்க பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கர்நாடகா அணிக்கு இன்னும் 254 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியா கூடுதலாக இன்னும் 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் நாங்கள் சேஸிங் செய்ய கடும் சவாலாக இருந்திருக்கும் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 235, 132 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணிக்கு 132 ரன்களே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப்பின் பேசிய கேன் வில்லியம்சன், இந்தியா கூடுதலாக 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘மூன்று நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்தது நியாயமானது அல்ல. இந்தியா இன்னும் 50 ரன்கள் கூடுதலாக டார்கெட் நிர்ணயித்து இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும்.
எங்களது வீரர்கள் ஆட்டம் அற்புதமானது. மிகவும் சவாலான போட்டியில் முடிவு இப்படி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. 50 ரன்கள் கூடுதலாக இருந்திருந்தால் மிகவும் பேலன்ஸான போட்டியாக அமைந்திருக்கும்.
இரண்டு போட்டிகள் நடந்த ஆடுகளங்களும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமபலமான போட்டிக்கானது. அதிர்ஷ்டம் இருக்கும்போது பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் நெருக்கடி கொடுக்க முடியும். இரண்டு போட்டிகளிலும் எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.
இந்த வெற்றிக்குப்பின் பேசிய கேன் வில்லியம்சன், இந்தியா கூடுதலாக 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘மூன்று நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்தது நியாயமானது அல்ல. இந்தியா இன்னும் 50 ரன்கள் கூடுதலாக டார்கெட் நிர்ணயித்து இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும்.
எங்களது வீரர்கள் ஆட்டம் அற்புதமானது. மிகவும் சவாலான போட்டியில் முடிவு இப்படி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. 50 ரன்கள் கூடுதலாக இருந்திருந்தால் மிகவும் பேலன்ஸான போட்டியாக அமைந்திருக்கும்.
இரண்டு போட்டிகள் நடந்த ஆடுகளங்களும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமபலமான போட்டிக்கானது. அதிர்ஷ்டம் இருக்கும்போது பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் நெருக்கடி கொடுக்க முடியும். இரண்டு போட்டிகளிலும் எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.






