search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஸ் டெய்லர்"

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார்.

    2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

    • நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பேசினார்.
    • அப்போது, எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் என குறிப்பிட்டார்.

    வெலிங்டன்:

    வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை மந்திரி ஜெய்சங்கர் திறந்துவைத்தார். அப்போது நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில் அவர் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம் உள்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

    கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கும் எவரும் ஸ்டீபன் பிளெமிங்கை புறக்கணிக்க முடியாது.

    கிரிக்கெட்டில் நமது அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

    எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், ஆனால் அது வேறு விஷயம் என குறிப்பிட்டார்.

    • ராஸ் டெய்லர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
    • விராட் கோலி வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்

    மும்பை:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

    இந்த உலக கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம், உலக கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும்.

    நியூசிலாந்து அரை இறுதிக்கு வருவது போல் தெரிகிறது. கடந்த சில ஐ.சி.சி. போட்டிகளில் கடைசி 4 இடத்துக்குள் நியூசிலாந்து அணி வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் ராஸ் டெய்லர் எழுதிய சுய சரிதை புத்தகம் வெளியானது. அதில் நியூசிலாந்து அணியில் சில வீரர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டனர் என்றும் தன்னை ஐ.பி.எல். அணி உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும்.
    • பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது.

    நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டைலர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் நிலையில் ஓய்வு பெற்றார்.

    பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

    இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன.

    அவற்றில் பல உங்கள் அணி வீரர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரியாது. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது. ஒரு சக அணி வீரர் எப்போதும் என்னிடம் ராஸ் நீங்கள் பாதி நல்ல மனிதர் ஆனால் எந்த பாதி நல்லது? என்று கூறுவார். இங்கு நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது. மற்ற வீரர்களும் தங்கள் இனத்தைப் பற்றிய கருத்துக்களை கூற வேண்டியிருந்தது.

    எல்லா நிகழ்வுகளிலும் வெள்ளை நியூசிலாந்து வீரர்களிடம் அந்த வகையான கருத்துக்களைக் கேட்கும் போது இது கொஞ்சம் கேலிக்குரியது போல என்று நினைத்துக் கொள்வேன். இருப்பினும் நிறைய தருணங்களில் இது நட்புரீதியான கருத்துக்கள் என அவ்வாறு கேலி செய்யும் நபர்கள் கூறுவதால் பொதுமக்களிடம் இதைப்பற்றி அந்த பாதிப்புக்குள்ளாகும் நியூசிலாந்து வீரர்கள் கூறுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×