என் மலர்
விளையாட்டு
கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கி வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிவி சிந்து.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான வகையில் பரவி வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் உச்சக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் முடிந்த அளவிற்கு அந்தந்த மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல். போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன.
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான 13-வது போட்டி வருகிற 29-ந் தேதி முதல் மே மாதம் 23-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 14-ந் தேதி வரை இது அமலில் இருக்கும். இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. மே மாதத்தில் மட்டும் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதனால் போட்டியை ரத்து செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எனவே ஐபிஎல் 20 ஓவர் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏப்ரல் 15 ம் தேதிக்கு பிறகு இதுகுறித்த முடிவை எடுக்கும். ஐ.பி.எல். போட்டி ரத்து ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல். போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன.
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான 13-வது போட்டி வருகிற 29-ந் தேதி முதல் மே மாதம் 23-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 14-ந் தேதி வரை இது அமலில் இருக்கும். இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. மே மாதத்தில் மட்டும் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதனால் போட்டியை ரத்து செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எனவே ஐபிஎல் 20 ஓவர் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏப்ரல் 15 ம் தேதிக்கு பிறகு இதுகுறித்த முடிவை எடுக்கும். ஐ.பி.எல். போட்டி ரத்து ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வகையில் அரசுக்கு அரைமாத சம்பளத்தை வழங்க இருப்பதாக வங்காளதேசம் கிரிக்கெட் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா வைரசுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். கொடிய வைரஸ் நோயான கொரோனாவை தடுக்க வங்காளதேசம் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையே அரசுக்கு உதவும் வகையில் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வங்காளதேசம் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர். வங்களாதேச கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் உள்ள 17 வீரர்கள் உள்பட 27 வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். மற்ற 10 வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடக்கூடியவர்கள்.
‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. வங்காளதேசத்தில் கொரோனா மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. நாங்கள் மக்களிடம் இந்த தொற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று தெரிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கொடுக்கும் தொகை ஒட்டுமொத்தமாக இது 25 லட்சம் டாக்காவாக இருக்கும். கொரோனா வைரஸ்க்கு ஏதிரான போராட்டத்தில் இது குறைவானதாக இருக்கலாம். எங்களுடைய சொந்த நிலையில் இருந்து ஒன்றிணைந்து வழங்க முடியும் என்றால் இது மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும்’’ என கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் போட்டிகள் ஒத்திவைப்பு மற்றும் ரத்து ஆகியவற்றால் உலகளவில் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைன் கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதியால் உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில தொடர்கள் ஒத்திவைப்பட்டுள்ளது.
தற்போது காட்டுத்தீ போன்று பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் வந்து உலகம் எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்பதை யாராளும் கூற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் என்பது தேவையற்றதுதான். ஆனால் நாம் விரைவில் அதற்கு திரும்ப வேண்டும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நசிர் ஹுசைன் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நிலையில் விளையாட்டு தேவையற்றதுதான். உலகில் ஏராளமான பிரச்சனைகள் தற்போது உள்ளன. விளையாட்டு ஏராளமானோரின் வாழ்க்கையில் எப்படி மிகப்பெரிய அளவில் விளையாடுகிறது என்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. முடிந்த அளவிற்கு விளையாட்டு விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்.
ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவதைவிட ரசிகர்கள் பார்க்கும் வகையில் நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் இது முற்றிலும் பாதுகாப்பை பொறுத்தது. ஏனென்றால், யாராவது ஒரு வீரர் வைரசால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஒட்டுமொத்தமாக போட்டியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.
அரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக விலகல் மூலமாக மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஒடுக்க முடியும் எனத் தெரிவித்த பாரத பிரதமர் மோடி, இன்றிலிருந்து 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நாட்டு மக்களுக்கான அவரது 2-வத உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தற்போது நம்மை பரிசோதிப்பதற்கான நேரம் இது. இந்த சூழ்நிலையில் அபாயகரத்தை புரிந்து கொண்டு விழித்திட வேண்டியது நமக்கு அவசியமானது. அரசு என்ன சொன்னதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். ஒன்றாக இணைந்திருப்போம். இது ஒவ்வொருவருக்குமான வேண்டுகோள். வீட்டிற்குள்ளே இருங்கள். கொரோனா வைரசில் இருந்து உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்.
ஊரடங்கு உத்தரவை நீங்கள் உதாசீனம் படுத்தினால் ஒட்டுமொத்த நாடும் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டியது நிலை ஏற்படும். உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள். உயிரையும் நாட்டையும் காப்பாற்றுங்கள்’’ என்றார்.
கொரோனா வைரஸ் கொற்று பீதியால் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பர் மாதத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும். ஐந்தாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியளது. மார்ச் மாதத்தின் 2-வது மாதத்தில் தொடர் முடிவடைய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பீதியில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்களை அரையிறுதியாக மாற்றியது. இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டியை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் வீரர் ஒருவர் கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.
இதனால் உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலகம் உடனடியாக மீண்டு வந்தால் போட்டியை நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் அல்லது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சீசன் ஆறுக்கு முன் மீதமுள்ள போட்டிகளை நடத்த வேண்டும் என்பது முதலில் நாங்கள் அணிகளின் உரிமையாளர்களிடம் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு நிலைமை சரியானால் மீதமுள்ள போட்டிகளை நவம்பர் மாதம் நடத்த வாய்ப்புள்ளது’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்குகிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்தில் இருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்றார்.
சவுரவ் கங்கலி பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸை விரட்ட வேண்டுமென்றால் சமூக விலகல்தான் ஒரே வழி. இதற்காகத்தான் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வாரங்களும் மக்கள் தங்களை கட்டுப்படுத்தி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் சிலர் கொரோனாவின் வீரியம் தெரியாமல் வெளியில் கும்பலாக சுற்றுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு ஜெயில் தண்டனை என தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சரியான ஊதாரத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டுவிட்டர் பதிவை என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் க்ரீஸ்க்கு வெளியில் நிற்பார். அவரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்வார்.
இந்த படத்தை அனுப்பி ரசிகர்கள், இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது என அஸ்வினிடம் நினைவுப்படுத்தினர். இந்த படத்தை டுவிட்டரில் அப்லோடு செய்த அஸ்வின், ‘‘இந்த படத்தை எனக்கு அனுப்பி சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடம் ஆகிறது என நினைவுப்படுத்தினர்.
தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனது நாட்டு மக்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்த வகையிலான நினைவு கூறத்தக்கதாகும். வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’’என பதிவிட்டுள்ளார்.
மேலும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது டுவிட்டர் பெயரை lets stay indoors inida என மாற்றியுள்ளார்.
கிரிக்கெட்டில் க்ரீஸை விட்டு வெளியில் வந்தால் மன்கட் செய்யப்படுவீர்கள். அதேபோல் தற்போது வீட்டில் இருந்து வெளியே வந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த டுவிட்டரை பதிவிட்டுள்ளார்.
தனது மகளை பார்க்க முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது என்று வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசன் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த ஒரு ஆண்டு தடையை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி உம்மி அகமது சிஷிர், மகள் அலைனா ஹசன் ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சந்திக்க ஷகிப் அல்-ஹசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் கொரோனா நோயின் தாக்கம் வேகமாக பரவி வருவதால் அங்கு சென்றும் தனது குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாமல் இக்கட்டான நிலைக்கு ஷகிப் அல்-ஹசன் தள்ளப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்காவை சென்றடைந்தேன். கொரோனா அச்சுறுத்தலால் பயணத்தின் போது சற்று பயமாகத்தான் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நல்ல சத்தான உணவும் எடுத்துக்கொண்டேன். அமெரிக்கா சென்றடைந்ததும் நான் நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன். அங்கு 14 நாட்கள் தனிமையில் தங்கி இருக்க போவதாக எனது மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்து விட்டேன்.
நான் வங்காளதேசத்தில் இருந்து விமானத்தில் கிளம்பியதும் என்னால் யாருக்கும் வைரஸ் தொற்றி விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் தனிமைப்படுத்தலுக்காக நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன். நான் இங்கு வந்த பிறகும் இன்னும் எனது மகளை பார்க்கவில்லை. அது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்த தருணத்தில் இந்த தியாகம் மிகவும் முக்கியமானதாகும் என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது முக்கியமானதாகும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். அடுத்த 14 நாட்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 43 வயது இயான் ஓ பிரையன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க செல்வதற்கு விமானம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மனநல சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள அவர் இங்கிலாந்து திரும்ப முடியாமல் சிக்கலில் சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘வெலிங்டனில் இருந்து இங்கிலாந்து திரும்புவதற்காக 3 முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து செல்லும் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தாங்கி கொள்ளக்கூடிய நிலையில் எனது மனைவியின் உடல்நிலை இல்லை. எனவே அவரை நினைத்து கவலைப்படுகிறேன். நாடு திரும்பி 2 வாரம் தனிமையில் இருந்த பிறகு எனது குடும்பத்தினருக்கு உதவுவேன். வீடு திரும்பி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கிறேன்’ என்றார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசன் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த ஒரு ஆண்டு தடையை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி உம்மி அகமது சிஷிர், மகள் அலைனா ஹசன் ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சந்திக்க ஷகிப் அல்-ஹசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் கொரோனா நோயின் தாக்கம் வேகமாக பரவி வருவதால் அங்கு சென்றும் தனது குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாமல் இக்கட்டான நிலைக்கு ஷகிப் அல்-ஹசன் தள்ளப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்காவை சென்றடைந்தேன். கொரோனா அச்சுறுத்தலால் பயணத்தின் போது சற்று பயமாகத்தான் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நல்ல சத்தான உணவும் எடுத்துக்கொண்டேன். அமெரிக்கா சென்றடைந்ததும் நான் நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன். அங்கு 14 நாட்கள் தனிமையில் தங்கி இருக்க போவதாக எனது மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்து விட்டேன்.
நான் வங்காளதேசத்தில் இருந்து விமானத்தில் கிளம்பியதும் என்னால் யாருக்கும் வைரஸ் தொற்றி விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் தனிமைப்படுத்தலுக்காக நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன். நான் இங்கு வந்த பிறகும் இன்னும் எனது மகளை பார்க்கவில்லை. அது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்த தருணத்தில் இந்த தியாகம் மிகவும் முக்கியமானதாகும் என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது முக்கியமானதாகும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். அடுத்த 14 நாட்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 43 வயது இயான் ஓ பிரையன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க செல்வதற்கு விமானம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மனநல சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள அவர் இங்கிலாந்து திரும்ப முடியாமல் சிக்கலில் சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘வெலிங்டனில் இருந்து இங்கிலாந்து திரும்புவதற்காக 3 முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து செல்லும் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தாங்கி கொள்ளக்கூடிய நிலையில் எனது மனைவியின் உடல்நிலை இல்லை. எனவே அவரை நினைத்து கவலைப்படுகிறேன். நாடு திரும்பி 2 வாரம் தனிமையில் இருந்த பிறகு எனது குடும்பத்தினருக்கு உதவுவேன். வீடு திரும்பி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கிறேன்’ என்றார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கப்பட்டார்.
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கழற்றி விடப்பட்டுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாப் டு பிளிஸ்சிஸ் தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடுவதால் ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்.
கேப்டன் குயின்டான் டி காக், பவுமா, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி உள்பட 16 பேர் ஒப்பந்த பட்டியலில் உள்ளனர். பெண்கள் ஒப்பந்த பிரிவில் திரிஷா செட்டி, மரிஜான் காப், டேன் வான் நீகெர்க் உள்பட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கழற்றி விடப்பட்டுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாப் டு பிளிஸ்சிஸ் தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடுவதால் ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்.
கேப்டன் குயின்டான் டி காக், பவுமா, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி உள்பட 16 பேர் ஒப்பந்த பட்டியலில் உள்ளனர். பெண்கள் ஒப்பந்த பிரிவில் திரிஷா செட்டி, மரிஜான் காப், டேன் வான் நீகெர்க் உள்பட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறு மாதம் சம்பளத்தை ஹரியானா மாநில கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது, 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இன்று 2-வது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு நிதியாக வழங்கலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறுமாத சம்பளத்தை அம்மாநில முதல்வர் எம்.எல். கட்டார் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பஜ்ரங் புனியா ரெயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இதில் கிடைக்கும் ஆறுமாத சம்பளத்தைதான் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் முக்கியமான நகரங்கள் வெறிச்சோடிய நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி அச்சுறுத்தும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக முக்கியமான இடங்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வெறிச்சோடிய கொல்கத்தா நகர படங்களை டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்து இதுபோன்று எனது நகரத்தை பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. .. பாதுகாப்பாக இருப்போம்... இந்த சூழ்நிலை விரைவில் மிகவும் சிறப்பான வகையில் மாறும்’’என்று பதிவிட்டுள்ளார்.






