என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இடம் பிடித்துள்ள நிலையில் டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.  மேலும், இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ரோகித் சர்மா, விராட் கோலி

    ஐசிசி அறிவித்துள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

    1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் பிஞ்ச், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. எம்எஸ் டோனி (விக்கட் கீப்பர்& கேப்டன்), 8. பொல்லார்ட், 9. ரஷித் கான், 10, பும்ரா,  11. மலிங்கா.
    இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமான 298-வது இந்திய வீரர் ஆவார்.அவர் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் ரகானே, பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது.

    ‘இன்ஸ்விங்’ பந்து வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை சுவிங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகமது சிராஜ் தனது இன்ஸ்விங் பந்து மூலம் லபுசேன், கேமரூன்கிரீன் ஆகியோரை அவுட் செய்தார்.

    இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேவிட் வார்னர். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.

    இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், 3-வது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகமே.

    பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் எடுத்தது.

    மவுண்ட் மவுக்கானு:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுக்கானுவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 94 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 42 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 82-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது செஞ்சுரி ஆகும்.

    மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தை எடுத்தார். அவர் 56 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து வில்லியம்சன் 129 ரன் குவித்து வெளியேறினார்.அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

    பின்னர் வந்த வீரர்களில் வாட்லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் எடுத்தார். 155-வது ஓவரில் நியூசிலாந்து அணி 431 ரன்களை குவித்தது. 

    பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டும் யாசில் ஷா 3 விக்கெட்டும் முகமது அபாஸ், அசரப், நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மசூத் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமீசன் ஓவரில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. அபிட் அலி 19 ரன்களுடனும் முகமது அபாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது.

    மெல்போர்ன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

    ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார்.பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 28 ரன்னும், புஜாரா 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 159 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

    2-வது விக்கெட் ஜோடி இணைந்து நிதானமாக ஆடி 50 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த சுப்மன்கில் 45 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகள் அடித்தார்.

    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 61 ஆக இருந்தது. சுப்மன்கில் பெவிலியன் திரும்பிய 2-வது ஓவரிலேயே புஜாராவும் ஆட்டம் இழந்தார். அவர் 17 ரன்கள் எடுத்தார். அவரையும் கம்மின்ஸ் தான் அவுட் செய்தார்.

    கில், புஜாரா அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 64 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரஹானே-விகாரி ஜோடி நிதானமாக ஆடியது. மதிய உணவு இடை வேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. ரஹானே 10 ரன்னுடனும், விகாரி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    4-வது விக்கெட் ஜோடி நிதானத்துடன் விளையாடியது. 40.4-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை எடுத்தது. ரஹானேயும், விகாரியும் இணைந்து 126 பந்துகளில் 50 ரன்னை எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் இந்த ஜோடியை பிரித்தார். விகாரி 21 ரன்னில் அவரது பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 116 ரன்னாக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரஹானேயுடன் ரி‌ஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார்.

    ரி‌ஷப்பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை பின்பற்றினார். 52.3 ஓவர்களில் இந்தியா 150 ரன்னை தொட்டது.

    இந்நிலையில் 3 பவுண்டரிகளை அடித்த ரிஷப்பண்ட் ஸ்டார்க் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பொறுப்புடன் ஆடிய ரஹானே டெஸ்டில் தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  

    ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் லயன் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

    கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    துபாய்:

    2020-ம் ஆண்டு முடிந்து 2021-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இதையொட்டி கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்கப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விருதுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி தொடங்குகிறது.

    கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தேர்வு செய்கிறார்கள். 

    அவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும்.

    மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த வீரரை தனது வாக்களிப்பின் மூலம் முடிவு செய்வார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுவர்.





    கடந்த 10 ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான தேர்வு பட்டியலில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், மலிங்கா (இலங்கை), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), சங்ககரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஆரோன்பிஞ்ச் (ஆஸ்திரேலியா, கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீத்கான் (ஆப்கானிஸ் தான்), இம்ரான் தாகிர் (தென் ஆப்பிரிக்கா), மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட்  என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா  அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

    துவக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். 

    எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா   தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 
    அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. 

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது.

    இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த  ஷூப்மான் கில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.  அவரை தொடர்ந்து 17 ரன்கள் எடுத்திருந்த புஜாராவும் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் வந்த ரஹானே, ஹனுமா விஹாரி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட 105 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. 

    ரஹானே 10 ரன்னிலும், விஹாரி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணியில் 13-வது நிமிடத்தில் சாங்தே அருமையாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் 59-வது நிமிடத்தில் பெங்கால் வீரர் மேட்டி ஸ்டெயின்மான் ‘கார்னர்’ பகுதியில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். தொடர்ந்து 64-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ரஹிம் அலி கோல் போட்டார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 68-வது நிமிடத்தில் பெங்கால் வீரர் ஸ்டெயின்மான் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 9 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 3 டிரா, 4 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஐதராபாத் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்களான கருணரத்னே (22), குசால் பெரேரா (16), குசால் மெண்டிஸ் (12) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த தினேஷ் சண்டிமல் (85), தனஞ்ஜெயா டி சில்வா (79) சிறப்பாக விளையாடி ரன்கள் விளாசினர். விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 49 ரன்கள் அடித்தார்.

    இந்த மூன்று பேரின் சிறப்பான ஆட்டத்தாலும், மற்ற வீரர்கள் ஓரளவிற்கு தங்களது பங்களிப்பை கொடுத்ததாலும் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வியான் முல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சில் 1 மற்றும் 0 என அவுட்டாக்கி அலற விட்டுள்ளார் அஸ்வின்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பது பேச்சுப் பொருளாக இருந்தது.

    மேலும் ஸ்மித் VS பும்ரா என்ற அளவிலேயே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்மித்தை திணற வைத்துள்ளார் அஸ்வின். அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 1 ரன்னில் ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின், இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்சில ரன்ஏதும் எடுக்கவிடாமல் டக்அவுட்டில் வெளியேற்றினார். இதனால் ஸ்மித் VS அஸ்வின் என போட்டி மாறியுள்ளது.
    மெல்போர்ன் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 195 ரன்னில் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர்களை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அடிலெய்டு படுதோல்வி குறித்து கவலை அடையாமல் புதுநம்பிக்கையுடன் விளையாடினர். அறிமுகமான முகமது சிராஜ் 2-வது செசனில் அற்புதமாக பந்து வீசினார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் முன்னதாகவே பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் மேத்யூ வடே, ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி சொந்த நாடு திரும்பியுள்ளார். அவர் பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘முதல் நாள் நமக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த காட்சி வெளியானது. திடமாக முடித்துவிட்டனர்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய பும்ரா, பொறுப்பற்ற நிலையில் விளையாடாமல் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வது உத்வேகமாக இருக்கும் என பும்ரா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்ட இந்தியா, தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்றைய ஆட்டத்திற்குப்பின் பும்ரா போட்டி குறித்து கூறுகையில் ‘‘எங்களுடைய மனதில் பழையதை புகுத்தி வைத்திருக்க விரும்பவில்லை. நேர்மறையாக இருக்க விரும்புகிறோம். கட்டுப்படுத்தக்கூடியதை கட்டுப்படுத்தவும். பொறுப்பற்றத்தன்மையுடன் இருக்காமல் நம்பிக்கையோடு விளையாடுவது முன்னோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும்.

    காலையில் விளையாடும்போது ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருந்தது. ஆகவே, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீசியதை நீங்கள் பார்க்க முடிந்தது. ஏனென்றால், நாங்கள் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது அஸ்வினை பயன்படுத்த முயற்சிப்போம். அஸ்வின் சிறப்பாக பந்தை பவுன்சராக வீசினார்.

    பந்து வீச்சாளர்களுக்கும் கேப்டனுக்கும் இடையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. முதல் செசனுக்குப்பின் ஆடுகளம் மாற்றம் அடைந்தது. பனி மறைந்த பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் சாதகமாக இருந்தது.

    நாங்கள் எந்த லைனில், எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆடுகளம் திட்டத்திற்கு உதவி செய்யவில்லை எனில், லைன் போன்றவற்றை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும்.

    எங்களால் இரண்டு முனையில் இருந்தும் நெருக்கடியை உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை. முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவ முயற்சி செய்வோம்.

    முகமது சிராஜ் மிகவும் பயிற்சி மேற்கொண்டார். முதல் செசனில் பந்து வீச ஆர்வமாக இருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பின் சிராஜ் கட்டுப்பாடுடன் சிறப்பாக பந்து வீசினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். அவரது திறமைக்கு நம்பிக்கை உதவியாக இருந்தது.

    மெல்போர்ன் ஆடுகளத்தில் 2-வது நாள் போட்டிங் செய்யும் அணி பெரும்பாலும் வெற்றி பெறும் என புள்ளிவிரம் கூறுகிறது எனச் சொல்லப்படுகிறது. அதுகுறித்து யோசிக்கவில்லை. எங்கள் கைகளில் உள்ள விசயங்களில் கவனம் செலுத்த விரும்புவோம். நாளை காலை முதல் செசன் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.
    ×