என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சில் 1 மற்றும் 0 என அவுட்டாக்கி அலற விட்டுள்ளார் அஸ்வின்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பது பேச்சுப் பொருளாக இருந்தது.

    மேலும் ஸ்மித் VS பும்ரா என்ற அளவிலேயே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்மித்தை திணற வைத்துள்ளார் அஸ்வின். அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 1 ரன்னில் ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின், இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்சில ரன்ஏதும் எடுக்கவிடாமல் டக்அவுட்டில் வெளியேற்றினார். இதனால் ஸ்மித் VS அஸ்வின் என போட்டி மாறியுள்ளது.
    மெல்போர்ன் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 195 ரன்னில் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர்களை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அடிலெய்டு படுதோல்வி குறித்து கவலை அடையாமல் புதுநம்பிக்கையுடன் விளையாடினர். அறிமுகமான முகமது சிராஜ் 2-வது செசனில் அற்புதமாக பந்து வீசினார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் முன்னதாகவே பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் மேத்யூ வடே, ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி சொந்த நாடு திரும்பியுள்ளார். அவர் பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘முதல் நாள் நமக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த காட்சி வெளியானது. திடமாக முடித்துவிட்டனர்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய பும்ரா, பொறுப்பற்ற நிலையில் விளையாடாமல் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வது உத்வேகமாக இருக்கும் என பும்ரா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்ட இந்தியா, தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்றைய ஆட்டத்திற்குப்பின் பும்ரா போட்டி குறித்து கூறுகையில் ‘‘எங்களுடைய மனதில் பழையதை புகுத்தி வைத்திருக்க விரும்பவில்லை. நேர்மறையாக இருக்க விரும்புகிறோம். கட்டுப்படுத்தக்கூடியதை கட்டுப்படுத்தவும். பொறுப்பற்றத்தன்மையுடன் இருக்காமல் நம்பிக்கையோடு விளையாடுவது முன்னோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும்.

    காலையில் விளையாடும்போது ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருந்தது. ஆகவே, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீசியதை நீங்கள் பார்க்க முடிந்தது. ஏனென்றால், நாங்கள் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது அஸ்வினை பயன்படுத்த முயற்சிப்போம். அஸ்வின் சிறப்பாக பந்தை பவுன்சராக வீசினார்.

    பந்து வீச்சாளர்களுக்கும் கேப்டனுக்கும் இடையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. முதல் செசனுக்குப்பின் ஆடுகளம் மாற்றம் அடைந்தது. பனி மறைந்த பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் சாதகமாக இருந்தது.

    நாங்கள் எந்த லைனில், எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆடுகளம் திட்டத்திற்கு உதவி செய்யவில்லை எனில், லைன் போன்றவற்றை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும்.

    எங்களால் இரண்டு முனையில் இருந்தும் நெருக்கடியை உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை. முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவ முயற்சி செய்வோம்.

    முகமது சிராஜ் மிகவும் பயிற்சி மேற்கொண்டார். முதல் செசனில் பந்து வீச ஆர்வமாக இருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பின் சிராஜ் கட்டுப்பாடுடன் சிறப்பாக பந்து வீசினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். அவரது திறமைக்கு நம்பிக்கை உதவியாக இருந்தது.

    மெல்போர்ன் ஆடுகளத்தில் 2-வது நாள் போட்டிங் செய்யும் அணி பெரும்பாலும் வெற்றி பெறும் என புள்ளிவிரம் கூறுகிறது எனச் சொல்லப்படுகிறது. அதுகுறித்து யோசிக்கவில்லை. எங்கள் கைகளில் உள்ள விசயங்களில் கவனம் செலுத்த விரும்புவோம். நாளை காலை முதல் செசன் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று மவுன்ட் மவுங்கானுயில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், டாம் பிளன்டெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லாதம் (4), பிளன்டெல் (5) சொற்ப ரன்களில் ஷாஹீன் அப்ரிடி பந்தில வீழ்ந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சனுடனும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

    அணியின் ஸ்கோர் 133 ரன்னாக இருக்கும்பேது ராஸ் டெய்லர் 70 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. 4-வது விக்கெட்டுக்கு வில்லியம்சனுடன் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை பிரிக்க முடியவில்லை. கேன் வில்லியம்சன் சதத்தை நெருங்கிய நிலையில், நியூசிலாந்து 87 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள்  ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கேன் வில்லியம்சன் 243 பந்தில் 94 ரன்கள் எடுத்தும், நிக்கோல்ஸ் 100 பந்தில் 42 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

    துவக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. 

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட 159 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷுப்மான் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவா:


    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.


    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.


    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 6-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.


    சென்னையின் எப்.சி. 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து 4 ஆட்டங்களுக்கு பிறகு கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்ததால், சென்னையின் எப்.சி. வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.

    ஈஸ்ட்பெங்கால் அணி 2 டிரா, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையேயான 100-வது போட்டியாகும்.


    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையேயான 100-வது போட்டியாகும். இரு அணிகள் மோதிய டெஸ்ட போட்டியில் இது 7-வது அதிகபட்சமாகும். ஒரு அணியுடன் இந்தியா 2-வது முறையாக 100-வது டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் 122 டெஸ்டில் விளையாடி உள்ளது.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக 351 டெஸ்டில் மோதி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் 160 டெஸ்டில் விளையாடி உள்ளன. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா 153 டெஸ்டிலும், இந்தியா -இங்கிலாந்து 122 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 116 டெஸ்டிலும், இங்கிலாந்து-நியூசிலாந்து 105 டெஸ்டிலும் மோதியுள்ளன.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்டில் இந்தியா 28-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

    இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-ம் ஆண்டு முதல் டெஸ்டில் விளையாடியது. அப்போது லாலாஅமர்நாத் கேப்டனாக இருந்தார். 25-வது டெஸ்டுக்கு பட்டோடியும், 50-வது டெஸ்டுக்கு அசாருதீனும், 75-வது டெஸ்டுக்கு கும்ப்ளேயும் கேப்டனாக பணியாற்றினர். தற்போது 100-வது டெஸ்டில் ரகானே கேப்டனாக உள்ளார்.

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.

    அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    இந்திய வீரர்கள் உற்சாகம்

    அதன்பின்னர் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 124 ஆக இருந்தபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அவரது ஓவரில் டிராவிஸ் ஹெட் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். 

    அடுத்த 10 ரன்களுக்குள் லபுசாக்னேவும் வெளியேறினார். அவர் 132 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்திருந்தார். 

    அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய, ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
    இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 38 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.

    அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கினார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.  

    இந்தியா சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. லாபஸ்சாக்னேவும் டிராவிஸ் ஹெட்டும் விளையாடி வருகின்றனர்.
    இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ், லாபஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ்.

    விராட் கோலி இந்தியா திரும்பியுள்ள நிலையில் கேப்டன் பொறுப்பு ரகானேவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    மவுண்ட் மாங்கனு:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மொகமது ரிஸ்வான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டாம் பிளெண்டல் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    போட்டியின் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்ற காரணமாக அமைந்த ரன்அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவ காரணம் கோலியின் ரன் அவுட்டும் முக்கிய காரணம். முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையில் இருந்த இந்திய அணி விரட் கோலியின் ரன்அவுட்டால் திடீரென தடுமாறியது.  ஆட்டத்தின் திருப்பு முனை என்றும் அதை சொல்லலாம்.

    நாதன் லயன் வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்தில் ரஹானே சிங்கிள் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால் விராட் கோலி ரன் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அதற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ரஹானே. ‘‘அந்த நாள் ஆட்டத்திற்கு பிறகு நான் கோலியிடம் சென்று நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் பரவாயில்லை விடுங்கள் என்றார். எங்கள் இருவருக்குமே ஆட்டத்தின் அந்த சூழல் தெரியும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். இருப்பினும் இது கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. அது மிகவும் கடினமான தருணம்’’ என்றார். 
    ×