search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-ஈஸ்ட்பெங்கால் அணிகள் இன்று மோதல்

    ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவா:


    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.


    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.


    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 6-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.


    சென்னையின் எப்.சி. 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து 4 ஆட்டங்களுக்கு பிறகு கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்ததால், சென்னையின் எப்.சி. வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.

    ஈஸ்ட்பெங்கால் அணி 2 டிரா, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×