என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 வருடத்தில் மூன்று விடிவிலான போட்டியிலும் சிறந்த வீரர்கள் யார் என்பதை வெளியிட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

    ஸ்டீவ் ஸ்மித்

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விராட் கோலி

    ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷித் கான்

    டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.

    மவுண்ட்மங்கானு:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ‌ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 401 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

    நியூசிலாநது வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    80 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. ஆபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்தில் ‘அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து முகமது அப்பாஸ், அசார்அலி, ஹாரிஸ் சோகைல், பவாத் ஆலம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் திரும்பினார்கள்.

    சவுத்தி, ஜேமிசன் தலா 2 விக்கெட்டும், போல்ட், வர்னர தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    7-வது விக்கெட்டான கேப்டன் முகமது ரிஸ்வான்- பகீம் அஸ்ரப் ஜோடி பாலோ ஆனை தவிர்க்க போராடினர்.

    பாலோஆனை தவிர்க்க பாகிஸ்தான் 232 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் 187 ரன்கள் எடுத்த போது கேப்டன் ரிஸ்வான் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த வீரரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது. இதனால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.

    நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது.
    மெல்போர்ன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்னும் (அவுட் இல்லை), சுப்மன்கில் 45 ரன்னும், ஜடேஜா 40 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 82 ரன்கள் முன்னிலை, கைவசம் 5 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது. ரஹானேவும், ஜடேஜாவும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    மிகவும் சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி ஆட்டம் தொடங்கிய 8-வது ஓவரில் பிரிந்தது.

    ரஹானே 112 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 223 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை அவர் எடுத்தார்.

    அப்போது ஸ்கோர் 294 ஆக இருந்தது.ரஹானேவும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 121 ரன் எடுத்தது மிகவும் முக்கியமானதாகும். அடுத்து அஸ்வின் களம் வந்தார்.

    மறுமுனையில் இருந்த ஜடேஜா சிறப்பாக ஆடி 50 ரன்னை எடுத்தார். 50-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 15-வது அரை சதமாகும்.

    103.5-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது. ஜடேஜா 57 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 306 ஆக இருந்தது.

    அதன் பிறகு எஞ்சிய 3 விக்கெட்டுகள் 20 ரன்னில் எளிதில் சரிந்தன. உமேஷ் யாதவ் 9 ரன்னிலும், அஸ்வின் 14 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

    இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.

    ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார்.

    ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஜோபர்ன்ஸ் 4 ரன்னில் அவரது பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 4 ஆகும்.

    2-வது விக்கெட்டுக்கு மேத்யூ வாடேயுடன் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. குறிப்பாக லபுசேன் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்.

    அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சால் இந்த ஜோடியை பிரித்தார். லபுசேன் 28 ரன்னில் வெளியேறினார். 42 ரன்னில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து வந்த சுமித் 8 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஹெட் மேத்யூ வாடே ஜோடி நிதனாமாக விளையாடியது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். 137 பந்துகள் சந்தித்து நம்பிக்கையுடன் விளையாடி மேத்யூ வாடே எல்பிடபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ஹெட்டும் கேப்டன் பெய்னும் நடையை கட்டினர்.

    அப்போது ஆஸ்திரேலியா அணியின் ரன்னின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது, இதனையடுத்து இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டும் பும்ரா, சிராஜ், அஸ்வின் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பாக்சிங்டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும் என ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார்.

    மெல்போர்ன்:

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி “பாக்சிங்டே” என்று அழைக்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய 2-வது போட்டியான பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது 12-வது சதம் இதுவாகும். 112 ரன்களை எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.

    மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரஹானே பெற்றார். இதற்கு முன்பு தெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் சதம் அடித்து இருந்தார்.

    இந்த நிலையில் ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஹானேவின் சதம் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்படும். நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் இதுவும் ஒன்று என்று கடந்த விட முடியாது. பாக்சிங் டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும்.

    ஆட்டத்தின் போக்கு, ஆடுகள தன்மை, உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு என அனைத்துடன் கடுமையாக போராடி ரஹானே இந்த சதத்தை அடித்தார். இதனால் தான் இதை சிறந்த சதங்களில் ஒன்றுஎன்று கருதுகிறேன்.

    ரஹானேவின் சிறந்த ஆட்டத்துக்கு இது ஒரு உதாரணமாகும். கோலி இல்லாத நிலையில் அணியின் ஆட்டத்தை பார்த்து அவரே அசந்து போய் இருப்பார்.

    இவ்வாறு வார்னே கூறினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரஹானேவின் அபார சதத்தால் இந்திய அணி 326 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மான் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் சரமாரி தாக்குதல் தொடுத்து இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். சுப்மான் கில் (45 ரன், 65 பந்து, 8 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் புஜாராவுக்கும் (17 ரன், 70 பந்து) பந்து பேட்டில் முத்தமிட்டு விக்கெட் கீப்பர் பெய்னிடம் தஞ்சமடைந்தது.

    இதன் பின்னர் கேப்டன் அஜிங்யா ரஹானேவும், ஹனுமா விஹாரியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆடுகளத்தில் பந்து பவுன்சுடன் நன்கு சுழன்றும் திரும்பியது. ஆனாலும் அவற்றை திறம்பட சமாளித்து, ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்திய இவர்கள் ஸ்கோர் 116 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். விஹாரி 21 ரன்னில் (66 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார்.

    அடுத்து களம் கண்டு துரிதமான ரன்சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (29 ரன், 40 பந்து, 3 பவுண்டரி) ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அப்போது இந்தியா 5 விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.

    இதைத் தொடர்ந்து ரஹானேவுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடியதுடன் கடைசி பகுதியில் தங்களது ஆதிக்கத்தையும் நிலை நாட்டினர். ரஹானே பக்கம் அதிர்ஷ்டக் காற்றும் வீசியது. புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகு மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ரஹானே 73 ரன்னில் இருந்த போது கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை ‘ஸ்லிப்’பில் நின்ற ஸ்டீவன் சுமித் நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அசத்திய ரஹானே பவுண்டரி அடித்து தனது 12-வது சதத்தை நிறைவு செய்தார். கடினமான சூழலில் அவரது கம்பீரமான பேட்டிங் இந்திய அணி முன்னிலை பெற உதவியது.

    மறுமுனையில் தாக்குப்பிடித்த ஜடேஜாவும் அவருக்கு சூப்பராக ஒத்துழைப்பு தந்தார். ரஹானே 104 ரன்னில் இருந்த போது வழங்கிய மற்றொரு கேட்ச் வாய்ப்பை டிராவிஸ் ஹெட் கோட்டை விட்டார்.

    இந்திய அணி 91.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக தேனீர் இடைவேளையின் போதும் மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

    3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 326 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன்ரஹானே 112,  ஜடேஜா 57  ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும் , கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸ்சில் விளையாட உள்ளது.
    ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறுகிறது என்று இந்திய அறிமுக வீரர் சுப்மான் கில் கூறியுள்ளார்.

    2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அறிமுக வீரர் சுப்மான் கில்நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய கேப்டன் ரஹானேவின் இன்னிங்ஸ் பற்றி சொல்வது என்றால், அது பொறுமையை சார்ந்த விஷயம். அவர் பொறுமையாக செயல்பட்டார். இது போன்ற தரமான பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ளும் போது அது தான் அவசியம். ரஹானே விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. முதல் நாளில் அஸ்வின், ஜடேஜாவின் பந்து வீச்சு ஓரளவு சுழன்று திரும்பியது. 2-வது நாளில் நாதன் லயன் வீசிய பந்துகளும் சற்று சுழன்றதை பார்க்க முடிந்தது. நிச்சயம் ஆடுகளத்தில் மேலும் வெடிப்புகள் உருவாகும். அதன் பிறகு ரன் எடுப்பது பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சவாலாகி விடும். எனவே தற்போதைய ஸ்கோர் முன்னிலையை நாங்கள் சரியாக பயன்படுத்தி முன்னெடுத்து செல்ல வேண்டும். அதன் பிறகு 2-வது இன்னிங்சில் முடிந்தவரை விரைவில் ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் ஆக்க வேண்டும்’ என்றார்.

    ரிஷாப் பண்டின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்டில் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 250-ஆக உயர்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ‘பந்து மிருதுவானதும் ஆடுகளத்தில் எந்த சலனமும் இல்லாததை நாங்கள் உணர்ந்தோம். அதனால் பேட்டிங்குக்கு சாதகமாக மாறிவிட்டது. எனவே நாங்கள் மீண்டும் பேட் செய்யும் போது மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம். ரஹானேவின் பேட்டிங் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். சதத்திற்கு முன்பாக அவரை 3-4 தடவை நாங்கள் அவுட் செய்திருக்கலாம். வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலியுடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடியதாக, மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெக்தீப் தன்கார் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான சவுரவ் கங்குலி இருந்து வருகிறார்.

    இவர் இன்று மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெக்தீப் தன்காரை சந்தித்துள்ளார். இதுகறித்து கவர்னர் கூறுகையில் ‘‘பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடப்பட்டது. 1864-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் பழமையான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான் அவரது அழைப்பு ஏற்றுக் கொண்டேன்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டதால், ரஹானே சதம் அடித்ததுடன் இந்தியா 2-வது நாள் முடிவில் 277 ரன்கள் அடித்துவிட்டது.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    ரஹானேவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டு உதவி புரிந்தனர். நாங்கள் ரஹானேவை ஐந்து முறையாக அவுட் செய்திருக்கனும் என மிட்செல் ஸ்டார்க் கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘ரஹானேயின் சதம் மிகவும் சிறப்பு. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு தலைமை தாங்கி இந்திய அணி என்ற கப்பலை நிலைநிறுதிக் கொண்டார். 

    இங்கே (மெல்போர்ன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பு ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கினார். அதில் மூன்று அல்லது நான்கு முறை அவுட் செய்திருக்கனும். ஆனால் ரன்அடிக்க வேண்டும் என் அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
    ஐசிசி அறிவித்துள்ள ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் டோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். வங்காளதேசத்தின் ஷாகிப் அல்-ஹசனுக்கும் இடம் கிடைத்துள்ளது.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை கொண்டு கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.

    டி20-யை போன்று ஒருநாள் அணிக்கும் எம்எஸ் டோனியை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுணடர் ஷாகிப் அல்-ஹசனும் இடம் பிடித்துள்ளார்.

    ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணி:-

    1. ரோகித் சர்மா,  2. டேவிட் வார்னர்,  3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷாகிப் அல் ஹசன்,  6. எம்எஸ் டோனி,  7. பென் ஸ்டோக்ஸ், 8. மிட்செல் ஸ்டார்க், 9. டிரென்ட் போல்ட், 10. இம்ரான் தஹிர், 11. லசித் மலிங்கா.
    ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

    தேர்வு செய்வதற்கான கால வரையறைக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிகமான சதங்கள் அடித்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:

    1. அலஸ்டைர் குக், 2. டேவிட் வார்னர், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி,  5. ஸ்டீவ் ஸ்மித், 6. குமார் சங்ககரா, 7. பென் ஸ்டோக்ஸ், 8.  அஸ்வின், 9. டேல் ஸ்டெயின், 10, ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இடம் பிடித்துள்ள நிலையில் டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.  மேலும், இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ரோகித் சர்மா, விராட் கோலி

    ஐசிசி அறிவித்துள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

    1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் பிஞ்ச், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. எம்எஸ் டோனி (விக்கட் கீப்பர்& கேப்டன்), 8. பொல்லார்ட், 9. ரஷித் கான், 10, பும்ரா,  11. மலிங்கா.
    இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமான 298-வது இந்திய வீரர் ஆவார்.அவர் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் ரகானே, பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது.

    ‘இன்ஸ்விங்’ பந்து வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை சுவிங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகமது சிராஜ் தனது இன்ஸ்விங் பந்து மூலம் லபுசேன், கேமரூன்கிரீன் ஆகியோரை அவுட் செய்தார்.

    ×