என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாக்சிங்டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்று - ரஹானேவுக்கு வார்னே பாராட்டு
மெல்போர்ன்:
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி “பாக்சிங்டே” என்று அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய 2-வது போட்டியான பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது 12-வது சதம் இதுவாகும். 112 ரன்களை எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.
மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரஹானே பெற்றார். இதற்கு முன்பு தெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் சதம் அடித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஹானேவின் சதம் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்படும். நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் இதுவும் ஒன்று என்று கடந்த விட முடியாது. பாக்சிங் டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆட்டத்தின் போக்கு, ஆடுகள தன்மை, உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு என அனைத்துடன் கடுமையாக போராடி ரஹானே இந்த சதத்தை அடித்தார். இதனால் தான் இதை சிறந்த சதங்களில் ஒன்றுஎன்று கருதுகிறேன்.
ரஹானேவின் சிறந்த ஆட்டத்துக்கு இது ஒரு உதாரணமாகும். கோலி இல்லாத நிலையில் அணியின் ஆட்டத்தை பார்த்து அவரே அசந்து போய் இருப்பார்.
இவ்வாறு வார்னே கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்