என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக பிசிபி தலைவர் மானி தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் தொடர்கள் பல ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் (2021) தொடர்ச்சியாக ஒவ்வொரு அணிகளும் விளையாட இருக்கின்றன.

    அந்த வகையில் பாகிஸ்தான் அடுத்த வருடம் 10 இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாட இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.

    இதில் 9 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகள் அடங்கும். வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இதில் அடங்காது. நியூசிலாந்த அணி உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் செல்கிறது. அதன்பின் இங்கிலாந்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    பிங்க்-பால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், பேட் கம்மின்ஸ் சிகப்பு பந்தில் டெஸ்ட் போட்டிகள் நடப்பதையே விரும்புகிறார்.
    ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். பிங்க்-கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் இவர்தான்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, டெஸ்ட் போட்டிகள் பிங்க்-பாலில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் பேட் கம்மின்ஸ் சிகப்பு பந்துகளை பயன்படுத்த வேண்டும். இதுதான் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமமான அளவு போட்டியை கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘நான் இன்னும் டெஸ்ட் போட்டியில் சிகப்பு பந்தை பயன்படுத்துவதை விரும்புகிறேன். பிங்க்-பாலில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடத்துவது சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விரல்கள் முறிந்த நிலையிலும், சிறிதும் அஞ்சாமல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் நீல் வாக்னர்.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய யார்க்கர் பந்து நீல் வாக்னரில் வலது கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதில் அவரது இரண்டு விரல்கள் முறிந்தன.

    என்றாலும் வலி நிவாரணம் (Pain Killer) ஊசியை போட்டுக்கொண்டு முதல் இன்னிங்சில் 21 ஓவர்கள் வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சிலும் 28 ஓவர்கள் வீசிய 2 விக்கெட் கைப்பற்றினார். விரல்கள் முறிந்த நிலையிலும், வலி நிவாரணம் ஊசியை போட்டுக்கொண்டு அணியின் வெற்றிக்காக அஞ்சாமல் பந்து வீசிய நீல் வாக்னரை பாகிஸ்தான் அணி வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

    ஆனால் நீல் வாக்னர் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    இரண்டு வார கோரன்டைனை முடித்த, இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மெல்போர்னில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடியபோது ரோகித் சர்மா காயம் அடைந்தார். இதனால் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்லவில்லை. இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான உடற்பயிற்சியை மேற்கொண்டார்.

    உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற ரோகித் சர்மா கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் 14 நாட்கள் கோரன்டைனில் இருக்க வேண்டியதாயிற்று. இதனால் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் டெஸ்ட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

    29-ந்தேதியுடன் அவரது கோரன்டைன் முடிவடைந்தது. இதனால் சிட்னியில் இருந்து மெல்போர்ன் வந்து இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மெல்போர் வந்த அவருக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    சிட்னியில் நடைபெற இருக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட இருக்கிறார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசிய கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்ரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் இடத்தில் இருந்தார். இந்திய அணி கேப்டன் விரா் கோலி 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    கேன் வில்லியம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதமும், பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சதமும் விளாசினார். அதேசமயம் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளில் 1, 1 (நாட்அவுட்), 0, 8 என நான்கு இன்னிங்சில் 10 ரன்களே அடித்தார். விராட் கோலி அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் அடித்தார். 2-வது இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-வது இடத்தில் இருந்து கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 4-வது இடத்தில் லாபஸ்சேன் உள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த ரகானே 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கோவா அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கோவா-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வீரர் அரிடேனே 58-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    ஆனால் கடைசி நிமிடங்களில் கோவா அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி வீரர்கள் இஷான் பன்டிட்டா 87-வது நிமிடத்திலும், இகோர் அங்குலோ 91-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 14 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 3 தோல்வியை (8 ஆட்டங்கள்) சந்தித்தது. அந்த அணி 2 வெற்றி, 3 டிரா பெற்றிருக்கிறது.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 2-ந் தேதி நடக்கும் ஆட்டத்தில் மும்பை-கேரளா அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகி உள்ள நிலையில் ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.

    இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். அவர் நாடு திரும்புகிறார்.

    இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ‌ஷர்துல் தாகூர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உமேஷ் யாதவுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூரை 3-வது டெஸ்டில் விளையாட இந்திய அணி நிர்வாகம் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க இருந்தது. 

    இந்தநிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இப்போட்டித்தொடர் 2022-ம் ஆண்டு நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 
    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் பேட்ஸ்மேன் மீது ரிக்கி பாண்டிங் பாய்ந்துள்ளார்.

    சிட்னி:

    மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னும், 2-வது இன்னிங்சில் 200 ரன்னும் எடுத்தது.

    ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாய்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட் போட்டியில் எத்தனை புல்-ஷாட்டுகள் விளையாடப்பட்டுள்ளன என்பதை என்னால் ஒரு கையால் எண்ண முடியும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட சுப்மன்கில் மற்றும் ரகானே ஆகியோர் அதிகமான புல்-ஷாட்டுகளை விளையாடினார்கள் என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்காளதேச கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 முன்னணி வீரர்கள் கொரோனா பயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வருகிற 10-ந்தேதி வங்காளதேசம் சென்றடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜனவரி 20-ந்தேதி முதலாவது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது. 

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர், பொல்லார்ட், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், காட்ரெல் உள்பட 10 முன்னணி வீரர்கள் கொரோனா பயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வங்காளதேச தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் டெஸ்ட் அணிக்கு கிரேக் பிராத்வெய்டும், ஒரு நாள் போட்டி அணிக்கு ஜாசன் முகமதுவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கடினமான பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் எளிதான பிரிவில் பிவி சிந்தும் இடம் பெற்றுள்ளனர்.
    பாங்காக்:

    யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும், டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் ரசிகர்கள் இன்றி பாங்காக்கில் நடக்கிறது. இந்த போட்டிகளில் யார்-யாருடன் மோதுவது என்ற விவரம் குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. 

    இதன்படி 10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் யோனக்ஸ் ஓபனில் முதல் ரவுண்டில் 4-ம் நிலை வீராங்கனை நஜோமி ஒகுஹராவையும் (ஜப்பான்), மற்றொரு போட்டியில் முதல் சுற்றில் உள்ளூர் நட்சத்திரமும், முன்னாள் உலக சாம்பியனுமான ராட்சனோக் இன்டானோனையும் சந்திக்கிறார். 

    அதே சமயம் மற்றொரு இந்திய வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்துவுக்கு தொடக்க சுற்றுகள் எளிதாக அமைந்துள்ளது. யோனக்ஸ் போட்டியில் முதல் சுற்றில் மியா பிளிச்பெல்டையும் (டென்மார்க்), இன்னொரு தொடரில் தாய்லாந்து மங்கை புசானனையும் எதிர்கொள்கிறார். ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா, எச்.எஸ்.பிரனாய், காஷ்யப், லக்‌ஷயா சென், சாய்பிரனீத், சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்களும் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சத்தால் இந்த போட்டிகளில் இருந்து சீன வீரர்கள் விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

    சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

    சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாஅதிலிருந்து மீண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் கொரோனா நெறிமுறை காரணமாக சிட்னியில் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    2 வார தனிமைக்கு பிறகு அவர் மெல்போர்ன் சென்று இந்திய அணியுடன் இணைந்தார். அங்கு அவர் பயிற்சியை தொடங்க உள்ளார்.

    இதற்கிடையே ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்விஷாவுக்கு பதிலாக 2-வது டெஸ்டில் சுப்மன்கில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் 3-வது டெஸ்டிலும் சுப்மன்கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அணியில்ரோகித் சர்மா இணைந்திருப்பதால், 3-வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா

    அணியில் மயங்க் அகர்வாலை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். ஒவ்வொரு வீரருக்கும் சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

    டாப் ஆர்டரில் சுப்மன்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவரை 5-வது வீரராக களம் இறக்க வேண்டும் அது அவரது நிலையான இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    சுப்மன்கில் 5-வது வீரராக களம் இறக்கப்பட்டால், விகாரி நீக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×