என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா: உற்சாக வரவேற்பு
Byமாலை மலர்31 Dec 2020 10:17 AM GMT (Updated: 31 Dec 2020 10:17 AM GMT)
இரண்டு வார கோரன்டைனை முடித்த, இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மெல்போர்னில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.
ஐபிஎல் தொடரில் விளையாடியபோது ரோகித் சர்மா காயம் அடைந்தார். இதனால் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்லவில்லை. இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான உடற்பயிற்சியை மேற்கொண்டார்.
உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற ரோகித் சர்மா கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் 14 நாட்கள் கோரன்டைனில் இருக்க வேண்டியதாயிற்று. இதனால் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் டெஸ்ட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
29-ந்தேதியுடன் அவரது கோரன்டைன் முடிவடைந்தது. இதனால் சிட்னியில் இருந்து மெல்போர்ன் வந்து இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மெல்போர் வந்த அவருக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிட்னியில் நடைபெற இருக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட இருக்கிறார்.
Look who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia#AUSvINDpic.twitter.com/uw49uPkDvR
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X