என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

    சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாஅதிலிருந்து மீண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் கொரோனா நெறிமுறை காரணமாக சிட்னியில் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    2 வார தனிமைக்கு பிறகு அவர் மெல்போர்ன் சென்று இந்திய அணியுடன் இணைந்தார். அங்கு அவர் பயிற்சியை தொடங்க உள்ளார்.

    இதற்கிடையே ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்விஷாவுக்கு பதிலாக 2-வது டெஸ்டில் சுப்மன்கில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் 3-வது டெஸ்டிலும் சுப்மன்கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அணியில்ரோகித் சர்மா இணைந்திருப்பதால், 3-வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா

    அணியில் மயங்க் அகர்வாலை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். ஒவ்வொரு வீரருக்கும் சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

    டாப் ஆர்டரில் சுப்மன்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவரை 5-வது வீரராக களம் இறக்க வேண்டும் அது அவரது நிலையான இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    சுப்மன்கில் 5-வது வீரராக களம் இறக்கப்பட்டால், விகாரி நீக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணியின் எழுச்சியில் ஆச்சரியமில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எந்த ஒரு அணியும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் போது, அடுத்த போட்டியில் கொஞ்சம் கடினமாகவே மீண்டெழுவார்கள் என்பது தெரியும். எனவே இந்திய அணி சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதில் உண்மையில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

    இந்த தொடரில் நான் இந்திய வீரர் புஜாராவை 3 முறை வீழ்த்தியிருக்கிறேன். அவருக்கு என்று நான் பிரத்யேக திட்டம் வகுத்து பந்து வீசவில்லை. பந்தை துல்லியமாக வீச முயற்சிக்கிறேன் அவ்வளவு தான். பந்தை அடிப்பதா அல்லது விடுவதா? என்பது அவரது முடிவை பொறுத்தது. என்னுடைய பணி, முடிந்தவரை சிறப்பாக பந்து வீசுவது. அதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் இதுவரை அவரது இன்னிங்சை சீக்கிரமாக முடித்து வைத்திருக்கிறேன்.

    ஸ்டீவன் சுமித் முதல் இரு டெஸ்டில் ரன் குவிக்காதது குறித்து கேட்கிறீர்கள். இதனால் அவருக்கு எந்த நெருக்கடியும் இருக்காது. அவர் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன். ஒவ்வொரு வீரர்களுக்கும் இது போல் ஏற்றம், இறக்கம் இருக்கத் தான் செய்யும். நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் அசத்துவார். மேலும் டேவிட் வார்னரின் வருகை அணிக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக இருக்கும்.

    சிட்னியில் மீண்டும் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நாங்கள் சிறந்த சாதனைகளை வைத்துள்ளோம். கிட்டத்தட்ட மெல்போர்ன் ஆடுகளம் போன்று தான் இருக்கும். பொதுவாக இங்குள்ள ஆடுகளம் வறண்டும், வேகம் குறைந்தும் காணப்படும். நாதன் லயன் பந்தை நன்கு சுழலச் செய்வார். அனேகமாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் இறங்குவோம் என்று நினைக்கிறேன். எங்களிடம் லபுஸ்சேன் இருக்கிறார். அவர் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உணவு கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.
    ஜெய்ப்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாரூதினுடன் 3 பேர் இருந்தனர்.

    ரந்தம்போர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் இருந்த உணவு கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் காயங்கள் இன்றி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேசமயம் உணவு கடையின் ஊழியர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினர். அதனைத் தொடர்ந்து அசாருதீன் மற்றொரு காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றார்.
    சிட்னியில்தான் 3-வது போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இரு அணி வீரர்களும் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்றில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற யூகச் செய்திகள் வெளியாகின.

    ஆனால் திட்டமிட்டபடி சிட்னியில்தான் 3-வது டெஸ்ட் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.

    மெல்போர்ன் டெஸ்ட் நேற்றுடன் முடிவடைந்தது. இந்திய அணி வீரர்கள் நாளை மெல்போர்னில் இருந்து சிட்னி செல்வதாக இருந்தது. ஆனால் சிட்னியில் கொரோனா தொற்று இருப்பதால் ஜனவரி 4-ந்தேதி வரை சிட்னி செல்ல வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் மெல்போர்ன் நகரிலேயே தங்கியிருந்து, பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்களும் மெல்போர்னில்தான் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். சிட்னியில் இரண்டு நாட்கள் மட்டுமே பயற்சி மேற்கொண்டு நேரடியாக போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள்.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
    நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஆஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது.

    மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

    இதனால் நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
    இந்திய டெஸ்ட் தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வார்னர் இடம் பிடித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் சமநிலைப் பெற்றுள்ளது.

    முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்தரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. தற்போது காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதால் கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் பெய்ன் (கேப்டன்), 2. சீன் அப்போட், 3. பேட் கம்மின்ஸ், 4. கேமரூன் கிரீன், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. டிராவிட் ஹெட், 8. மோசஸ் ஹென்ரிக்ஸ், 9. மார்னஸ் லாபஸ்சேன், 10. நாதன் லயன், 11. மைக்கேல் நேசர், 12. ஜேம்ஸ் பேட்டின்சன், 13. வில் புகோவ்ஸ்கி, 14. ஸ்டீவ் ஸ்மித், 15. மிட்செல் ஸ்டார்க், 16. மிட்செல் ஸ்வெப்சன், 17. மேத்யூ வடே, 18. டேவிட் வார்னர்.
    மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி பாக்சிங் டே டெஸ்டாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கேன் வில்லியம்சன் 129 ரன்கள் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 239 ரன்னில் சுருண்டது. 192 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. டாம் லாதம் 53 ரன்களும், டாம் பிளன்டல் 64 ரன்களும் அடிக்க 180 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக 372 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

    அசார் அலி 34 ரன்களுடனும், ஃபவத் அலாம் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அசார் அலி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஃபவத் அலாம் உடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. எவ்வளவு தாக்குப்பிடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

    இவர்கள் இருவரும் விளையாடியதை பார்க்கும்போது போட்டி டிராவை நோக்கி சென்றது. அணியின் ஸ்கோர் 240 ரன்கள் இருக்கும்போது ரிஸ்வான் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ரிஸ்வான் 191 பந்துகள் சந்தித்தார்.

    எதிர்முனையில் விளையாடிய ஃபவத் அலாம் சதம் அடித்தார். ஆனால் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலாம் 269 பந்துகள் சந்தித்தார். இந்த ஜோடி 63.2 ஓவர்கள் எதிர்கொண்டது. 240, 242 ரன்களுகளில் அடுத்தத்த முக்கிய விக்கெட்டை பாகிஸ்தான் இழந்ததால் தடுமாற ஆரம்பித்தது.

    யாசிர் ஷா 0 ரன்னிலும், முகமது அப்பாஸ் 1 ரன்னிலும் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 123.3 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா தாக்குப்பிடித்து விளையாட முடிவு செய்தனர்.

    ஐந்து ஓவர்களை தாக்குப்பிடித்து விட்டால் போட்டியை டிரா செய்து விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் முதல் ஓவரிலேயே நசீம் ஷா ஆட்டமிழந்தார். இதனால் நான்கு ஓவர் மீதமுள்ள நிலையில், நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.
    இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 396 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 621 ரன்களும் குவித்தன. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 5 வீரர்கள் காயத்தில் சிக்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.

    ‘நல்லவேளையாக நாங்கள் 21 வீரர்களை அழைத்து வந்தோம். இல்லாவிட்டால் அடுத்த டெஸ்டில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 3-வது வரிசையிலும், நான் 4-வது வரிசையிலும் ஆட வேண்டியது இருந்திருக்கும்’ என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார். 

    இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
    முதல் இன்னிங்சில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. 4-வது நாள் ஆட்டத்தில் 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

    அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டபின், அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய நான்கு பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    இந்நிலையில், முதல் இன்னிங்சில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரவிசாஸ்திரி கூறுகையில், முதல் இன்னிங்சில் ரகானே இறங்கிய போது 2 விக்கெட்டை இழந்திருந்தோம். அதன்பிறகு 6 மணிநேரம் பேட்டிங்கில் போராடினார். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் பேட்டிங்குக்கு கடினமான அந்த நாளில் 6 மணி நேரம் கவனம் செலுத்துவது நம்ப முடியாத ஒன்று. அவரது இன்னிங்ஸ் தான் (112 ரன்) இந்த டெஸ்டில் திருப்பு முனையாகும். விராட் கோலி, ரகானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக் கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரகானே பொறுமையாக செயல்படுவார்.

    முதல் டெஸ்டில் மோசமாக தோற்று அதன் பிறகு வலுவாக மீண்டெழுந்து வெற்றி பெற்ற வகையில், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும் என  தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
    மவுண்ட்மங்கானு:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ‌ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. கேப்டன் ரிஸ்வான் 72 ரன்கள் எடுத்திருந்தார். சிறப்பாக ஆடிய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் மற்றும் பிளெண்டல் ஆகியோர் அரை சதமடித்தனர். 45.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அந்த அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய அசார் அலி ஃபவாத் ஆலம் ஆகியோர் நிதானமாக ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 34 ரன்னுடனும், ஆலம் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    செஞ்சூரியனில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. பாக்சிங் டே டெஸ்ட் ஆன இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 396 ரன்கள் குவித்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டீன் எல்கர் 95 ரன்களும், எய்டன் மார்கிராம் 68 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிஸ்சிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் டு பிளிஸ்சிஸ், டெம்பா பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். டெம்பா பவுமா 71 ரன்னில் வெளியேறினார். கேஷவ் மகாராஜ் 73 ரன்கள் அடிக்கவும், டு பிளிஸ்சிஸ் இரட்டை சதத்தை நோக்கி சென்றார்.

    ஆனால் டு பிளிஸ்சிஸ் 199 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா 621 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா 142.1 ஓவரிகள் விளையாடியது. ஓவருக்கு சராசரியாக 4.37 ரன்கள் அடித்திருந்தது. இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    225 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. குசால் பெரேரா 33 ரன்களுடனும், தினேஷ் சண்டிமல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. குசால் பெரேரா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். சண்டிமல் 25 ரன்னில் வெளியேறினார். வனிந்து ஹசரங்காவைத் (59) தவிர மற்ற வீரர்கள் சொந்த ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதனால தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜோ, வியான் முல்டர், சிபம்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 199 ரன்கள் விளாசிய டு பிளிஸ்சிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில்தான் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்தது.

    3-வது போட்டி அடுத்த மாதம் 7-ந்தேதி சிட்னியிலும், 4-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 5-ந்தேதியும் தொடங்குகிறது.

    சிட்னி நகரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சிட்னி நகரம் அமைந்துள்ள மாநிலத்தை ஒட்டியுள்ள மற்ற மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாடகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன.

    இதனால் 3-வது போட்டி சிட்னியில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணைப்படி 3-வது போட்டி சிட்னியில்தான் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

    மாநில அரசிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
    ×