என் மலர்
விளையாட்டு
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாஅதிலிருந்து மீண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் கொரோனா நெறிமுறை காரணமாக சிட்னியில் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.
2 வார தனிமைக்கு பிறகு அவர் மெல்போர்ன் சென்று இந்திய அணியுடன் இணைந்தார். அங்கு அவர் பயிற்சியை தொடங்க உள்ளார்.
இதற்கிடையே ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்விஷாவுக்கு பதிலாக 2-வது டெஸ்டில் சுப்மன்கில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் 3-வது டெஸ்டிலும் சுப்மன்கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அணியில்ரோகித் சர்மா இணைந்திருப்பதால், 3-வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அணியில் மயங்க் அகர்வாலை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். ஒவ்வொரு வீரருக்கும் சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
டாப் ஆர்டரில் சுப்மன்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவரை 5-வது வீரராக களம் இறக்க வேண்டும் அது அவரது நிலையான இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சுப்மன்கில் 5-வது வீரராக களம் இறக்கப்பட்டால், விகாரி நீக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாரூதினுடன் 3 பேர் இருந்தனர்.
ரந்தம்போர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் இருந்த உணவு கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேசமயம் உணவு கடையின் ஊழியர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினர். அதனைத் தொடர்ந்து அசாருதீன் மற்றொரு காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. 4-வது நாள் ஆட்டத்தில் 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டபின், அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய நான்கு பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், முதல் இன்னிங்சில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரவிசாஸ்திரி கூறுகையில், முதல் இன்னிங்சில் ரகானே இறங்கிய போது 2 விக்கெட்டை இழந்திருந்தோம். அதன்பிறகு 6 மணிநேரம் பேட்டிங்கில் போராடினார். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் பேட்டிங்குக்கு கடினமான அந்த நாளில் 6 மணி நேரம் கவனம் செலுத்துவது நம்ப முடியாத ஒன்று. அவரது இன்னிங்ஸ் தான் (112 ரன்) இந்த டெஸ்டில் திருப்பு முனையாகும். விராட் கோலி, ரகானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக் கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரகானே பொறுமையாக செயல்படுவார்.
முதல் டெஸ்டில் மோசமாக தோற்று அதன் பிறகு வலுவாக மீண்டெழுந்து வெற்றி பெற்ற வகையில், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. கேப்டன் ரிஸ்வான் 72 ரன்கள் எடுத்திருந்தார். சிறப்பாக ஆடிய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் மற்றும் பிளெண்டல் ஆகியோர் அரை சதமடித்தனர். 45.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அந்த அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய அசார் அலி ஃபவாத் ஆலம் ஆகியோர் நிதானமாக ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 34 ரன்னுடனும், ஆலம் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






