என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மா, நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார். அவர் 3-வது போட்டியில் விளையாடுகிறார்.
    இந்திய அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.

    3-வது போட்டியில் விளையாட உடற்தகுதி பெற்றதால் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கோரன்டைனில் இருக்கிறது. 14 நாட்கள் முடிவடைந்ததையொட்டி நாளை மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியுடன் ரோகித் சர்மா இணைகிறார்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மெல்போர்னிலேயே 3-வது போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மெல்போர்ன் வந்து அணியுடன் இணைகிறார்.

    3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா அணியில் இணைய இருப்பது குறித்து ஆர்வமாக இருக்கிறோம்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலங்கை எட்டி, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

    அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டபின், அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய நான்கு பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    இந்த வெற்றியை பாராட்டிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த போட்டியில் அபாரமான வெற்றி. இது முற்றிலும் ஒட்டுமொத்த அணியின் அபாரமான முயற்சி. இந்திய அணியின் இளம்வீரர்கள் மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் இந்த சிறப்பு வாய்ந்த வெற்றியால், இதற்கு மேல் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இதில் இருந்து முன்னோக்கிச் செல்வோம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி இல்லாமல் கிடைத்த இந்த வெற்றி அபாரமான சாதனை. மோசமான முதல் போட்டி தோல்வியை பின்னிக்குத்தள்ளி கேரக்டரை வெளிப்படுத்தியதை, விரைவாக மீண்டு வந்ததை விரும்புகிறேன். மிகச்சிறப்பான வெற்றி. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட் இழப்பிற்கு எட்டி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் 7-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் ஐசிசி 40 சதவீதம் அபராதம் விதித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளில் இருந்து நான்கை குறைத்துள்ளது.
    ஐஎஸ் எல் கால்பந்து போட்டியின் 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணியும் ஏ.டி.கே. மோகன் பகான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது.

    இன்று 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னையில் எப்.சி. அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை அணியில் ரகீம் அலி எஸ்மெல் கோன்கால்வ்ஸ், அனிரூத் தாபா போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் பலம் வாய்ந்த ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    ஏ.டி.கே.மோகன் பகான் அணி 7 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் தோல்வி ஒரு டிராவும் பெற்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணியில் நட்சத்திர வீரராக ராய் கிருஷ்ணா உள்ளார். அவர் இதுவரை 5 கோல் அடித்துள்ளார். அந்த அணி 6-வது வெற்றியை பெற்று முதலிடத்தில் முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்களை இந்திய வீரர்கள் தகர்ந்தெறிந்துள்ளனர்.

    பாக்சிங்டே டெஸ்டில் இந்திய அணியில் பேட்ஸ்மேன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அறிமுகமானார்கள். இதில் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இதில் அவர் லபுஸ்சேன், கேமருன் கிரீன், ஹெட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீர்த்தினார். அதேபோல் சுப்மன்கில் முதல் இன்னிங்சில் 45 ரன்னும், 2-வது இன்னிங்சில் 35 ரன்னும் எடுத்தார்.

    மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணியில் மோதிய 100-வது போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று இருக்கிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4-வது வெற்றியை பெற்றது. இதற்கு முன்பு 1977-ம் ஆண்டு பி‌ஷன்சிங்பேடி தலைமையில் 222 ரன்கள் வித்தியாசத்திலும், 1981-ம் ஆண்டு கவாஸ்கர் தலைமையில் 59 ரன் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டு விராட்கோலி தலைமையில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது ரஹானே தலைமையில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி மனைவி அனுஷ்கா சர்மா குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து அவர் முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு நாடு திரும்பினார். கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.

    முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டதாலும், கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியதாலும் டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழக்கும் என்று முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை தகர்ந்தெறிந்து இந்திய வீரர்கள் கோலி இல்லாமல் ரஹானே தலைமையில் சாதித்து இருக்கிறார்கள்.

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

    பாக்சிங் டே டெஸ்ட்  என்று அழைக்கப்பட்டும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்திய அணியின் கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.

    ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 70 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

    5 ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா 3 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அடுத்துவந்த கேப்டன் ரஹானே , ஷுக்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 15.5 ஓவரில் 70 ரன்களை எட்டிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

    சிறப்பாக ஆடிய ஷுக்மன் கில் 35 ரன்களையும், கேப்டன் 27 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சம்மன் செய்துள்ளது. இரு அணிகளும் சமனிலையில் உள்ளதால் இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இரு அணிகளும் மோதும் 3-வது போட்டி ஜனவரி 7-ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. 
    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
     
    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.

    கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.

    ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 70 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.
    முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோ‌ஷா கோட்லா மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

    இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.

    அப்போது அமித்‌ஷா பேசுகையில், ‘கிரிக்கெட்டில் 2 வகையான பேர் உள்ளனர். ஒன்று, வீரர்கள். இன்னொன்று விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்கள். விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்களின் பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. அதற்காகவே நாங்கள் இந்த சிலையை திறந்து வைக்கிறோம்’ என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, கவுதம் காம்பிர் எம்.பி. மற்றும் அருண்ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை ருசித்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை ருசித்தது. ஜாம்ஷெட்பூர் வீரர் ஸ்டீபன் எஸி 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    மெல்போர்ன் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 2-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஜோ பேர்ன்ஸை வீழ்த்தினார். 4-வது ஓவரின் 3-வது பந்தை வீசும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வெளியேறினார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பலவீனத்தை கொடுத்தது.

    உமேஷ் யாதவ் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடமாட்டார். அடுத்த போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்னர்தான் காயத்தின் தன்மை தெரியவரும்.

    ஏற்கனவே முதல் போட்டியோடு முகமது ஷமி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது உமேஷ் யாதவ் காயம் அடைந்துள்ளார்.
    இங்கிலாந்தில் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் உள்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ஓரளவிற்கு கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்தபின் ஜூன் மாதங்களில் இருந்து ரசிகர்கள் இன்றி போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டன.

    அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை அனுமதித்தனர். இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸ் தொற்றாக பரவுவதை கண்டுபிடித்தனர். இந்த வைரஸ் மிக்தீவிர வேகத்தில் பரவி வருகிறது.

    ஆகையால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுட் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகள் மோத இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா ஓபனில் கடந்த 2000-த்தில் இருந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்த ரோஜர் பெடரர், 2021 சீசனில் இருந்து விலகியுள்ளது.
    உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் கடந்த 2000-த்தில் இருந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.

    பெடரர் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் ஆஸ்திரேலியா ஓபனுக்கு தயாராக நேரம் இல்லை என, 2021 சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.
    ×