search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர் புகழாரம்

    மெல்போர்ன் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலங்கை எட்டி, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

    அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டபின், அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய நான்கு பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    இந்த வெற்றியை பாராட்டிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த போட்டியில் அபாரமான வெற்றி. இது முற்றிலும் ஒட்டுமொத்த அணியின் அபாரமான முயற்சி. இந்திய அணியின் இளம்வீரர்கள் மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் இந்த சிறப்பு வாய்ந்த வெற்றியால், இதற்கு மேல் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இதில் இருந்து முன்னோக்கிச் செல்வோம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி இல்லாமல் கிடைத்த இந்த வெற்றி அபாரமான சாதனை. மோசமான முதல் போட்டி தோல்வியை பின்னிக்குத்தள்ளி கேரக்டரை வெளிப்படுத்தியதை, விரைவாக மீண்டு வந்ததை விரும்புகிறேன். மிகச்சிறப்பான வெற்றி. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×