என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி
Byமாலை மலர்30 Dec 2020 8:37 AM GMT (Updated: 30 Dec 2020 8:37 AM GMT)
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 396 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 621 ரன்களும் குவித்தன. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 5 வீரர்கள் காயத்தில் சிக்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.
‘நல்லவேளையாக நாங்கள் 21 வீரர்களை அழைத்து வந்தோம். இல்லாவிட்டால் அடுத்த டெஸ்டில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 3-வது வரிசையிலும், நான் 4-வது வரிசையிலும் ஆட வேண்டியது இருந்திருக்கும்’ என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X