என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, குயின்ஸ்லேண்ட் போலீசார் கூறுகையில், சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர்.  ஆனால், அதில் பலனில்லை என தெரிவித்துள்ளார்.  

    நடப்பு ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ரசலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார்.
    மும்பை:

    ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

    இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்,  தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது என்றார்.

    இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடியதாகவும், அனைவரும் சரியாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார். 

    எனினும் தமது அணி முழு திறனுடன் இன்னும் விளையாடவில்லை,  அது குறித்து ஆட்டத்திற்கு முன்னர் சக வீரர்களிடம் பேசியதாவும் அவர் தெரிவித்தார்.

    ஆண்ட்ரே ரசல் அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சக வீரர் முடிந்தவரை அவருக்கு பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது என்றார். 

    கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச இருப்பதை தெரிந்து அவரை குறி வைத்தோம் என்றும் அது சிறப்பாக வேலை செய்தது என்றும் கூறிய ஷ்ரேயாஸ்,  இறுதி ஆட்டத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரூ ரசல் 49 ரன்கள் அடித்தார்.
    புனே:

    ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.  

    தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    6வது விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது.  ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். 

    கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதியும் தலா 9 ரன்னுடன் வெளியேறினர். மார்க்ரம் 32 ரன் எடுத்தார். 

    ஐதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.  இதனால்  கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்களும், டிம் சௌதி 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டி ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார் என்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
    கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
    புனே:

    ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.

    தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    6வது விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், மற்றொரு அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் அல்லது ரூட்டை எதிர்கொள்வார்.
    ரோம் :

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என ஸ்வெரெவ் கைப்பற்றினார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 6-3, 6-3 என அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    இதன்மூலம் சிட்சிபாஸ் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
    புனே:

    ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்குகிறது. கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்சனுக்கு பதிலாக உமேஷ் யாதவ், சாம் பில்லிங்ஸ் இணைந்துள்ளனர்.
    அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டர் பதிவிட்டார். பின்பு சில நிமிடங்களிலேயே அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.

    அந்த டுவீட்டில் அவர் கூறியதாவது:-

    இது தான் எனது கடைசி ஐபிஎல் தொடர் என மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். ஐபிஎல்லின் இரண்டு சிறந்த அணிகளில் 13 வருடமாக விளையாடியதை அற்புதமாக உணர்கிறேன். இந்த பயணத்தை வழங்கியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிகுக்கும் எனது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த டுவீட்டரி ரசிகர்கள் பகிர்ந்து வந்த நிலையில், உடனே டெலிட் செய்துவிட்டார். இதையடுத்து அவர் முடிவை மாற்றிவிட்டாரா அல்லது தொடர் முடிந்தபின் தனது ஓய்வை அறிவிப்பாரா என ரசிகர்கள் கேல்வி எழுப்பி வருகின்றனர்.

    அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,187 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 29.28-ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.26-ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.
    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.


    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர் வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதனும், போக்குவரத்துக்கு கே.கோபாலும், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணனும், தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயனும், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு சிவ்தாஸ் மீனாவும், விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்திரமோகனும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலனும், பாதுகாப்புக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும், தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்தும், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமாரும், அரங்கு ஏற்பாடுக்கு தயாளந்த் கட்டாரியாவும், நிதி, டெண்டருக்கு பிரசாந்த் வாட்நேரையும், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானியும், சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமாரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கான குழுவுக்கு காகர்லா உஷாவும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமாரும், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோரும், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மித்தலும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
    பாங்காக்:

    தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.  இதில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்ற வெற்றியால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

    இதனால், இந்தியாவின் பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர்த்து விளையாடினார்.

    அவருக்கு போட்டியின்போது காயம் ஏற்பட்டது, இருப்பினும் தொடர்ந்து விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

    இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
    முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்திருந்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு  - பஞ்சாப்  அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் . 

    பானுகா ராஜபக்சே 1 ரன்னுடன் வெளியேற லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். கேப்டன் மயங்க் அகவர்வால் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  பஞ்சாப்  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

    இதை தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியில்  தொடக்க வீரராக களம் இறங்கிய கோலி 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

    கேப்டன் டூபிளியஸ் 10 ரன்னுக்கும், பட்டிதார் 26 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிபட்சமாக மேக்ஸ்வெல் 35 ரன்கள் அடித்தார்.  தினேஷ் கார்த்திக் 11 ரன்னுடன் வெளியேறினார்.

    20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  54  ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.

    அதிகபட்சமாக லிவிங்க்ஸ்டன் 42 பந்துகளில் நான்கு 6, 5 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ 66 ரன்கள், தவான் 21 ரன்கள், மயங்க் அகர்வால் 19 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 9 ரன்கள், பிரார் மற்றும் ரிஷிஷ் தவான் தலா 7 ரன்கள், ராகுல் சஹார் 2 ரன்கள் மற்றும் பனுக்கா ராஜபக்சே ஒரு ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூரு அணி தரப்பில் அபாரமாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வநிந்து ஹசாரங்கா 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்.. ஐபிஎல் 2022 - தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை
    ×