search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலியன் ஓபன் டென்னிஸ்"

    • ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.
    • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

     

    மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணை எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணையை எதிர்கொண்டது. இதில் எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, நார்வே வீரர் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் முதல் செட்டை காஸ்பர் ரூட் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹோல்ஜர் ரூனே அடுத்த இரு செட்களையும் வென்றார்.

    இறுதியில், ரூனே 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் முன்னணி வீரரான ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்தவர் ஹோல்ஜர் ரூனே என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கோரிக் (குரேஷியா) மோதினர். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள். 

    அன்ஹெலினா கலினினா - குடர்மெடோவா

    அன்ஹெலினா கலினினா - குடர்மெடோவா

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியி செர்பிய வீரர் ஜோகோவிச், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் முதல் செட்டை ரூனே வென்றார். இதற்கு பதிலடியாக ஜோகோவிச் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரூனே வென்றார்.

    இறுதியில், ரூனே 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தாலியன் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இதேபோல, மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், செர்பியாவின் லாஸ்லோ ஜெரியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட்

    6-1, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பேபியன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றார். உலகின் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியா வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ரிபாகினா 4-3 என முன்னிலை பெற்றிருந்த போது அன்னா கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதனால் ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவுடன் மோதினார். இதில் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×