search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - ரிபாகினா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    இகா ஸ்வியாடெக்

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - ரிபாகினா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியா வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ரிபாகினா 4-3 என முன்னிலை பெற்றிருந்த போது அன்னா கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதனால் ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவுடன் மோதினார். இதில் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×