என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது.
    • மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீண்டும் விக்கெட் கீப்பராக அணிக்குள் இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் செல்லும் வாய்ப்பை இவ்விரு அணிகளுமே இழந்து விட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அஜாஸ் படேலின் 4-வது ஓவரின் 3-வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் பந்தை தவற விட்டதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டல் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்து 7 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷான் மசூத் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மற்றொரு ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பந்தை நழுவ விட்டார். அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் மீண்டும் துல்லியமாக ஸ்டம்பிங் செய்து அவரை 3 ரன்களில் அவுட்டாக்கினார்.

    பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவது மிகவும் அரிதாகும். அதிலும் போட்டி துவங்கியதுமே பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள் என்பதால் எட்ஜ், போல்ட், எல்பிடபிள்யு, கேட்ச் ஆகிய முறைகளில் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டாவார்கள்.

    ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் குறிப்பாக ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    • ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
    • 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்டார்.

    ஒரு கேப்டனாக இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அவர் சோபிக்க தவறிவிட்டார். வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வரும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தற்போது அவரது இடத்தின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளன.

    ஏனெனில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்று வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் கே.எல் ராகுலின் இந்த தொடர் சொதப்பல் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச தொடரிலும் கே.எல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் கண்டிப்பாக இடம் பிடிப்பார்.

    ஆனால் அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தனது சராசரியை 30-க்கு உள்ளே தான் வைத்திருக்கிறார்.

    இப்படி 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த தொடரிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அவரது இடம் சுப்மன் கில்லிடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இன்றைய போட்டியின் மூலம் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
    • தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100-வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும்

    • தென் ஆப்பிரிக்கா 67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்திருந்தது.
    • ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.

    67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    இந்த பாட்னர்ஷிப்பை கிரீன் பிரித்தார். இருவரும் அரை சதம் அடித்திருந்த நிலையில் கிரீன் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்கள் சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும், போலண்ட் மற்றும் லயன் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா களமிறங்கினர். 1 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மார்னஸ் லாபுசாக்னே - வார்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    • இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் குறைவாக அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
    • இவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என பேச்சுகள் உள்ளன.

    இந்திய வீரரும், அதிரடி பேட்டரான சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகம்.

    இவர் எங்கு விளையாட சென்றாலும் அங்கு சஞ்சு சாம்சனின் பெயர் தாங்கிய போஸ்டரையோ, பேனரையோ பார்வையாளர்கள் மத்தியில் கண்டிப்பாக காண முடியும். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிபா கால்பந்து உலக்கோப்பை கால்பந்து தொடரின் மைதானத்தில் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை புகழந்து பேனர் வைத்திருந்தது வைரலானது.

    இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமிருந்தாலும், இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் குறைவாக அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. ஒருநாள், டி20 அரங்கில் சிறந்த வீரரான இவருக்கு பதில் ரிஷப் பண்டிற்கு இந்திய அணி அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என பேச்சுகள் உள்ளன.

    இந்நிலையில், சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் சாம்சன், கிறிஸ்துமஸ் மரத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் மனைவி கர்ப்பமடைந்திருப்பதாகவும், சஞ்சு சாம்சன் விரைவில் தந்தையாக போகிறார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை.

    • அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார்.

    தமிழக வீரர் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் விஞ்ஞானி என அழைத்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமினின் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது.

    இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர்.

    இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    36 வயதான அஸ்வின் 88 டெஸ்டில் விளையாடி 3043 ரன்கள் எடுத்துள்ளார். 449 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை யை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு கபில்தேவ் (இந்தியா), ஹேட்லி (நியூசிலாந்து) பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர். இந்த வரிசையில் 6-வது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இணைந்து உள்ளார்.

    கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் குவித்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரிச்சர்டு ஹேட்லி 86 டெஸ்டில் 3124 ரன்னும், 431 விக்கெட்டும், வார்னே 145 டெஸ்டில் 3154 ரன்னும், 708 விக்கெட்டும் எடுத்துள்ள னர்.

    பொல்லாக் 108 டெஸ்டில் 3781 ரன்னும், 421 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்டில் 3550 ரன்னும், 566 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் 450 விக்கெட் கைப்பற்றி மேலும் ஒரு மைல்கல்லை தொட இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கும்ப்ளே குறைந்த டெஸ்டில் 450 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். 93-வது டெஸ்டில் அவர் இதை செய்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து அதிவேகத்தில் 450 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    அஸ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை புரிந்தார். 9-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களை எடுத்து சேசிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9-வது வீரராக களம் இறங்கி 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். தற்போது அஸ்வின் 42 ரன் எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.

    • சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
    • இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.

    மிர்பூர்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

    இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

    • 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    • அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.

    மிர்பூர்:

    வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.

    மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.

    பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
    • கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

    ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது. புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும்.

    இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    • ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள்.
    • ராகுல் டிராவிட் 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியர்.

    மும்பை:

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாளான இன்று இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் - அஸ்வின் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இதன் மூலம் இந்தியா 3 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்டில் ஸ்லிப் பகுதியில் நின்ற விராட் கோலி கேட்சுகளை நழுவவிட்டார். இதை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியரான ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியாளர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

    ×