என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கேட்சுகளை நழுவ விட்ட விராட் கோலி- கவாஸ்கர் பாய்ச்சல்
- ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள்.
- ராகுல் டிராவிட் 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியர்.
மும்பை:
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாளான இன்று இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் - அஸ்வின் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இதன் மூலம் இந்தியா 3 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்டில் ஸ்லிப் பகுதியில் நின்ற விராட் கோலி கேட்சுகளை நழுவவிட்டார். இதை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியரான ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியாளர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்