என் மலர்
விளையாட்டு
- இலங்கை பெண் ரசிகை ஒருவர் விராட் கோலி மீதான தனது அன்பை புதுமையான முறையில் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரசிகையின் பரிசை பெற்றுக்கொண்ட கோலி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர் விராட் கோலியை பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் இலங்கை பெண் ரசிகை ஒருவர் விராட் கோலி மீதான தனது அன்பை புதுமையான முறையில் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா மோதும் ஆட்டத்திற்கு இந்திய வீரர்கள் தயாராகி கொண்டு இருந்த வேளையில் கொழும்பை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விராட் கோலியை சந்தித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், கடந்த 14 வருடங்களாக உங்களிடம் பேச காத்திருந்தேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு எனது கனவு நனவாகி விட்டது என கூறினார்.
மேலும் அந்த பெண் ரசிகை தான் வரைந்த விராட் கோலியின் ஓவியத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். அந்த ரசிகையின் பரிசை பெற்றுக்கொண்ட கோலி அவருக்கு நன்றி தெரிவித்தார். இதே போல ஏராளமான இலங்கை ரசிகர்களும் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
- இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.
பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள்.
- வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள். அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கொழும்பு ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மமூத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷர்துல் தாக்குர், ரவீந்திரஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது பும்ரா.
வங்காளதேசம்: மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன் அல்லது முகமது நைம், லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், அபிப் ஹூசைன், ஷமிம் ஹூசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமூத்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
- பாகிஸ்தான் 5 முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டங்களில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, இலங்கை அணி கடைசி பந்தில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) 12-வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐநது முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடைசி பந்தில் இலக்கை எட்டிய சம்பவம், ஆசிய கோப்பை தொடரில் இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2018 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.
ஆசிய கோப்பையில் முதல் மூன்று போட்டிகளில் 68.3 ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 52.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர்.
- கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி
- 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தல்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.
இறுதியாக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் அசலங்கா சிறப்பாக விளையாடி இரண்டு ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மேலும், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து கூறியதாவது:-
பீல்டரின் இடையே பந்தை தட்டிவிட்டு எப்படி இரண்டு ரன்களுக்கு கஷ்டப்பட்டு ஓடுவது என்பது குறித்து யோசித்தேன். எதிர்பக்கம் இருந்த பதிரனாவிடமும் கடுமையாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றேன்.
கடைசி பந்தை பவுன்சர் அல்லது யார்க்கர், அதை தவிர்த்து ஸ்லோவர் பந்தாக வீசுவார் என்று நினைத்தேன். இது எனக்கு ஏற்ற பந்துதான். இதனால் நான் உற்சாகமாக இருந்தேன். மெண்டிஸ்- சதீரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் போட்டியை முடிக்க விரும்பினேன். அது என்னுடைய ரோல். என்னுடைய வரலாற்று சாதனை புத்தகத்தில் இது என்னுடைய 2-வது இன்னிங்ஸ்'' என்றார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவரில் 252 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
அந்த அணியின் குசால் மெண்டிஸ் 91 ரன்னில் அவுட்டானார். சரித் அசலங்கா கடைசி வரை ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:
எங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தது. எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.
இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.
இலங்கை அணி பேட்டிங் ஆரம்பத்திலும் சரி, ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டனர்.
கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று தோல்வியை தழுவினோம் என தெரிவித்தார்.
- மழை காரணமாக போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் ரிஸ்வான், ஷபிக் அரை சதத்தால் 252 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் பதிரனா 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 42 ஓவரில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமரவிக்ரமா 48 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 91 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் அசலங்கா பொறுப்புடன் ஆடி 49 ரன்னுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
- 50 ஓவர்கள் விளையாடி 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம்
- விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தியா 356 ரன்கள் அடித்த நிலையில், பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது.
இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த அணுகுமுறையுடன் விளையாடினால், நெதர்லாந்தை வெல்வதற்குக் கூட திணற வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்ரான் அக்மல் கூறியதாவது:-
நீங்கள் உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறீர்களா?. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணுகுமுறையை கடைபிடித்தால், நெதர்லாந்துக்கு எதிராகக்கூட திணற வேண்டிய நிலை இருக்கும்.
நிர்வாகம் என்ன செய்து கொண்டிக்கிறது?. உங்களை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய சொன்னது யார்?. குறைந்த பட்சம் நிலைத்து நின்று விளையாடுமாறு வீரர்களிடம் வலியுறுத்தியிருக்கலாம். உங்களுடைய ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளது. வங்காளதேசத்திற்கு எதிராக ஏறக்குறைய 190 ரன்களை 40 ஓவர்களில் சேஸிங் செய்தீர்கள்.
சதாப், இப்திகார், சல்மான் அவுட்டான விதம். அவர்களிடம் முழு ஓவர்களையும் விளையாடுமாறு தெரிவித்திருக்கனும். அப்படி விளையாடியிருந்தால் 260 முதல் 280 ரன்கள் வந்திருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அவர்களிடம் இதுபோன்று கேள்விகள் கேட்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.
அங்கு விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை. எல்லோரும் விடுமுறைக்கு சென்றுள்ளனர். உங்களுடைய ஆட்டத்திறன் சிறந்த அணிக்கு எதிராக பள்ளிக்கூட சிறுவர்கள் போன்று இருந்தது என்பதை சொல்தற்கு வருந்துகிறேன்'' என்றார்.
- இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சட்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 368 ரன்கள் சேர்த்தது.
- அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் குவித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.
அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 124 பந்தில் 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 96 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 72 ரன் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நியூசிலாந்து 39 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பென் ஸ்டோக்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
- இந்த போட்டியில் நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹரிஸ் ரவூப் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக அவர் மீண்டும் களத்தில் இரங்கவில்லை. மற்றொரு வீரரான நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார். இதனால் உடனடியாக வெளியேறினார். பேட்டிங்கிலும் கூட இவர்கள் இரண்டு பேரும் வரவில்லை.
இந்நிலையில் மீதமுள்ள ஆசிய கோப்பை தொடரில் இருந்து நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் விலகியுள்ளனர். அவருக்கு பதிலாக ஜமான் கான் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
- நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
- உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
பிரேசிலியா:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.
நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






