என் மலர்
விளையாட்டு
- முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
- காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.
இந்திய அணி 6-வது போட்டியில் இங்கிலாந்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. லக்னோவில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணியின் அதிரடி நாளையும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி மான்செஸ்டரில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த 5 போட்டி தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் பலவீனமான இங்கிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
கோலி ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்களும், ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 311 ரன்களும் எடுத்து உள்ளனர். கோலி இன்னும் ஒரு செஞ்சுரி அடித்தால் தெண்டுல்கரின் சாதனையை (49) சமன் செய்வார்.
லோகேஷ் ராகுல் (177 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா 11 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 8 விக்கெட்டும், ஜடேஜா7 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.
கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்த முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் அணிக்கு முக்கியத்துவம் பெற்று விட்டார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றிவிடப்படலாம்.
இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அந்த அணி 1 வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.
நடப்பு சாம்பியனான பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.
சிட்னி:
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மேத்யூ வேட் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
மேத்யூ வேட் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா உள்ளிட்ட 15 பேர் கொண்ட பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தரம்சாலாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
தரம்சாலா:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்குகிறது.
- பாகிஸ்தான் 46.4 ஓவரில் 270 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது
- தென்ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி குறித்த தகவல்கள்:-
1. உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 7-வது போட்டியாக இது அமைந்தது.
2. பாகிஸ்தான் அணியை 1999 உலகக் கோப்பைக்குப்பின் (ஒருநாள் மற்றும் டி20) தென்ஆப்பிரிக்கா முதன்முறையாக வென்றுள்ளது.
3. உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்கா 2-வது அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன் 2011-ல் இந்தியாவுக்கு எதிராக 297 ரன்களை சேஸிங் செய்துள்ளது. தற்போது 271 ரன்னை எட்டியுள்ளது. 1999-ல் இந்தியாவுக்கு எதிராக 254 ரன்கள் சேஸிங் செய்துள்ளது.
4. பாகிஸ்தான் 270 ரன்களுக்கு மேல் அடித்து 1975-ல் இருந்து 2019 வரை 14 போட்டிகளில் ஒருமுறைதான் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 3 முறை 270 ரன்களுக்கு மேல் அடித்து, 2 முறை தோல்வியை சந்தித்துள்ளது.
5. இந்த போட்டியில் 18 பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் அவுட்டானார்கள். இதன்மூலம் உலகக் கோப்பையில் கேட்ச் மூலம் அதிக பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த போட்டியாக இது அமைந்துள்ளது.
6. சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்கு போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி வாகை சூடின.
- 3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 21 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா போராடியது
- ஷம்ஸி- மகாராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்துக் கொடுத்தது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலகக் கோப்பையில் கடைசி வரை மிகவும் த்ரில் ஆக சென்ற போட்டிகளில் இதுதான் முதன்மையான போட்டி என்றால் மிகையாகாது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 270 ரன்கள் குவித்தது. சென்னை ஆடுகளத்தில் 270 ரன்களை சேஸ் செய்ய கடினம் என்பதால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
ஆனால், தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் டெம்பா பவுமா 27 பந்தில் 28 ரன்கள், டி காக் 14 பந்தில் 24 ரன்கள் அடிக்க 9.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் மார்கிராம் அணியை வழி நடத்திச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடிப்பதுடன் அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 91 ரன்கள் எடுத்த நிலையில் 41-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுதான் இருந்தது. ஓவர்கள் அதிகமாக இருந்ததால் தட்டி தட்டி ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் 260 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் ஒரு விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்ஸி, மகாராஜ் ஆகியோர் களத்தில் நின்றனர். 46-வது ஓவரை ராஃப் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது லெக்சைடு ஷம்ஸியை உரசிக் கொண்டு பந்து சென்றது. விக்கெட் கீப்பர் பந்தை பிடித்ததும் அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் வைடு என அறிவித்தார். பாகிஸ்தான் மேல்முறையீடு (Review) செய்ய வில்லை. ரீபிளேயில் வைடு இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு ரன் கிடைத்தது.
இதே ஓவரின் கடைசி பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது பந்து காலில் பட்டதும், நடுவரிடம் அப்பீல் கேட்டனர். அவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் மேல்முறையீடு (Review) செய்தனர். அப்போது பந்து லெக் ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. ஆனால் நடுவர் முடிவு என 3-வது நடுவர் அறிவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.
அவுட்டாவதில் இருந்து ஷம்ஸி தப்பித்தார். தென்ஆப்பிரிக்காவும் தோல்வியில் இருந்து தப்பியது.
அடுத்த ஓவரை இருவரும் சமாளித்து 3 ரன்கள் சேர்த்தனர். 47-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் வீசினார். நவாஸ் லைக்சைடு பந்து வீச, மகாராஜ் சிறப்பாக விளையாடி பந்தை பவுண்டரிக்கு விரட்ட தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த காலங்களில் மழை போன்ற காரணங்களால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி பலமுறை பறிபோய் உள்ளது. இதனால் அந்த அணியை அதிர்ஷ்டம் இல்லாத அணி என்பார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் அதிர்ஷ்டம் கைக்கொடுத்ததால், தென்ஆப்பிரிக்கா வெற்றியை ருசித்தது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடமும் பிடித்தது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்கள் எடுத்தபோது இவரும் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல் முறையே 31, 21 மற்றும் 52 ரன்களை குவித்தனர். ஷதாப் கான் 43 ரன்களையும், முகமது நவாஸ் 24 ரன்களை எடுத்தார். ஷாகீன் அஃப்ரிடி 2 ரன்களிலும், முகமது வாசிம் 7 ரன்களையும் எடுத்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 270 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யென்சென் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
இதில், குயிண்டன் டி காக் 24 ரன்களும், தெம்பா பவுமா 28 ரன்களும், ராசி வான் டி தசன் 21 ரன்களும், ஹெயின்ரிச் கிளாசென் 12 ரன்களும், டேவிட் மில்லர் 29 ரன்களும், மார்கோ ஜான்சென் 20 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அதிகபட்சமாக அய்டன் மார்க்ராம் 91 ரன்களும், கெரால்டு காட்ஜீ 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
41.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா விளையாடி வந்தனர்.
இறுதியாக களத்தில் கேஷவ் மகாராஜ் மற்றும் லுங்கி ங்கிடி விளையாடினர். இதில், லுங்கி ங்கிடி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேஷவ் மகாராஜூடன் தப்ரெய்ஸ் ஷம்ஸி விளையாடினார். மகாராஜ் 7 ரன்களும், ஷம்ஸி 4 ரன்களும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றிப் பெற்றது.
- கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்கள் எடுத்தபோது இவரும் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல் முறையே 31, 21 மற்றும் 52 ரன்களை குவித்தனர். ஷதாப் கான் 43 ரன்களையும், முகமது நவாஸ் 24 ரன்களை எடுத்தார். ஷாகீன் அஃப்ரிடி 2 ரன்களிலும், முகமது வாசிம் 7 ரன்களையும் எடுத்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 270 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யென்சென் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகளும் நேற்றுடன் 5 ஆட்டத்தில் விளையாடி விட்டன. இன்று முதல் 6-வது போட்டியில் ஆடுகின்றன.
நாளை (சனிக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் 134 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.
அதைத் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரைப் பதித்தது. இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 67 ரன்னிலும், நெதர்லாந்தை 309 ரன்னிலும் வீழ்த்தியது. 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து (9 விக்கெட்), நெதர்லாந்து (99 ரன்), வங்காளதேசம் (8 விக்கெட்), ஆப்கானிஸ்தான் (149 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.
5-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வங்காளதேசம்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளன. 2-வது வெற்றி பெறப்போவது வங்காளதேசமா? நெதர்லாந்தா? என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார்
- தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா மீண்டும் இடம் பிடித்துள்ளார்
உலகக் கோப்பையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற பாபர் அசாம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியை அணுகுவோம். அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது" என்றார்.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
- இந்தியா இதுவரை 82 பதக்கங்கள் வென்றுள்ளது
- கடந்த 2018-ல் 72 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது அதிக பதக்கங்கள் வென்றுள்ளது
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி கலந்து கொண்டார்.
இவர் சிங்கப்பூர் வீராங்கனை அலிம் நுர்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சீத்தல் தேவி 144-142 என வெற்றி பெற்றார். நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 72 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
கடந்த 2018-ல் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் வென்றுள்ளது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது.
- சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.
'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும்.

பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.
சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம்.
யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.
ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன
- இந்தியா மட்டும் தோல்வியை சந்திக்காக அணியாக இருந்து வருகிறது
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை 25 போட்டிகளில் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்தியா ஐந்து போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்தையும், நியூசிலாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 5 முதல் 7 இடங்களை பிடித்துள்ளன.
வங்காளதேசம் 8-வது இடத்தையும், இங்கிலாந்து 9-வது இடத்தையும், நெதர்லாந்து கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.






