என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வந்த இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், அதில் ரஷித் 2 ரன்கள், மார்க் வுட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.
இதில், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 33.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 157 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
இதில், இலங்கை வீரர்களான பதும் நிசன்கா அரை சதம் கடந்து 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதேபோல், சதீரா சமரவிக்ரமா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதற்கிடையே, குசல் பெரேரா 4 ரன்களும், குசல் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், இலங்கை அணி 25.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், அதில் ரஷித் 2 ரன்கள், மார்க் வுட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.
இதில், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 33.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 157 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.
- இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
- இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய மேக்ஸ்வெல் சதத்தால் 399 ரன்கள் குவித்தது.
- பின்னர் ஆடிய நெதர்லாந்து 90 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் போட்டியில் நெதர்லாந்து - ஆஸ்திரேலியா மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய மேக்ஸ்வெல் சதத்தால் 399 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 90 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடு உலககோப்பை போட்டிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மோசமான சாதனை படைத்துள்ளார். மோசமான பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் போது 10 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 115 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
இதன்மூலம் ஒரே போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மைக் லீவிஸ் என்பவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 10 ஓவரில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதேபோல ஆடம் ஜாம்பாவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 113 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரையும் கடந்த பாஸ் டி லீடு இந்த பேட்டியில் 115 ரன்கள் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
- மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் எம்.எஸ்.வெங்கடராமன் நினைவு 8-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள நியூபிரின்ஸ் பவானி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.
இதில் தபால்துறையை சேர்ந்த பிரதீப்குமார் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். அஜேஷ், செல்வமுருகன், ராம்குமார், நாராயணன், உமாசங்கர், ஹரிதேவ் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்று 2 முதல் 7-வது இடங்களை பிடித்தனர்.
கல்லூரியின் துணை தலைவர் நவீன் பிரசாத் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. செயலாளர் மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்க செயலாளர் புவனா, போட்டி அமைப்புக்குழு செயலாளர் யமுனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
- உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
- நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
பெங்களூரு:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்த போது இடறி விழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் தற்போது பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டுள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி முன் இன்று அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதன் பிறகே அவர் எந்த போட்டிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவரும்.
என்றாலும் வருகிற 29-ந்தேதி லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் ஆடமாட்டார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதனால் அவருக்கு அதற்கு அடுத்த ஆட்டத்திலும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
- நேற்றைய முடிவில் இந்தியா 64 பதக்கத்துடன் (15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது.
- சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஹாங்சோவ்:
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வாரி குவித்தனர். ஈட்டி எறிதலில் எப்.64 பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் சுமித் அன்டில் 73.29 தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அத்துடன் தனது முந்தைய உலக சாதனையை (70.83 மீட்டர்) தகர்த்து புதிய சாதனையை படைத்தார்.
மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் வெண்கலப்பதக்கம் (62.06 மீட்டர்) பெற்றார். அரியானாவைச் சேர்ந்த சுமித் அன்டில் 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் இடது முட்டிக்கு கீழ் காலை இழந்தவர் ஆவார். இதே போல் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் எப்.46 பிரிவில் 68.60 மீட்டர் தூரம் வீசி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரிங்கு, அஜீத் சிங் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அன்குர் தாமா 4 நிமிடம் 27.70 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்த அன்குர் தாமா ஒரு ஆசிய விளையாட்டில் 2 தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரக்ஷிதா ராஜூ, கிலகா லலிதா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.
நேற்றைய முடிவில் இந்தியா 64 பதக்கத்துடன் (15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது. சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வியு டன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
- தென் ஆப்பிரிக்கா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன.
கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 13-ந் தேதி நடந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், 18-ந்தேதி நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 149 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 23-ந் தேதி நடந்த 4-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.
சேப்பாக்கம் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இது உலக கோப்பை தொடரின் 26-வது போட்டியாகும். இதில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான்-மார்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வியு டன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. தோற்றால் வெளியேற்றப்படும். பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது சவாலானது.
அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் நெதர்லாந்து (81 ரன்), இலங்கையை (6 விக்கெட்) வென்றது. அதைத் தொடர்ந்து இந்தியா (7 விக்கெட்), ஆஸ்திரேலியா (62 ரன்), ஆப்கானிஸ்தான் (8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். 282 ரன் குவித்தும் மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கால் அதிர்ச்சிகரமாக தோற்றது. தொடர் தோல்வியில் இருந்து அந்த அணி மீளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இலங்கையை 102 ரன் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 134 ரன் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 229 ரன் வித்தியாசத்திலும், வங்காளதேசத்தை 149 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி நாளையும் தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி பாகிஸ்தானை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதத்துடன் 407 ரன்கள் குவித்துள்ளார். கிளாசன் (288 ரன்), கேப்டன் மார்க்ராம் (265 ரன்) வான்டர் டூசன் (199 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
பந்து வீச்சில் ரபடா, மார்கோ ஜான்சென், கோயட்ஸ் (தலா 10 விக்கெட்), கேசவ் மகராஜ் (7 விக்கெட்), நிகிடி (6 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 83-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 82 ஆட்டத்தில் பாகிஸ்தான் 30-ல், தென் ஆப்பிரிக்கா 51-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
உலக கோப்பையில் 5 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2-ல், தென் ஆப்பிரிக்கா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் மேக்ஸ்வெல், வார்னர் சதமடித்தனர்.
புதுடெல்லி:
உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 106 ரன்னும், வார்னர் 93 பந்தில் 104 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
இவர் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.
- 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.
நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
இதில், விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்கில் ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அர்யன் தட் 7 ரன்கள், அக்கர்மென் 4 ரன்கள், வேன் பீக் மற்றும் வேன் மீக்கரன் தலா 10 ரன்கள், விக்ரம்ஜித் சிங் 4 ரன்கள், வேன் டெர் மார்வே 5 ரன்கள், பாஸ் டி லீட் 10 ரன்களும் எடுத்து மொத்தமாக 100 ரன்கள் கூட தாண்ட முடியாமல் திணறினர்.
இந்நிலையில், நெதர்லாந்து அணி 21 ஓவரின் 90 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
- கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
- தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.
நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
- தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை மட்டுமே வீழ்த்தி இருக்கும் நெதர்லாந்து அணி, தொடர் தோல்விகளுக்கு இன்றைய போட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






