என் மலர்
விளையாட்டு
- பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
- தற்போது அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
லாகூர்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது.
முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியால் எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன் குவித்தும் தோற்றது அந்த அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மோசமான பந்து வீச்சு, பீல்டிங் இதற்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இந்த தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
வாசிம் அக்ரம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. 282 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே இருந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு மேற்கொள்ளவில்லை. நவீன கிரிக்கெட் உலகில் நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் கேட்ச் பிடிப்பது எப்படி? பவுண்டரியை எப்படி தடுக்க முடியும்?
அக்யூப் ஜாவித்: பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவருக்கு பதிலாக ஷகின் ஷா அப்ரிடியை டி 20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியின் எதிர்காலத்துக்கு இது நல்லது. பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்க தவறிவிட்டார்.
மிஸ்பா-உல்-ஹக்: பாபர் அசாசம் அணியை வழிநடத்துவது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவரின் பீல்டிங் வியூகம், பந்து வீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக கேப்டன் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போல் இருந்தது. ஹாரிஸ் ரவூப்புக்கு பவர் பிளேயில் பந்துவீச கொடுத்ததால் ஒரு சில பவுண்டரிகளால் அவரது நம்பிக்கை உடைந்துவிட்டது. இதுவும் தவறான முடிவாகும்.
ரமீஸ் ராஜா, ரஷீத் லத்தீப், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், மொயின்கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தையும், கேப்டன் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- வங்காளதேசம் அணி சார்பில் மஹ்மதுல்லா சிறப்பாகி விளையாடி சதம் அடித்தார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணிக்கு ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 12 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹாசன் 1 ரன்னிலும், முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மஹ்மதுல்லா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மெஹிடி ஹசன் மிராஸ் 11 ரன்களையும், நசும் அஹமத் 19 ரன்களையும், ஹசன் மஹ்முத் 15 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி வரை தென் ஆப்பிரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய மஹ்மதுல்லா 111 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 46.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 233 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, யென்சென் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- தென் ஆப்பிரிக்காவின் துவக்க வீரர் டி காக் 174 ரன்களை குவித்தார்.
- வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் தன் பங்கிற்கு 60 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
- இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.
- பிஷன்சிங் பெடி 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- 1990-களில் பிஷன்சிங் பெடி இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன்சிங் பெடி. இவர் வெங்கட்ராகவன், பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து சுழற்பந்தில் கலக்கியவர் ஆவார்.
பிஷன்சிங் பெடி நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 ஆகும்.
பிஷன்சிங் பெடி மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிஷன்சிங் பெடி 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் 67 டெஸ்டில் விளையாடி 266 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 98 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது பெடியின் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு டெஸ்டில் 194 ரன் கொடுத்து 10 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும். 14 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
10 ஒருநாள் போட்டியில் விளையாடி 7 விக்கெட் எடுத்தவர். இடதுகை சுழற்பந்து வீரரான அவர் இந்திய அணிக்காக 22 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.
1990-களில் பிஷன்சிங் பெடி இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார். 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2004-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதையும் பெற்று இருந்தார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- தரம்சாலாவில் நடக்கவுள்ள 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தரம்சாலா:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இமாசல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்து அணியினர் இன்று காலை தரம்சாலா சென்றடைந்தனர்.
இந்நிலையில், தரம்சாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய் லாமாவை சந்தித்தனர். அவரிடம் ஆசி பெற்றனர்.
இந்த போட்டோவை தலாய் லாமா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக ஆடிய இப்ராஹிம் 87 ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 40 ரன்களுடனும், ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முறையே 65 மற்றும் 87 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹமத் ஷா 77 ரன்களை அடித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஹஷ்மதுல்லா சிறப்பாக விளையாடி 48 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
- பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 17 பதக்கங்களை வென்றுள்ளது.
- இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
தற்போது இந்தியா வென்று இருக்கும் 17 பதக்கங்களில் 11 பதக்கங்கள் டிராக் அண்ட் ஃபீல்டு பிரிவுகளில் இருந்தே கிடைத்துள்ளன. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.
இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதேபோன்று ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
போட்டியை நடத்தும் சீனா 31 தங்கம், 29 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஈரான் 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த சௌத் ஷகீல் 25 ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அகமது 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய ஷதாப் கான் 40 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம்.
- இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.
ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் , அமித் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
Another Golden Triumph for ?? at #AsianParaGames ?#ParaAthletics
- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளிடையேயான போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
- பாகிஸ்தான் அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி இருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.
அந்த வகையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
- F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.
ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். பிரணவ் சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் 28.76 மீட்டரும், அமித் குமர் 26.93 மீட்டரும் எறிந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த போட்டியில் மொத்தம் 4 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.






