என் மலர்
விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு: இந்திய வீராங்கனை சீத்தல் தேவி தங்கப் பதக்கம் வென்றார்
- இந்தியா இதுவரை 82 பதக்கங்கள் வென்றுள்ளது
- கடந்த 2018-ல் 72 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது அதிக பதக்கங்கள் வென்றுள்ளது
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி கலந்து கொண்டார்.
இவர் சிங்கப்பூர் வீராங்கனை அலிம் நுர்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சீத்தல் தேவி 144-142 என வெற்றி பெற்றார். நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 72 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
கடந்த 2018-ல் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் வென்றுள்ளது.
Next Story






