search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Para Games"

    • 2018-ல் 72 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தை பிடித்திருந்தது
    • தற்போது 39 பதக்கங்கள் அதிகமாக பெற்றுள்ளது

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு 107 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், ஈரான் 131 பதக்கங்களுடன் (44 தங்கம்) 2-வது இடத்தையும், ஜப்பான் 150 பதக்கங்களுடன் (42 தங்கம்) 3-வது இடத்தையும், கொரியா 103 பதக்கங்களுடன் (30 தங்கம்) 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    முதல் பாரா ஆசிய விளையாட்டு கடந்த 2010-ல் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் 15-வது இடத்தை பிடித்தது.

    2014-ல் 15-வது இடத்தையும், 2018-ல் 9-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா இதுவரை 82 பதக்கங்கள் வென்றுள்ளது
    • கடந்த 2018-ல் 72 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது அதிக பதக்கங்கள் வென்றுள்ளது

    ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி கலந்து கொண்டார்.

    இவர் சிங்கப்பூர் வீராங்கனை அலிம் நுர்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சீத்தல் தேவி 144-142 என வெற்றி பெற்றார். நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 72 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

    கடந்த 2018-ல் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் வென்றுள்ளது.

    பாரா ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianParaGames #Modi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் குவித்து பதக்க பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. 

    இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். அப்போது, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற அனைவரையும் பிரதமர் மோடி வாழ்த்தினார். 



    இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி ‘பாரா ஆசிய போட்டியில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பாராட்டுக்குரியது. அவர்களின் மனவலிமை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்வதற்கு இவர்கள் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன். விளையாட்டு வீரர்கள் இன்னும் அதிக உயரத்தை எட்டுவதற்கு, நம்பிக்கை மற்றும் விடா முயற்சியை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். #AsianParaGames #MedalWinners #Modi
    இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த பாரா ஆசிய விளையாட்டில இந்தியா ஒட்டுமொத்தமாக 72 பதக்கங்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. #AsianParaGames2018
    இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு 72 பதக்கங்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

    இதில் 15 தங்கம், 23 சில்வர், 33 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடம் பிடித்துள்ளது. இந்தியா கடந்த 2010 பாரா ஆசிய விளையாட்டில் 14 பதக்கங்களும், 2017-ல் 33 பதங்கங்களும் பெற்றிருந்தன. தற்போது கடந்த முறையை விட இரண்டு மடங்கிற்கு மேல் பதக்கங்கள் வாங்கி அசத்தியுள்ளது.
    பாரா ஆசிய விளையாட்டில் போட்டியில் நேற்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianParaGames2018 #ParulParmar
    ஜகர்தா:

    3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த செஸ் போட்டியில் பெண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெனிதா அன்டோ இறுதி சுற்றில் 1-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் மானுருங் ரோஸ்லின்டாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் போட்டியில் ஆண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் கிஷான் கன்கோலி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை வான்டே காம்தமை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் யாதவ் 29.84 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், அமித் பால்யான் 29.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும் வசப்படுத்தினர். ஆண்களுக்கான உருளை தடி எறிதலில் (கிளப் துரோ) இந்தியாவின் அமித் குமார் 29.47 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீரர் தரம்பிருக்கு (24.81 மீ.) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெண்கலப்பதக்கம் பெற்றார். அவர் ஈட்டி எறிதலிலும் வெண்கலம் வென்று இருந்தார். டெல்லியை சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தியா 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றது.

    இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 63 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 161 தங்கம், 84 வெள்ளி, 55 வெண்கலத்துடன் மொத்தம் 300 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது.  #AsianParaGames2018 #ParulParmar
    பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் 6வது நாளான நேற்று ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். #AsianParaGames2018 #SharadKumar
    ஜகர்தா:

    3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற 26 வயதான ஷரத்குமார் பீகாரை சேர்ந்தவர் ஆவார். இளம் வயதிலேயே போலியோ நோயினால் கால் பாதிக்கப்பட்ட ஷரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் 61.33 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு இந்திய வீரர் ரிங்கு 60.92 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். பாரா ஒலிம்பிக்கில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என்று மொத்தம் 50 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் என்று மொத்தம் 255 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.  #AsianParaGames2018 #SharadKumar
    மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. #AsianParaGames #ThangvelluMariyappan
    ஜகர்தா:

    மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 193 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என்று 112 பேரும் உடன் செல்கிறார்கள்.



    தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, முதற்கட்டமாக ஜகர்தாவுக்கு சென்ற இந்திய குழுவினருக்கு ஆசிய போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேர தவிப்புக்கு பிறகே அவர்கள் உள்ளே செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கினர். விளையாட்டு கிராமத்தில் நமது வீரர், வீராங்கனைகள், நிர்வாகிகள் தங்குவதற்குரிய கட்டணம் மற்றும் போட்டி கட்டணம், பதிவு கட்டணம் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் ஏறக்குறைய ரூ.1¾ கோடி செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகையை செலுத்தாததாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகையை இன்றுக்குள் செலுத்தாவிட்டால் மறுபடியும் இது போன்ற சிக்கல் ஏற்படலாம் என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்தார்.  #AsianParaGames #ThangvelluMariyappan
    ×