என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- தன்னை மிகப்பெரிய முட்டாள் மாவீரனாக எண்ணுகிறான்.
- வன்முறை என்பது சிறு வயதில் அவன் பார்த்த, அனுபவித்த ஒன்றாக இருக்கலாம்.
பாலியல் வன் கொடுமைகள் நடப்பதற்கு ஒரே ஒரு காரணம் என்று சொல்ல முடியாது. மன ரீதியான, சமுதாய ரீதியான, உடல் ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதற்காக இதனை நியாயப்படுத்த முடியுமா என்ன?
இந்த கொடுமைகள் உடலின் காமப்பசி, தான் என்ற அதிகார மமதை, பிறரை நசுக்கி, அழித்துப் பார்ப்பதில் ஒரு வக்கிர ஆனந்தம், பலவீனமான பெண்ணை மிரட்டி கட்டுப்படுத்தும் மமதை குடி கொண்ட ஆணின் வெளிப்பாடாக நிகழ்கிறது.
சில ஆண்கள் வாழ்வின் பல ஆக்கப்பூர்வமான முன்னேற்றம், பிரிவுகளில் தோற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனக்கோணலின் வெளிப்பாட்டு செயலாக பாலியல் வன்கொடுமைகளை செய்கின்றனர்.
பெண் என்றால் பணிந்துதான் ஆக வேண்டும் என்ற அரக்க சிந்தனை, ஆண் இப்படி முறையற்ற சுக போகங்களை அனுபவிக்கப் பிறந்தவன் என்ற வக்கிரமான மனப்பான்மை ஆகியவையும் இவர்கள் மனதில் புகுந்து விடுகின்றது.
சமுதாய அக்கறை இன்மை, பிறர் உரிமைகளைப் பற்றிய அக்கறை இன்மை, அவர்கள் வாழ்வில் சிறு வயதில் ஏற்பட்ட மனக்காயங்கள் இவையும் ஒரு ஆணின் மிருகத் தனமான நடவடிக்கைக்கு காரணம் ஆகின்றது.
வளரும் கீழ்தரமான சூழ்நிலை, குடி, போதை பொருட்கள், பார்க்கக் கூடிய கீழ்தரமான வீடியோக்கள் இவை ஒருவனை மேலும் முரடன் ஆக்கி விடுகின்றது.
* தன்னை மிகப்பெரிய முட்டாள் மாவீரனாக எண்ணுகிறான்.
* வன்முறை என்பது சிறு வயதில் அவன் பார்த்த, அனுபவித்த ஒன்றாக இருக்கலாம்.

கமலி ஸ்ரீபால்
* நிறைய இடங்களில் இவர்கள் எப்படியோ தப்பித்து விட்டால் மனம் மேலும், மேலும் இதிலேயே மூழ்குகின்றது.
* கொடூர முறையில் கற்பழிப்பு இவர்களுக்கு உல்லாச பொழுது போக்காகின்றது.
* கடுமையான தண்டனைகள் சமீப காலமாக செயல்படுத்தப்படுவது நிச்சயம் சற்று அச்சத்தினை இவர்களிடையே ஏற்படுத்தும்.
* மேலும் திரும்ப எதிர்ப்பு காட்ட முடியாத பலவீனமான பெண்களை இவர்களின் சாதகமாக எடுத்துக் கொள்ளும் குணமும் நீடிக்கிறது. இன்று பல பெண்கள் துணிந்து முன் வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதால் தவறான ஆணிடம் சிறு உறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆக தீர்வு என பேசும் போது ஆண்களை விட்டுவிட்டு பேசுவது தீர்வே ஆகாது.
* பெண்களை கூடை போட்டு மூடி வைக்க முடியாது. அவர்களும் வாழ வேண்டும்.
* அச்சத்தின் காரணமாக படிப்பினை தவிர்ப்பது, கல்யாணம் சீக்கிரம் செய்து பொறுப்பை முடித்து விட்டோம் என பேச முடியாது. இன்று வயது வித்தியாசம் இல்லாமல்தான் வன்கொடுமைகள் நடக்கின்றன.
* என்ன செய்ய முடியும்? என்று அங்கலாய்க்கக் கூடாது. என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தினையும் முயற்சி எடுத்து செய்ய வேண்டும்.
* ஆண்களே இல்லாத சமுதாயமோ, பெண்களே இல்லாத சமுதாயமோ இருக்க முடியாது. இரு பாலாரும் சம உரிமையுடன் வாழ்ந்தால் மட்டுமே அது சமுதாயம். ஆக இந்த வன்முறை ஒழிய பல முயற்சிகள் தேவை. கூட்டு முயற்சி தேவை, சட்டங்கள் அச்சுறுத்தல், கடும் நடவடிக்கை தேவை. (இன்றைய கால கட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது).
வளர்ந்து முதிர்ந்தவர்களிடம் கீழ்க்கண்ட முயற்சிகள் எந்த பலனும் தராது. ஆனால் வளரும் இளைய சமுதாயத்தினரிடம் நல்ல பலனைப் பெறலாம்.
* ஆணோ, பெண்ணோ விடலைப் பருவத்தினை அடையும் போது உடலின் இயற்கை மாற்றங்கள், இன விருத்தி இவற்றினைப் பற்றி அறிவது நல்லது. அடுத்த பாலருடன் பழகும் போது எல்லைகளை அவர்கள் அறிய வேண்டும்.
* ஆண்-பெண் இருவரும் இயற்கையின் படைப்பில் சமமே என்பதனை இரு பாலரும் உணர வேண்டும். இதனை உணர்ந்தால் ஆணாதிக்க அகம்பாவம் நன்கு குறையும்.
* காதலே ஏற்பட்டாலும் அடுத்தவரின் 'ஆம்', 'இல்லை' என்ற பதில் அவசியம். நிர்பந்திப்பதும், வன்முறையும் கூடாது.
* பாலியல் கொடுமை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
* ஆண் என்றால் தாக்குவான். பெண் என்றால் தாக்கப்படுவாள்- இவை இன்னும் எத்தனை காலத்திற்கு. பெண் என்றால் எதிர்த்து கடுமையாகத் தாக்குவாள் என்று நிலை நாட்ட வேண்டும்.
* பாதுகாப்பான சூழ்நிலை இல்லாமல் தெரிந்த ஆணும், பெண்ணும் கூட இருக்க வேண்டாமே.
* பாதுகாப்பிற்கு பள்ளிகளும், கல்லூரிகளும் முக்கியத்துவம் தர வேண்டும்.
* பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தேவை.
* இதனைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகள் அதிகம் விழிப்புணர்வாக வெளியிடப்பட வேண்டும்.
சிறுமிகளுக்கு கற்றுத் தரப்பட வேண்டியவை:
* நல்லது எது? கெட்டது எது? வேறு பாட்டினை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். * 'தொடாதே' என பயமின்றி சத்தமாய் கத்த வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. * பயம் என்பதே இருக்கக் கூடாது.
* தன்னம்பிக்கையினை உருவாக்க விடுங்கள். * பிறரிடம் இருந்து அதிலும் தெரியாதவர்கள் இடம் இருந்து பரிசு, சாப்பாடு எதுவும் ஏற்கக் கூடாது.
* உடனே பெற்றோரிடம் சொல்லுங்கள்.
* பெற்றோரின் தொலை பேசி எண், போலீஸ் அவசர எண் 100 இவைகளை மனப்பாட மாக அறிந்திருக்க வேண்டும்.
* ஒரு அவசர பாதுகாப்பு அலாரம் கூட வைத்துக் கொள்ளலாம்.
* 'உதவி' 'Help' என ஆபத்தான நிலையில் குரலை உயர்த்தி கத்த வேண்டும்.
* பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறுமிகள் பயப்படாமல் பேச ஊக்குவிக்க வேண்டும்.
* ஏதோ சிறுமிகள் தவறு செய்து விட்டது போல் கூனி குறுகக் கூடாது. துணிந்து எழ வேண்டும். இது இன்றைய கால சூழ்நிலையின் கட்டாயம் ஆகி விட்டது. போராடத்தான் வேண்டும்.
சமீபத்தில் ஒரு நிகழ்வினைப் பற்றி எனக்குத் தெரிந்தவர்கள் கூற நான் அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
12 அல்லது 13 வயது சிறுமி தனியே செல்லும் போது ஒரு கொடூரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றாள். தன்னால் முடிந்த வரை போராடிய அவள் தன் நகங்களால் அவன் முகத்தில் நன்கு பிராண்டி காயங்களை ஏற்படுத்துகின்றாள். இதனையே போலீசிடம் சொல்லி அவர்கள் எளிதாக அவனை பிடிக்க முடிந்தது. இது போன்று தற்காப்பிற்காக போராடி அடையாளங்களை ஏற்படுத்த வேண்டும். பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் அவற்றினை பக்குவமாக நேரில் சொல்லித் தருவது நல்லது என்பதால் அதிகம் விவரிக்கவில்லை.
ஏன் இப்படி சிலர் வன்முறையான உடலுறவு ஆசையில் சிக்கித் திண்டாடுகின்றனர்? இதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல காரணங்களைக் கூறலாம். ஆனால் அவற்றினை ஏற்க முடியாது. ஏனெனில் இது பல பெண்களின் வாழ்க்கையினையே அழிக்கும் விஷயம். ஆனால் இந்த குணம் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் இருக்கும்.
* இவர்கள் சிந்தனை முழுவதும் இதிலேயே இருக்கும். இவர்களால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது. தவறான வீடியோக்களை பார்ப்பது, பெண்களிடம் தவறாக பேசுவது போன்றவை இருக்கும்.
* நாள் கூட... கூட... இவர்களின் வெறித் தனமும் கூடுகின்றது. பெண்கள் குளிக்கும் இடம், தனியாக இருக்கும் பெண்கள் என அவர்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைவார்கள்.
* பொறுப்புகளை மறந்து விடுவார்கள். வேலை, பள்ளி, குடும்பம் என்ற முறையான வாழ்க்கையில் இருந்து கழன்று வெகு தூரம் சென்று விடுவார்கள். * மனசாட்சி, தயவு, கருணை, இரக்கம் என்ற சொற்கள் இவர்கள் அகராதியிலேயே இருக்காது. * குற்ற உணர்வு, அசிங்கம், அவமானம் என்றெல்லாம் அவர்களுக்கு உரைக்காது.
* ஒரு பெண்ணை அழித்த பிறகு அடுத்த பெண்ணை தேடி கிளம்புவார்கள். இவர்களது செயல்களே இவரை காட்டிக் கொடுக்கும்.
* அமைதியாய் சகித்து செல்வது, வெளியில் செல்லாது இருப்பது போன்றவை பாதிப்பு அடைந்தவரை மனதளவில் கொன்று விடும். மேலும் பின்னாளில் இவரே குற்றவாளியைப் போல் சமூகம் பேசும்.
* பாதிக்கப்பட்ட வரை 'குற்றவாளி' ஆக்கக் கூடாது. * மது, போதை இவை இரண்டும் அறவே நீங்க வேண்டும். * தவறான கீழ்தர ஜோக்குகளை அனுமதிக்காதீர்கள். * பெண்கள் படங்கள் ஆபாசமாய் சித்தரிக்கப்படுவதினை எதிர்த்து விடுங்கள்.
* ஆண்களும் இந்த வன்முறை நடவடிக்கைகளை ஒழிக்க முற்பட்டால் ஒழியஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. செல்போன் மற்றும் இணையத்தில் வரும் மிரட்டல், உருட்டல்களால் பெண்கள் பயந்து விடுகின்றனர். தனிமையாகி விடுகின்றனர். தன்னம்பிக்கை இழந்து சேர்ந்து விடுகின்றனர். தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு மன ரீதியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.
பெண் எதிர்க்க மாட்டாள் என்ற தைரியம் இவர்களை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கொடூரனாக்கி விட்டது. இன்று காலம் மாறி விட்டது. பெண் எதிர்ப்பும், கடும் தண்டனைகளும் சற்று பயத்தின் காரணமாகவே இவர்களை அடக்கச் செய்கின்றன. இந்த எதிர்ப்பு 'பத்ரகாளி' போல் எழும்போது வன்முறை அரக்கன் அழிவான் அல்லது அடங்குவான்.
சிறுமிகளுக்கான சுய பாதுகாப்பினையும் ஒரு தாய் அவசியம் சொல்லித் தர வேண்டும்.
இத்தனை கூட்டு முயற்சிகளின் மூலமே இதற்கான தீர்வினை சமுதாயத்தில் காண முடியும். ஆணின் வீரம் பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தினை தருவதில்தான் உள்ளது என்பதனை ஒவ்வொரு ஆணின் பெற்றோரும் அச்சிறுவனின் ரத்தத்தில் பதிய வைக்க வேண்டும்.
எழுத்திலும், பேச்சிலும் இவை எளிதாக இருக்கலாம். ஆனால் செயல்படுத்த கடும் உழைப்பு தேவை. ஆக ஒவ்வொரு தனி நபரும் இந்த பயங்கரத்தினை ஒழிக்க செயல் பூர்வமாக முன்வர வேண்டும். நான் இதனை என்னிடம் வரும் பெண்களுக்கான சிறு முயற்சியாக செய்கின்றேன்.
- அன்றாடம் வாழ்வியலில் நாம் காணுகின்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் சில நமது ஆற்றலுக்கும்
- நம்பிக்கையில் நடக்கிறது வாழ்க்கை.
கடவுள் எப்போது கைகொடுப்பார்? என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வத்தோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.
அன்றாடம் வாழ்வியலில் நாம் காணுகின்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் சில நமது ஆற்றலுக்கும், இயல்புக்கும் மீறிய சக்தி உடையனவாகத் திகழும்போது அதனை அதீத ஆற்றலுடைய சக்தி என்கிறோம்; சில வேளைகளில் அந்த ஆற்றல், மனித ஆற்றலுக்கு மீறியதாகவும் திகழும்போது, அதனைக் கடவுள் என்று ஆத்திகவாதிகள் அழைத்து நம்பு கின்றனர்; ஆத்திகத்திற்கு எதிரான, கடவுளை நம்பாதவர்களோ அதனை இயற்கைச் சக்தி என இயல்பாக அழைக்கின்றனர்.
எப்படியோ நமக்கு மீறிய, நம்மிலும் வலிமையான ஒரு சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறது; அதனைக் கடவுள் எனக் கொண்டால் அன்பு கலந்த பக்தியால் வழிக்குக் கொண்டு வரலாம்; அல்லது இயற்கை எனக் கொண்டால் அறிவு கலந்த மதியாலும், மனித ஆற்றலாலும் வயப்படுத்தி விடலாம்! என்பது உலகப் பொதுநம்பிக்கையாக இருக்கிறது. நமக்கு மீறிய அந்த ஆற்றலைக் 'கடவுள்' என்றே கொண்டு, அவர் எப்போது மனிதர்க்குக் கைகொடுத்து உதவுவார் என்பதை அறியப் புகுவோம்.
நம்பிக்கையில் நடக்கிறது வாழ்க்கை. அது கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி; மனிதன் தன்னையே நம்புகிற தன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி. நம்பிக்கையோடு வாழ்வியற் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது, "மடுத்த வாயெல்லாம் பகடு" போல அவன் வலிமையோடு செயல்பட்டாக வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
"மடுத்த வாயெல்லாம்
பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு
உடைத்து"
அதாவது பாரம் ஏற்றப்பட்ட வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது; அந்தக்காலத்தில் மாடுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கரங்கள், இக்காலத்தைப் போல டயர்களால் செய்யப்பட்ட மெதுமெதுவானவை அல்ல; கடுமையான இரும்புப் பட்டைகள் பொருத்தப்பட்ட மரச் சக்கரங்கள்; மேலும் சாலைகளும் வழுக்கிக் கொண்டு செல்லும் தார்ச் சாலைகளோ சிமெண்ட் சாலைகளோ அல்ல; குண்டும் குழியுமாகக், கடுமையான மேடும் பள்ளங்களுமாக இருக்கும் சரளைக்கல் சாலைகள்.
இந்த மாதிரியான வசதிக் குறைபாடுகளோடு, பொதியேற்றப்பட்டுள்ள வண்டியை இழுத்துக்கொண்டு மாடுகள் சென்றாக வேண்டும். இயல்பாகச் சென்று கொண்டிருக்கும் சாலையில் திடீரெனக் கற்களால், குண்டு குழிகளால், வண்டி நகராமல் போனாலோ அல்லது வண்டி குடை சாய்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டாலோ, மாடானது சோர்ந்து போகாமல், துணிந்து முயன்று, வண்டியைத் தொடர்ந்து இழுத்துச் செல்லும் முனைப்பிலேயே இருக்கும்.
இவ்வகை மாடுகளே துன்பத்திற்கே துன்பம் கொடுக்கும் ஆற்றல் மிக்கவை; மனிதர்களும் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறும் மாட்டைப்போலத், தமக்கு நேர்ந்திடும் இடர்களையும் உறுதியுடன் இடர்களுக்கு உள்ளாக்கி வெற்றி காண வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கே நமக்கான விடாமுயற்சியையும், துணிவையும், ஆற்றலையும் கடவுள் கொடுப்பாரா? அல்லது நமக்கு நாமே ஊட்டி வளர்த்துக்கொள்ள வேண்டுமா?.
தான் நம்புகிற கடவுள் தன்னைவிடப் பேராற்றல் மிக்கது என்பதை மனிதன் முழுமையாக நம்புகிறான். மனித வாழ்க்கையில் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ திடீரென நிகழ்ந்து விடுகிற இக்கட்டுகளையும், துன்பங்களையும் கடவுளின் ஆற்றல் துணையோடு மட்டுமே கடக்க முடியும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் வழிபாடு, தியானம், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் போன்ற பல்வேறு வழிகளில் கடவுளின் ஆற்றல் துணையை வேண்டி நிற்கிறான்.
கடவுளும் தன்னை நம்புகிற மனித வாழ்வியலின் பல்வேறு நிலைகளில் பங்கெடுத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குச் செய்வதாக மனிதர்கள் நம்புகின்றனர். மனிதர்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது குழப்பம் வந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வழியை அடையாளம் காட்டுவதிலும், குழப்பத்தைத் தீர்த்துவைப்பதிலும் கடவுள் ஒரு தீர்க்கதரிசியைப் போல உதவுவார் என நம்புகின்றனர். அதே போல பெருமளவு வலிமையுடன் துன்பம் நம்மைத் துவைத்துப் போடுவதாக வந்தாலும் அதனை எதிர்கொள்வதா கிய உடல் மற்றும் மன உறுதியைக் கடவுள் வழங்குவார் எனவும் நம்புகின்றனர்.
மனச் சலனங்களும், சச்சரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வியலைக் காட்டும் அமைதி வள்ளலாகக் கடவுள் திகழ்வதாகவும் நம்பிக்கை உண்டு. கடவுள் அவரை நம்புவோருக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் எனத் தேவைப்படும் அனைத்தையும் வழங்கிடும் பொறுப்பான பாதுகாவலராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, தம்மை நம்புகிற பக்தர்களுக்கு எந்தவித அபாயமோ, தீங்கோ நேர்ந்துவிடாமல் காக்கின்ற காவல் பொறுப்பையும் இடைவிடாது கவனித்து வருகிறார்.

சுந்தர ஆவுடையப்பன்
இந்த வகையில், " நல்லது தீயது நாம் அறியோம் அன்னை! நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!" என்று மகாகவி பாரதி பராசக்தியின் மீது பாரத்தைப் போட்டது போலக், கடவுளின் மீது நம்பிக்கையைப் போட்டுவிட்டால், அவர் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிற உதவிகளை வழங்கிக்கொண்டே இருப்பார். எல்லாம் சரி!. இப்படி எல்லா நிலைகளிலும் கடவுள் நம்பிக்கையோடு இருந்தாலும் அவர் எப்போது மனிதர்களுக்குக் கைகொடுப்பார்?.
கடவுள் நம்பிக்கையில் சிறந்த ஒரு மனிதன், ஒரு மழைக்காலப் பொழுதில், நெடுஞ்சாலையில் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். வண்டியை எடுக்கும்போதே 'கடவுளே காப்பாற்று!' என்று ஒருமுறை சொல்லிவிட்டுத் தான் வண்டியைக் கிளப்பினான். தூறிக் கொண்டிருக்கும் மழைச் சாலையில் வண்டி வழுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட தருணங்களில் வண்டியை அதிக வேகமில்லாமல் கவனமாகச் செலுத்த வேண்டும் என்பது அந்த மனிதனுக்கு நன்றாகவே தெரியும்; வேகமெடுத்துச் செல்லும்போது, படக்கென்று பிரேக்கை மிதித்துவிட்டால், வண்டி நிலை தடுமாறிக் கவிழ்ந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு.
ஆனாலும் அந்த வண்டி குறையாத வேகத்துடன்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென எதிரே வந்த ஒரு லாரி, வேகக் கட்டுப்பாடு இன்றி, இந்தக் கார்மீது மோத வருவதுபோல வந்ததால், 'கடவுளே! காப்பாற்று!' என்கிற ஓங்கிய அலறலுடன் காரைச் சாலையை விட்டு இடதுபுறமாகத் திருப்பினான் அந்த மனிதன்; அந்தோ பரிதாபம்; அந்தப்பக்கம் சாலைக்குக் கீழே ஆறடிப்பள்ளத்தில் கார் இறங்கிக் கவிழாமல் நின்றது. மீண்டும் 'கடவுளே காப்பாற்று!' மனிதனின் ஓசை; எந்த விதச் சிராய்ப்பும் இன்றிக் காரைவிட்டு வெளியே, மேலே சாலையோரத்திற்கும் வந்துவிட்டான் அந்த மனிதன்.
கீழே பள்ளத்தில் நிற்கும் காரைப்பார்த்து மீண்டும், ' கடவுளே காரைக் காப்பாற்று!' என்று கூறினான் மனிதன். தொடந்து காரைப்பார்த்து, மனமுருகப் பிரார்த்தனை செய்து 'கடவுளே காப்பாற்று!' என நாலைந்து முறை உரக்கக் கூவினான். கார் மேலே வருவதாயில்லை. சாலை வழியே இருபக்கமும் செல்லும் வண்டிகள், இலேசாக வேகம் குறைத்து வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றன.
பார்த்தான் மனிதன்; இனிக் கடவுளை நம்பிப் பிரயோசனமில்லை; களத்தில் நேரடியாக நாமே இறங்கிவிட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்து விட்டான். காரின் டிக்கியில் இருந்த நீளமான கயிற்றை எடுத்து, காரின் ஒரு முனையில் கட்டி, ஒருபக்கமாக இழுக்கத் தொடங்கினான். அப்போது சாலையில் ஒரு கார் நின்றது; அதிலிருந்து ஒரு மனிதர் இறங்கி வந்தார்; மளமளவென்று அந்த ஆறடிப் பள்ளத்திற்குள் சென்று, காரைத் தள்ளிவிட்டு உதவத் தொடங்கினார்; ஆச்சரியம்! அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கார் மேலே சாலைக்கு வந்துவிட்டது.
பள்ளத்தில் இறங்கி உதவி விட்டு, மேலே சாலைக்கு வந்த மனிதரைப்பார்த்து, "ஐயா! மிக்க நன்றி!. கடவுள் வந்து உதவுவார் என்று நம்பினேன்; அவர் வரவில்லை; நீங்கள்தான் வந்தீர்கள் மிக்க நன்றி!" என்றான் காரோட்டி விபத்தில் சிக்கிய மனிதன். இப்போது உதவிய மனிதர் பேசினார், ''ஐயா! நான் சாலை வழியாகக் காரோட்டிக்கொண்டு செல்லும்போது உங்களை கவனித்தேன்!. நீங்கள் தனிமனிதராய் உங்கள் காரை மேலேற்றக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந் தீர்கள். உடனே உதவுவதற்காக நான் வந்தேன்.
இது ஒரு மனிதனுக்கு ஒரு சக மனிதன் உதவுவது தானேயொழிய வேறெதுவுமில்லை. இதில் கடவுளை எங்கே இழுக்கிறீர்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் உங்கள் காரை மேலே ஏற்றுவதற்காக முயற்சி செய்யாமல் வெறுமனே சாலையில் நின்று கொண்டிருந்தீர்கள் என்றால் நானும் மற்றவர்களைப் போல வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டே சென்றிருப்பேன்" என்றார்.
உண்மையில், உதவ வந்த இந்த மனிதர்தான் கடவுள்! அல்லது கடவுள் அனுப்பிய மனிதர். எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாய் இருக்கும் மனிதருக்குக் கடவுள் எல்லா உதவிகளையும் செய்வார் என்றால் உண்மையில் கடவுள் மந்திரவாதியாக மட்டுமே பார்க்கப்படுவார். இங்கே கடவுள் என்பவர் மனிதர்களை இயங்க வைத்து, அவர்களின் முயற்சிகளுக்கு முழு இயக்கத்தையும் நல்குபவராக இருப்பவர்.
நாம் நம்முடைய சொந்த முயற்சியில் ஒரு கையை உயர்த்தினால், கடவுள் அவரது கருணையினாலே இரண்டு கரங்களையும் கொடுத்துத் தூக்கிவிட ஆயத்தமாக இருப்பார். இந்தக்கதையில் விபத்துக்கு ஆளானவர் வெறுமனே நின்றுகொண்டு 'கடவுளே காப்பாற்று!' என்று கூவிக்கொண்டே இருந்த வரை, உதவிக்கு யாரும் வரவில்லை; ஆனால், அவரே களத்தில் இறங்கியவுடன் உதவிக்கு ஆள் வந்துவிட்டார்; செயலும் சிரமமின்றி நடந்தேறி விட்டது.
திருவள்ளுவரும்,
"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்"
என்கிறார். கடவுளால் முடியாது என்று கை விடப்பட்ட செயலைக்கூடச் சொந்த முயற்சி கொண்டு முயன்று செய்தால், முயற்சிக்கேற்ற வெற்றிக்கூலி உண்டு என்பது இக்குறளின் பொருள். சொந்த உதவிக்குத் தயாராகிறவர்களைக் கடவுள் தனது உதவியையையும் வழங்கிச் செயல்துணை புரிகிறார். கடவுள் நம்பிக்கை என்பது அவனது அருளையே நம்பிக்கையாகக் கொண்டு, சொந்தமாகக் காரியத்தில் இறங்கிச் சாதித்துக் காட்டுவது ஆகும்.
கடவுள் எப்போது கைகொடுப்பார்? ; அவரது அருளைத் துணையாகக் கொண்டு தன்னுடைய சுயவலிமையை மூலதனமாகக் கொண்டு ஒரு செயலில் இறங்கினால் கடவுள் நிச்சயம் கைகொடுப்பார். செயல் வலிமையானது!; செய்வதற்கும் வலிமை தேவைப்படும்; ஆயினும் கடவுளின் உதவி என்பது மனிதனுக்கு வலிமை தந்து அவனை வலிமையானவனாக ஆக்கி அவனது வலிமை மூலமே அவனை வெற்றிபெறச் செய்வது ஆகும். நாம் செயலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் கடவுள் நமக்கு உதவ நம்மைநோக்கி இரண்டடி எடுத்துவைப்பார்.
ஆம் கடவுள் எப்போதும் கைகொடுப்பார்!
தொடர்புக்கு 9443190098
- வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
- சனி மேட்டில் சதுரம் காணப்பட்டால், சமூகத்தில் நல்ல புகழை பெற்றுத் தரும்.
சனி மேடு என்பது நடுவிரலுக்கு (சனி விரல்) கீழே உள்ள பகுதியைக் குறிக்கும் ஒரு மேடு ஆகும்.
சனி மேடு சனி பகவானுடன் தொடர்புடையது. சனி பகவான் நீதி, கர்மா, மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறார்.
சனி மேடு ஒருவரின் பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு, மற்றும் தொழில் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவரது சனி மேடு வலுவாக இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கடினமாக உழைத்து வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
சனி மேட்டில் ஒரு கோடு காணப்பட்டால், மிகுந்த செல்வம், கௌரவம், மரியாதை போன்ற அனைத்து வித நல்ல பலன்களையும் இந்த அமைப்பு உங்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுத் தரும். வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சனி மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால், கலைகளில் ஈடுபாடு, உயர் பதவி உட்பட எண்ணற்ற யோக பலன்களை இந்த அமைப்பு உங்களுக்குப் பெற்றுத் தரும். வாழ்வில் கூட நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணுவீர்கள், உங்கள் பிற்கால வாழ்க்கையில் பலர் உங்களின் பேச்சிற்கு மதிப்பு அளித்து நடப்பார்கள்.
சனி மேட்டில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் காணப்பட்டால், கலைத் துறையில் நுழைவதற்கான முயற்சிகள், செயல்பாடுகள், குழப்பங்கள் தரும்.
இந்த அமைப்பின் படி நீங்கள் படித்தது ஒரு துறை, வேலை பார்ப்பது வேறொரு துறையாக இருக்கும். வாழ்வில் உங்கள் எதிர்பார்ப்பு இயல்பை விட அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் ஏமாற்றமும் அதிகம் காணப்படும். உங்கள் வாழ்வில் அதீத எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே நீங்கள் நலம் பெறுவீர்கள்.
சனி மேட்டில் புள்ளி காணப்பட்டால், இந்த அமைப்பால் வாழ்வில் நம்பக் கூடாதவர்களை நம்பி நீங்கள் ஏமாற இடம் உண்டு. எனவே யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பாலும், முயற்சியாலும் மட்டுமே நீங்கள் முன்னேற இடம் உண்டு.
சனி மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால், சமூகத்தில் நீங்கள் என்ன தான் நன்மை செய்தாலும் கூட அதற்கு உரிய நல்ல பலன்கள் உங்களை வந்து அடையாமல் போகலாம்.
வாழ்வில் போராட்டங்களுக்கு குறைவு இருக்காது எனினும் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் உழைப்பின் பலனை மெல்ல, மெல்ல அடைவீர்கள். எப்படிப் பார்த்தாலும் முற்கால வாழ்க்கை அதிக போராட்டங்களாக இருக்கும்.
சனி மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால், கலைத்துறையில் ஈடுபாடு, திறமை, செல்வம், பதவி போன்ற அனைத்து விதமான நல்ல பலன்களையும் நீங்கள் அடைவீர்கள். உழைப்பாலும், உங்கள் முயற்சியாலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். நிறைய பணம் சம்பாதித்து செலவு செய்வீர்கள்.
சனி மேட்டில் சதுரம் காணப்பட்டால், சமூகத்தில் நல்ல புகழை பெற்றுத் தரும். உங்கள் வாழ்க்கை வசதிகள் கூட எதிர்காலத்தில் மேம்படும். எனினும் பொறுமையாக இருந்தால் மட்டுமே வாழ்வில் நீங்கள் உங்கள் முயற்சியை காட்டிலும் அதிக சாதனை செய்வீர்கள். உங்களுக்கு அடிக்கடி கோப தாபங்கள் வரும் என்பதால் அதன் காரணமாகவும் கூட நீங்கள் சில இழப்புகளை சந்திக்கக் கூடும்.

அ.ச. இராமராஜன்
சனி மேட்டில் முக்கோணம் காணப்பட்டால், கலைத் துறையில் கவுரவம் கூடும். வாழ்க்கையில் துன்பங்கள் அநேகம் வந்து போனாலும் கூட வாழ்வை ரசித்து வாழ்வீர்கள். உங்கள் உழைப்பு உங்களுக்குப் பல விதங்களில் வெற்றியை பெற்றுத் தரும். எனினும், உங்களை யாராவது ஒருவர் உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தொடர் வெற்றிகளை பெறுவீர்கள். இந்த ஒரு இயல்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வு பல விதங்களில் மேம்படும்.
சனி மேட்டில் வட்டம் காணப்பட்டால், இந்த அமைப்பு உங்களுக்கு புகழை தரும். சோதனைகள் அநேகம் இருந்தாலும் கூட வாழ்வில் அவற்றை எல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் பல முன்னேற்றம் தரும் மாற்றங்களை சந்திப்பீர்கள். எனினும் பணம் வருவதும் போவதுமாகவே இருக்குமே தவிர கையில் தங்குவது சற்று கடினம் தான். எனினும் சிலருக்கு பணமாக இல்லாமல் சொத்துக்களாகவும் செல்வம் சேருவது உண்டு.
சனி மேட்டில் வலை காணப்பட்டால், கலைத் துறையின் மீது ஈடுபாடு இருந்தாலும் கூட, கலைகளில் ஓரளவுக்கு மேல் புகழ் அடைவது கடினம். அதனால் கலைத்துறையை பொழுது போக்காக மட்டுமே வைத்துக் கொள்வது நல்லது. அதே போல, நீங்கள் பணம் யாருக்காவது கொடுத்தால் அது திரும்பி வரும் என்று சொல்வதற்கு இல்லை.
அதனால் பணம் - கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பிற்காலத்தில் உங்கள் பொருளாதாரம் ஓரளவு மேம்படும். எனினும் நீங்கள் சொத்துக்களை அல்லது வீடு வாங்கும் பாக்கியத்தை அடைவீர்கள்.
சனி மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால், சூரிய மேட்டின் தன்மைகள் அமைவதால் உங்களுக்கு புகழ், பெருமை, செல்வாக்கு கூடும். சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டு விருதுகளை கூட நீங்கள் பெறுவீர்கள். எனினும் உங்கள் புகழுக்கு தகுந்த படி பொருளாதாரம் அதீதமாக சிறப்படைய வாய்ப்பில்லை. புகழ் அல்லது செல்வம் இரண்டில் ஒன்றைத் தான் வாழ்வில் நீங்கள் பெறுவீர்கள்.
சனி மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால், இலக்கியத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் மற்றும் கலை உணர்வுகள் சற்று அதிகம் இருக்கும். பிறர் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். எல்லோரிடமும் சற்று கவனமாக இருந்ததீர்கள் என்றால் நல்ல பலன்களை தரும். நீர் அல்லது திரவம் சார்ந்த தொழில்கள் இது போன்ற அமைப்பு உள்ள சிலருக்கு நன்மையை செய்து உள்ளதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
சனி மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால், போர் குணம் அதிகம் இருக்கும். வாழ்வில் அதிக ஏற்ற இறக்கங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. ரத்தம், ரத்தம் சம்மந்தமான சில குறைபாடுகளை நீங்கள் சந்திக்கக் கூடும். எனவே உணவில் அதிகம் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு வெற்றியை தரும். தோல் மற்றும் சருமத்தில் சில பிரச்சினைகள் அடிக்கடி வந்து போகலாம்.
சனி மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால், நீங்கள் அறிவாற்றலுடன் மிகுந்தது காணப்படுவீர்கள். சமூகத்தில் பிறர் மெச்சத்தக்க காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், பூமி, வீடு என அனைத்து விதமான செல்வங்களையும் நீங்கள் பெறுவீர்கள், உழைப்பிற்கு தகுந்த நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இது ஒரு நல்ல அமைப்பு ஆகும்.
சனி மேட்டில் சுக்கிரன் சின்னம் காணப்பட்டால், கலைத்துறையில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். உலக சுகங்களில் கூட உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கலாம். மேலும், யதார்த்த வாழ்வை விட கற்பனையான வாழ்வைத் தான் உங்கள் மனம் அடிக்கடி நாடிச் செல்லும், நீங்கள் அதிர்ஷ்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தீர்கள் என்றாலே வாழ்க்கையில் பல விதங்களில் வெற்றி அடைவீர்கள். உங்களது முற்கால வாழ்க்கை பல சோதனைகளை தந்தாலும் கூட பிற்கால வாழ்க்கை உங்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இருக்கும்.
சனி மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கொண்டு இருக்கலாம். எதிரிகள், வஞ்சகர்கள், அவதூறு பேசுபவர்கள் அநேகம் பேர் இருந்தாலும் கூட நீங்கள் அவரவர் வழியில் சென்று பதிலடி கொடுக்கும் தன்மை கொண்டவர்கள். வாழ்வின் முற்பகுதியை காட்டிலும், பிற்பகுதியில் நீங்கள் சிறப்புடன் இருப்பீர்கள். எனினும் பிறர் விவகாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருந்து விட்டீர்கள் என்றாலே போதும், சமூகத்தில் உங்கள் மதிப்பு மேலும் உயரும். மற்றபடி, நீங்கள் நிதானமாக செயல் பட்டீர்கள் என்றாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
சனி மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவை இல்லாத பழி சொற்களுக்கு எதிர்காலத்தில் நீங்கள் ஆளாக நேரிடலாம். எனவே சுற்றத்தார்களுடன் கவனமாக இருங்கள். எனினும் மாற்று மதம் சார்ந்தவர்களால் உங்களுக்கு எப்போதுமே நன்மை உண்டு. உங்கள் உறவு வட்டாரத்தில் உங்கள் மதிப்பு குறையலாம் எனினும் உறவுகளை விட நண்பர்கள் கைகொடுப்பார்கள். துர்க்கையை வழிபட வாழ்வில் பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.
சனி மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால், எலும்புகள், பற்கள் சம்மந்தமான பிரச்சினைகளை வாழ்வில் நிறைய சந்திக்கலாம். பொதுவாகவே உங்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட இடம் உண்டு. அதனால் உடல் நிலையை நீங்கள் பத்திரமாக | பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல, வாழ்வில் மிருகங்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிறருக்கு ஜாமீன் போடுவதை குறிப்பாக தவிர்ப்பது நல்லது. விநாயகப் பெருமானை நீங்கள் அதிகம் வணங்கி வருவது நல்லது.
செல்பேசி- 9965799409
- பல் துலக்காமல் எந்த வேலையையும் செய்ய கூடாது என்பதாகும்.
- மனித உடல் தங்கு தடையின்றி இயங்க சரியான அளவில் சக்தி தேவை.
ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியத் திட்டத்தில், தினசரி கடைபிடிக்க வேண்டியவைகளில் காலை தண்ணீர் பருகுவதைப் பற்றி பார்த்தோம், பின்பு மலம் கழித்தல் மற்றும் அதற்கான மருந்துகளைப் பற்றி பார்த்தோம். அதற்கு அடுத்தப்படியாக நாம் செய்ய வேண்டியது பல துலக்குதல், பல் துலக்குதலுக்கு "தந்த தாவனம் " என்று பெயர்.
தந்த என்றால் பல், தாவனம் என்றால் அழுக்குகளை நீக்குதல் என்று பொருள்.
அவற்றை எவ்வாறு செய்வது என்று ஆயுர்வேதம் சொல்லிக்கொடுக்கிறது, என்ன... பல் விலக்க ஆயுர்வேதம் சொல்லிக்கொடுகிறதா? ஆம் ஆயுர்வேதம் என்பது ஆரோக்கியமாக வாழ மனிதன் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை முதலில் எடுத்துரைக்கிறது,மேலும் மனிதன் அவர்களுடைய வாழ்நாளில் 32 தவறுகளை செய்யக் கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் இரண்டாவது தவறு பல் துலக்காமல் எந்த வேலையையும் செய்ய கூடாது என்பதாகும். எனவே பல் துலக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உடல் கருத்தரிக்கும் போது சில உடல் உறுப்பு அம்சங்கள் தாயிடமிருந்தும். சில உடல் உறுப்பு அம்சங்கள் தந்தையிடமிருந்தும் வருவதாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் பல்லானது தந்தையிடமிருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் 32 என்ற எண்ணிக்கையில் பல்லிருப்பதாகவும், அவற்றில் 8 பற்கள் நிரந்தமானவை, மீதமுள்ள பற்கள் விழுந்து முளைக்கக்கூடியவை என்றும், சராசரியாக ஒரு மனிதனுடைய பல்லின் நீளம் 2 அங்குலம் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பற்களை எவ்வாறு பராமரிப்பது என்று பார்ப்போம். மனித உடல் தங்கு தடையின்றி இயங்க சரியான அளவில் சக்தி தேவை. அந்த சக்தியை தருவது உணவு தான். மனித வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. உடல் சக்தி, செயல்படும் திறன், உடல் வனப்பு, புத்திக் கூர்மை, இவை அனைத்தும் உணவை அடிப்படையாக கொண்டதே. ஆனால் மேற்கண்ட பலன்களை பெற வேண்டுமெனில் உண்ட உணவு நன்றாக சீரணமடைய வேண்டும். அந்த சீரணம் பற்களிலேயே தொடங்கி விடுகிறது, ஆம் பெரிய கடினமான உணவு பொருட்களை சிறிய மென்மையான உணவு பொருட்களாக மாற்றி சீரணமாகுவதற்கு ஏற்றவாறு மாற்றி தருவது பற்களே.

ரா. பாலமுருகன்
உயிர் வாழ அடிப்படையாகயிருக்கின்ற உணவை சீரணிக்க பயன்படும் பற்களை அதிக சிரத்தையுடன் பேணிக்காக்க வேண்டும் அல்லவா! மேலும் காண்போரை கவரவும், முக அழகிற்கும் காரணமாகயிருப்பது பற்களே, எனவே அவற்றிக்காவும் பற்களை பராமரிக்க வேண்டும். இல்லை எனில் நோயின் வாசலாக வாய் அமைந்து விடும். பற்களை நன்றாக துலக்குதல், நாக்கை சுத்தமாக்குதல், வாய் கொப்பளித்தல் என்ற மூன்று வழிகள் மூலமாக பற்களை பராமரிக்கலாம்.
முன்பு எல்லாம் மலம் கழித்த பின்பு வேப்பங்குச்சியை சுண்டு விரல் அளவுக்கு உடைத்து, நுனிப்பகுதியை கடித்து தூரிகையாக்கி நொடி பொழுதில் பல் துலப்பானை (டூத் பிரஷ்) தயார் செய்து பல் துலக்குதல், நாவை சுத்தம் செய்தல் என்று டு இன் ஒன் ஆக பயன்படுத்தினர். இந்த இயற்கை (organic) டூத் பிரஷை எப்படி டிசைன் செய்யலாம் என்பதையும், வடிவுருவம் பற்றி ஆயுர்வேதம் தெளிவாக விளக்குகிறது. இயற்கை டூத் பிரஷ் 12 அங்குலம் நீளமுள்ளதாக இருக்க வேண்டும். நன்றாக பரிச்சையப்பட்ட மரதிலிருந்து பறிக்கப்பட்ட குச்சியாகயிருக்க வேண்டும்.
நுனிப்பகுதி நன்றாக நசுக்கப்பட்டு மென்மையானதாக இருக்கு வேண்டும், அவற்றின் அளவு சுண்டு விரலின் நுனிப்பகுதி பருமன் அளவிற்குயிருக்க வேண்டும், பற்குச்சி கோணல் இல்லாதவாறு, கணுக்களில்லாதவாறு, நேராக இருக்க வேண்டும். மேலும் அக்குச்சிகள் துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு சுவை கொண்டதாகயிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நேர்த்தியாக எவ்வாறு செய்வது என்றால், குடும்பத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக செய்து பத்திரப்படுத்தி, பல் துலக்கும் போது ஈரமாக மாற்றி பயன்படுத்தலாம்.
அவசரகதியான , நவீனமயமான இக்காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்க தோன்றுகிறது அல்லவா! இந்த கேள்வி குறியில்லாத கேள்வியின் விளைவு நம் வீட்டு அருகில் கிடைக்கும் வேப்பம்குச்சி அயல் நாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. நம் நாட்டு பாரம்பரியம் அயல் நாட்டினருக்கு தெரிகிறது, நமக்கு தெரிவதில்லை.

சரி பிறந்ததிலிருந்து பிளாஸ்டிக் பற்குச்சியை பயன்ப்படுத்தி பழகியாச்சு, இப்போது வந்து இயற்கை பற்குச்சி என்றால் எப்படி, எப்போதும் வேண்டாம் வாரத்தில் சில நாட்களாவது பின்பற்றலாமே... அவ்வாறு செய்யும் போது எல்லோரும் வேப்ப மரத்தை நாடினால் என்னாவது, அதற்கும் மாற்று வழியை ஆயுர்வேதம் கூறுகிறது, பல் துலக்க வேப்ப மரம் மட்டுமில்லை ஆல மரம், வேங்கை மரம், கருங்காலி மரம், புங்க மரம், கருவேலம் மரம், நாயுருவி, மருத மரம் போன்ற மூலிகைளையும் பல் துலக்க பயன்படுத்தலாம்.
மேற்கண்ட மூலிகைகளை ஆராய்ந்தால் இவையனைத்தும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி, பற்களுக்கு வலுவை கொடுக்க கூடிய மூலிகை என்பது புலப்படும்.
இவ்வளவு நன்மைக் கொண்ட பற்குச்சிகளை பயன்ப்படுத்தாமல் கவுரவம் என்று கருதி பல் குச்சியை புறக்கணித்ததின் விளைவு, பட்டி தொட்டி எங்கும் பெட்டி கடையில் பல வர்ணத்தில் தொங்கும் நவீன டூத் பிரஷ்.
சரி எப்படி விலக்குவது என்றால் பற்களை மென்மையாக அதிக துரிதமில்லாமல், மவுனமாக பல்லை துலக்க வேண்டும். அதன் பின் பற்பசையை பயன்படுத்த வேண்டும். என்ன... இன்னும் பல் துலக்குதல் முடியவில்லையா? ஆமாம் முடியவில்லை இனிமேல் தான் இருக்கிறது,. இதுநாள் வரையிலும் பற்பசை பற்களுக்கு தான் என்று கருதி இருந்தோம். ஆனால் பற்பசை ஈறுகளுக்கு தானாம். பற்குச்சி பற்களுக்கு, பற்பசை ஈறுகளுக்கு என்கிறது ஆயுர்வேதம். அதற்கு ஒரு பற்பொடி பால் முலாவையும் வழங்கி உள்ளது.
திரிபலா-நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்.
திரிகடுகு -சுக்கு, மிளகு, திப்பிலி
திரிஜாதக -இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி ஆகிய 9 மூலிகைளையும் சம அளவு எடுத்து பொடி செய்து காற்று புகாவண்ணம் பத்திரப்படுத்தி தேவைப்படும் போது தேவையான அளவு எடுத்து தேனில் குழைத்து பல் ஈறுகளில் மெல்ல மசாஜ் செய்வது போல் வட்ட வடிவில் தேய்த்த பின் வாய்க் கொப்பளிக்க வேண்டும். திரிபலா -பற்களில் ஏற்படும் ரக்த கசிவை போக்கும், பற்களின் உறுதி தன்மையை மேம்படுத்தும். திரிகடுகு- வாயில் உள்ள சுரப்பிகளை தூண்டும். திரிஜாதக -வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும்.
தேன் - வாய்ப்புண்ணை குணமாக்கும். மேலும் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை பல்லை துலக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பற்கள் பளிச்சிட வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி பல்லை தேய்த்து துப்பினால் தான் திருப்தி அடைகின்றனர். இது பற்களுக்கு நல்லதல்ல.
தின ஆரம்பம் அதாவது காலை வேளை பின்பு சாப்பிட்ட உடன் பற்களை துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது ஆயுர்வேதம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது இயல்பாகிவிட்டது. சிலர் நான்கு வேளை சாப்பிடுப்பவர்களும் உண்டு அப்போ நான்கு வேளை பல் துலக்க வேண்டுமா? இல்லை பொதுவாக ஒரு நாளைக்கு காலை மாலை என இருவேளை பல்லை துலக்கலாம். சாப்பிட்ட பின்பு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும் அப்போது தூய்மையான அழுக்குகள் அற்ற நகங்கள் இல்லாத ஆள் காட்டி விரலை கொண்டு பற்களை மெல்ல தேய்த்து, ஈறுகளை மெல்ல வருடுவதின் மூலம் சுத்தம் செய்து கொள்ளலாம்.
சாப்பிட்ட அவசரத்தில் சாப்பிட உதவி புரிந்த பல்லையும் , ஈறுகளையும் ஈட்டி கொண்டு குத்துவது போல் தேய்க்க கூடாது இதனால் ஆதாயம் குறைவு சேதாரம் அதிகம். இயற்கை பற்குச்சிகளை கொண்டு பற்களை விலக்கி, ஆயுர்வேத பற்பசை கொண்டு ஈறுகளை மெல்ல தேய்த்து விரலுக்கும் ஈறுகளுக்கும் ஒரு ஆத்ம தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நரம்புகளும் நன்கு தூண்டப்படும், நொதிகளும் நன்கு சுரக்கும் என்பதில் ஐயமில்லை.
- குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை.
- தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது.
குழந்தை பிறந்து, நஞ்சுக்கொடி பிரிந்த அடுத்த நிமிடம் தாயின் மார்பில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.
முதல் கர்ப்பம எனில், கர்ப்பம் உறுதியானது முதலே (அதாவது முதல் மூன்று மாதங்களிலேயே) தாயின் மார்பில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி தொடங்கிவிடும்.
அது போலவே ஒரு சுவாரசியமான விஷயம். என்னவென்றால் கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது பார்த்தால் குழந்தை "எப்படி தாயிடம் உறிஞ்சி குடிக்க வேண்டும்?!" என்பதை பயிற்சி செய்து கொண்டே இருக்கும்.
குட்டி போட்டு பாலூட்டும் மேமல்ஸ் என்று சொல்லப்படும் பாலூட்டிகள் பிரிவில் மனித குழந்தை தான் மிகவும் பாவமாக பார்க்கப்படுகிறது.
பிறந்தது முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை உணவை தேடிச் சென்று பெற முடியாத நகர முடியாத ஒரு ஜீவனாக இருப்பது மனித குழந்தைதான்.
எனவே அது தாய்ப்பாலையே நம்பி இருக்கிறது என்று கூறலாம்.
தாய்ப்பாலில் என்னென்ன சத்துகள் உள்ளன?
கார்போஹைட்ரேட்
புரோட்டின்
கொழுப்பு சத்து
விட்டமின்கள்
எதிர்ப்பு சக்தி மருந்துகள்
நீர்
நொதிகள், ஹார்மோன்கள்
நிறைந்தது தாய்ப்பால்.
குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை. குழந்தை வளர வளர தாய்ப்பாலில் உள்ள சத்துகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவு எவ்வளவு?
பிறந்த குழந்தையினுடைய தாய்ப்பால் தேவை ஒரு முறைக்கு 10 மில்லி அளவு தான்.
அது படிப்படியாக அதிகரித்து, ஒரு முறைக்கு 150-200 மிலி வரை தாய் பால் கொடுக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
எந்த நிலை தாய்ப்பால் கொடுக்க வசதியானது? சரியானது?
குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை தாய் சவுகரியமாக சாய்ந்து அமர்ந்து கொள்ளலாம். பிறகு தாயும் குழந்தையும் படுத்துக் கொள்ளலாம். தாய்க்கு ஏற்ற வசதியான சூழ்நிலை தான் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்றது. ஒருமுறை 20 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு நாளில் பத்து பதினைந்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு:
பால், பழச்சாறுகள், சூப்புகள் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும் ஏதாவது அருந்திவிட்டு பிறகு தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
அது தவிர உணவிலும் கடுமையான பத்திய முறைகளை விட்டு எல்லா காய்கறிகளையும் தாய்க்கு சேர்த்து நல்ல ஒரு சரிசமமான உணவை கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது ஏதாவது மாத்திரைகளை சாப்பிட வேண்டுமா? புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டுமா?
கால்சியம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தாயின் உடல் நலத்தை பாதுகாப்பதோடு குழந்தைக்கு தேவையான கால்சியத்தை தருவதற்கும் உதவும். டிஎச்ஏ உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தையினுடைய மூளை வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பிற்கும் சத்திற்கும் தேவையான புரோட்டின் மாவுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
பிரசவமானதும் முதலில் சுரக்கும் சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் நல்லதா? குழந்தைக்கு கொடுக்க வேண்டுமா? குழந்தை பிறந்ததும் தாய்க்கு முதலில் சுரக்கும் நீர் போன்ற திரவம் கொலஸ்ட்ரம் எனப்படுகிறது. இது ஏராளமான எதிர்ப்பு சக்தி இம்யுனோ குளோபுளின்களை கொண்டுள்ளது. அதனால் இதை கட்டாயம் குழந்தைக்கு புகட்ட வேண்டும். பல வீடுகளில் குழந்தைக்கு கொடுக்காமல் கீழே பிழிந்து விட்டு விடுவார்கள். அது மிகவும் தவறான பழக்கமாகும்.
தாய்ப்பால் சுரக்கா விட்டால் என்ன காரணம்?
தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது மிக மிக அரிதாகும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் வரை காத்திருக்கலாம். முதல் 10 நாட்கள் வரை கூட ஒரு சிலருக்கு பால் சுரக்க தாமதமாகலாம். அளவு குறைவாக இருக்கும். ஆனால் படிப்படியாக அதிகரித்து இரண்டு மாதங்கள் ஆகும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் அல்லது அதைவிட அதிகமான பால் சுரக்கும்.
கூடுதலான மன அழுத்தம் அல்லது கடினமான பிரசவம். பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உடல் சோர்வு அல்லது குழந்தை தாயின் அருகில் இல்லாமல் பச்சிளம் குழந்தை பிரிவு போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டிருப்பது, போன்றவற்றால் தாய்ப்பால் சுரப்பது ஒரு சிலருக்கு குறைவாக இருக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் காற்றோட்டமான தனிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதும் தாய்க்கு தாய்ப்பால் சுரப்பதிலும் கொடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.
தாய்ப்பால் போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
தாய்ப்பால் குடித்தவுடன் குழந்தை நன்றாக உறங்குவது, ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பது,
தாய்ப்பால் குடித்தவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுவது, இவற்றிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எப்போது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கலாம்?
முதல் நான்கு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. சில குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கூட தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்கு பிறகு மற்ற உணவுகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம்.
குறைந்தபட்சம் 9 மாதங்களில் இருந்து ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. உலக சுகாதார நிறுவனம் (WHO)பரிந்துரைப்பது இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதாகும்.

ஜெயஸ்ரீ சர்மா
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
பிரசவமான உடனே தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்பப்பை நன்றாக சுருங்கும். இரத்தப்போக்கின் அளவு குறையும். முக்கியமாக தாயின் எடை குறையும். அதிக எடை ஏறாது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் எளிதாக இருக்கும்.
குழந்தை நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை தாய்க்கு உண்டாகும். அத்துடன் செலவும் வேலையும் குறைவு. மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய முக்கிய காரணியாக தாய்ப்பால் கொடுப்பது விளங்குகிறது.
சிசுவுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு இறுகிய பந்தம்
உருவாகிறது. குழந்தைக்கு மிகுந்த பாதுகாப்பு உணர்வும் பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தையின் உடல் எடையும் சரியான அளவு இருக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு வேறு உணவுகள் எப்போது தேவைப்படும்? தண்ணீர் கொடுக்க வேண்டுமா?
ஒரு குழந்தைக்கு 4-6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த நேரத்தில் தண்ணீர் கூட குழந்தைக்கு தேவையில்லை. ஆனால் புட்டி பால, மற்ற உணவுகளை துவங்கும் பொழுது குழந்தைக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரை கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்கா விட்டால் என்ன செய்யலாம்?
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பச்சிளங்குழந்தை ஐந்து நாட்கள் வரை மலம் கழிக்காவிட்டாலும், ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், ஒரு நாளைக்கு பத்து முறை வரை மலம் கழிக்கலாம். அதுவும் நார்மல்.
தாயின் அழகு கெட்டுவிடுமா?
தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சிக்கு விலையேதும் இல்லை. குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து ஒரு தாயை காக்கிறது. தாய்ப்பால் நிறுத்திய பிறகு சரியான உடற்பயிற்சி செய்தால் அழகில் எந்த குறைபாடும் ஏற்படாது.
உலகின் சில ஐரோப்பிய நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 10% விட குறைவாக இருக்கிறது. அதாவது 100 -ல் 6 தாய் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் விருப்பமுடன் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து அயர்லாந்து கிரீஸ் நார்வே போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 60% ஆகும். ஆனால் பெரும்பாலான பணியிடங்களில் தாய்க்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடிய வசதிகள் இல்லை. அதை அரசு மேம்படுத்த வேண்டும்.
சிசுவின் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும் உடல் உறுதிக்கும் அஸ்திவாரமாகும்.
அதுபோலவே இன்று ஆரோக்கியமாக இருக்கும் நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டியது தன் ரத்தத்தை பாலாக்கி பரிந்தூட்டிய நம் அன்னைக்கு!
தாய் சேய் நலம் காப்போம்!
வாட்ஸ்அப்: 8925764148
- பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கும் விரதங்களுள் முக்கியமானது வரலட்சுமி விரதம். இது கணவனின் ஆயுள், ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வரலட்சுமியை என்றென்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்காக மேற்கொள்ளும் விரதம். ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாறு: சவுராஷ்டிராவை ஆண்ட பத்ரச்ரவா மன்னனின் மனைவி கசந்திரிகா. இவர்களுக்கு ஏழு ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தை. கசந்திரிகாவின் நற்குணங்களால் கவரப்பட்ட மகாலட்சுமி, அவள் மீது கொண்ட கருணையால் அருளாசி வழங்கும் எண்ணத்தில் கசந்திரிகாவின் வீடு தேடி ஒரு பழுத்த சுமங்கலிப் பெண்ணாகச் சென்றாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "அம்மா, நீங்கள் யார்? என்று வினவினாள் கசந்திரிகா. அதற்கு அந்த சுமங்கலிப் பெண், "உத்தமியே மகாலட்சுமி அவதரித்த இந்த துவாதசி வெள்ளிக்கிழமையன்று நன்றாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு, பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டாள். தவறை சுட்டிக் காட்டியதும் ஆணவம் கண்ணை மறைக்க கோபமே கொள்ளாத கசந்திரிகா சுள்ளென்று சினம் கொண்டாள்.
கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி அந்தப் பழுத்த சுமங்கலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, "எனக்கே புத்தி சொல்கிறாயா? என் கண் முன் நிற்காமல் உடனே ஓடி விடு" என்று கூறி துரத்தி விட்டாள். அழுதபடி வெளியே வந்த அந்த அம்மணியைக் கண்ட கசந்திரிகாவின் மகள் சியாமா, 'அம்மா ஏன் அழுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள்.
"பெண்ணே, உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால்தான் இங்கிருந்து திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, அந்தக் கன்னிப் பெண் சியாமாவுக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் அதை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்து கூறினாள்.
மகாலட்சுமி எடுத்து தந்த நோன்பு முறையை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வந்தாள் சியாமா. அதனால் அந்த வீட்டிலேயே வரலட்சுமி தங்கிவிட, அங்கே செல்வமும், அமைதியும் நிலையாகக் குடியிருந்தன.
சியாமா, திருமணப் பருவம் எட்டியதும் மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் பத்ரச்ரவா. அதையடுத்து கணவனின் கரம்பிடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற சியாமா, இத்தனை நாள் பூஜித்து வந்த வரலட்சுமி தேவியின் திருமுகத்தையும் தன்னுடன் எடுத்து சென்றாள்.

புகுந்த வீட்டிலும் வரலட்சுமி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்தாள். அதனால் அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகின. ஆனால் கசந்திரிகாவோ மகாலட்சுமியை அவமானப்படுத்தி துரத்தி விட்டதால் அவளை விட்டு நீங்கி நிரந்தரமாக சியாமா வீட்டிலேயே தங்கி விட்டாள் வரலட்சுமி. இதனால் பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடி ஒழிந்து உணவுக்குக்கூட வழியற்று பராரியாகத் திரிந்தனர்.
அவர்களுக்காக சியாமா அனுப்பி வைத்த தங்கக்காசுகளும், கரித்துண்டுகளாக மாறின. சியாமாவுக்கு தனது தாய், சுமங்கலிப் பெண்ணாக வந்த மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் நடந்தவைகளை நினைவுப்படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, நோன்பின் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அதன்படியே கசந்திரிகாவும் வரலட்சுமி நோன்பு இருக்கத் தொடங்கினாள்.
அதன்பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் திரும்ப, இழந்த செல்வங்களும் அதிகாரமும் மீண்டும் கிடைத்தன.
மகாலட்சுமியே நேரடியாக வந்து விரதமுறைகளைச் சொல்லிக் கொடுத்து மேற்கொள்ளச் செய்ததால். இந்த விரதத்தை அனுசரிப்பவர்களும் குரு முகமாக, யாரேனும் பெரியவர்கள் எடுத்து கொடுக்க அதை தீக்ஷையாகப் பெற்று விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இதற்காக திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்ணை ஆடி நோன்புக்காக மறுவீடு அழைத்து வந்து, நோன்பு நோற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து நோன்பு நோற்கச் செய்வார்கள்.
இதில் வெள்ளியிலான அம்மன் முகத்தை கலசத்தில் வைத்து அலங்கரித்தல், செம்பில் அம்மன் முகத்தை வரைதல், சுவற்றில் அம்மன் ரூபத்தை தீட்டுதல் என்று பல்வேறு முறைகள் உள்ளன. அந்தந்த வீட்டு வழக்கப்படி நோன்பு முறைகளைக் கற்றுக் கொள்ளும் பெண்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.
மண்டபம் அமைத்தல்: முதல் நாள் வியாழக்கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி அழகுப்படுத்த வேண்டும். மரத்தாலான இருக்கையை (ஸ்டூல்) நன்கு கழுவி காயவைத்து அதில் மண்டபம் அமைப்பது வழக்கம். சில வீடுகளில் இதற்காகவே தனியாக ஒரு மர இருக்கையை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு வெள்ளையடித்து காவி வர்ணம் பூசி, மண்டபம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து கிழக்கு முகமாகப் போட வேண்டும்.
அதன்மேல் ஒரு பட்டாடையை விரித்து நான்குபுறமும் மாவிலைத் தோரணங்களை சுற்றிக் கட்ட வேண்டும். நான்கு கால்களிலும் சிறிய வாழைக் கன்றுகளைக் கட்டி அலங்கரிக்கவும். இருக்கையின் உட்புறம் இரு கால்களுக்கு இடையில் ஒரு மனைப்பலகையைப் போட்டு அதில் மாக்கோலமிட்டு மண்டபத்தை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
அம்மனின் திருமுகத்தில் காதோலை, கருகமணி அணிவித்தல் மற்றும் இன்னபிற அலங்காரங்களையும்கூட செய்து வைத்து கொள்ளலாம். இதில் சிலர் மண்டபம் எதுவும் அமைக்காமல் வெறுமனே மனை மீது கலசம் அமைப்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் சுவற்றில் கஜலட்சுமி உருவத்தை வரைந்து வைத்து நோன்பு நோற்பதும் உண்டு. அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுபோக நோன்பு சரடுகள் மற்றும் கோடி தந்தம் போன்றவற்றையும் தயாராகச் செய்து வைத்து கொள்ளலாம்.
விரத பூஜை: வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து தூய ஆடையணிந்து பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜையறையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மனை மீது இலை விரித்து பச்சரிசியைப் பரப்ப வேண்டும். கலசம் வைக்கும் தாம்பாளத்தில் நெல் அல்லது கோதுமையைப் பரப்பி அதன்மீது நீர் அல்லது தானியம் நிரப்பிய பூரண கலசக் கும்பத்தை வைக்கவும்.
முகம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தேங்காய் மீது அம்மனின் முகத்தைக் கட்டலாம். செம்பு மீது அம்மன் உருவத்தை வரைபவர்கள் சுண்ணாம்பைக் கரைத்து அம்மனின் முகத்தை வரையலாம். அந்தத் தாம்பாளத்தை வீட்டின் மையக் கூடத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மனை மீது வைத்து, சுமங்கலிப் பெண்கள் இருபுறமும் பிடித்து தூக்கிக் கொண்டு, வரலட்சுமி அம்மனை வீட்டுக்குள் அழைக்கும் பாடலை பாடியபடி மண்டபம் வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து மண்டபத்தில் பரப்பியிருக்கும் அரிசி மீது கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
ஒரு வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டி விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூர்வாங்க பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமியைக் கலசத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து, பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.
நைவேத்திய பதார்த்தங்கள்: பூஜை முடிந்ததும் நைவேத்யமாக இட்லி, அன்னம், பருப்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, அவியல், கூட்டு, கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாயசம், வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் பச்சடி, தேங்காய் பூரணம்-எள்ளு பூரணம் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, கோசம்பரி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நாவல் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
இத்தனை வகைகள் முடியாவிட்டால் பழ வகைகள் மற்றும் பாயாசம் மட்டும் கூட படைக்கலாம்.
நிவேதனம் முடிந்ததும், தீப, தூபங்கள் காட்டி வணங்க வேண்டும். பிறகு அம்மனை மனதாரப் பிரார்த்திக் கொண்டு, நோன்புச் சரடை முதலில் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அதன்பிறகு வீட்டின் மூத்த பெண்மணிக்கு அணிவித்துவிட்டு, வரிசையாக எல்லோருக்கும் அணிவிக்க வேண்டும். சரடு கட்டிக் கொள்ளும்போது ஒரு மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு வலது கையில் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்விதமாய் எல்லாம் சுபமாய் முடிந்ததும் அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து, வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் ஆரத்தி கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அனைவரும் கூடியிருந்து பிரசாதங்களை உண்ட பிறகு. பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாலை ஆரத்தி: மாலையில் விளக்கேற்றி அஷ்டோத்திரம் சொல்லி, பாடல்கள் பாடி பூஜை செய்து, அவல், வெல்லம் அல்லது ஏதேனும் சுண்டல் வகைகளை நைவேத்யம் செய்தல் வேண்டும். தீபம் காட்டி மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை நித்திரை கொள்ள செய்ய வேண்டும். இரவில் பிரசாதங்களை மட்டும் உண்டுவிட்டு உறங்க வேண்டும்.
புனர் பூஜை: மறுநாள் காலையில் புனர் பூஜை செய்து பால், பழம், கல்கண்டு ஆகியவற்றைப் படைத்து தீபம் காட்டிவிட்டு, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். அதன்பிறகு அம்மனை கலசத்துடன் எடுத்து கதவுக்கு பின்புறமாய் வைத்துவிட வேண்டும் அல்லது வீட்டின் அரிசிப் பெட்டிக்குள் வைத்து மூடி விடவேண்டும். இதை அவரவர் வீட்டு வழக்கப்படி செய்வது உத்தமம். இப்படிச் செய்வதால் நம் வீட்டுக்கு வந்த வரலட்சுமி அம்மன் நம்மோடு நம் வீட்டிலேயே தங்கி விடுவதாக ஐதீகம்.
சிறிது நேரம் கழித்து கலசத்தை கலைத்து அம்மன் முகத்தை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். (கலசத்தில் தானியங்கள் போட்டிருந்தால் அதை நாம் சமைக்கும் தானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) கலசத்தில் போட்டிருந்த நாணயத்தைப் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்வது வழக்கம். அதன்பிறகு மண்டபத்தை கலைத்து பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்விதமாய் வரலட்சுமி விரத பூஜையை சுபமாய் நிறைவேற்றிட வீட்டில் என்றும் செல்வமும் வளமும் நிலைத்திருக்கும்.
- கர்ணனிடம் தன் வள்ளல் தன்மை காரணமாக எந்த கர்வமும் இல்லை.
- கீரியிடமே கேட்போம் என முடிவு செய்த தர்மபுத்திரர் அதைக் கனிவோடு பார்த்துப் பேசலானார்:
நிறைவடைந்தது பாண்டவர்கள் நிகழ்த்திய ராஜசூய யாகம். அப்படியொரு யாகத்தை உலகம் அதுவரை பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற யாகம் அது. அதில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணி மாளாது.
அப்புறம் முக்கியமாக வேள்விக்கு வந்து தானம் பெற்றுச் சென்றவர்கள்.
கேட்டவர்க்கெல்லாம் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்தார் தர்மபுத்திரர். வரிசை வரிசையாக வந்து நின்று அணியும் மணியும் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றவர்கள் ஏராளம். ஏராளம்.
அந்த வேள்வியில் தான் நிகழ்த்திய தான தர்மங்கள் பற்றிய பெருமிதத்தோடு அமர்ந்திருந்தார் தர்மபுத்திரர். அருகே அதே பெருமிதத்தோடு பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் நண்பனும் உறவினனும் கடவுளுமான கண்ணன் புல்லாங்குழலோடு ஒரு சிம்மாசனத்தில் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மற்றவர் மனத்தை முகத்தைப் பார்த்தே படிக்கும் ஆற்றல் பெற்ற மாயக் கண்ணன் பாண்டவர்கள் மனத்தில் ஓடும் எண்ண அலைகளை உணராமல் இருப்பானா? கண்ணன் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு மலர்ந்து மறைந்தது.
கொஞ்சம் கர்வத்தின் ரேகை பாண்டவர் அனைவர் முகத்திலும் படர்ந்திருக்கிறதே!
அதில் பெரிய தவறொன்றும் இல்லைதான். நல்ல விஷயத்தைப் பற்றி ஒருதுளி கர்வம் மனத்தில் தோன்றினால் அதைப் பெரிய குறையென்று சொல்ல முடியாது. நல்லதைச் செய்ததற்காகத் தோன்றும் கர்வம்தானே அது! அர்ச்சுனன் பீமன் நகுலன் சகாதேவன் வரையில் அது பெரிய குறையில்லை என்பது சரி.

திருப்பூர் கிருஷ்ணன்
ஆனால் உத்தமர்கலெல்லாம் தேடினாலும் கிடைக்காத மிக உயர்ந்த உத்தமரான தர்மபுத்திரர் மனத்திலும் கர்வமா? இது ஏற்கும்படியாக இல்லையே?
அவரின் உயர்ந்த குணங்களின் காரணமாக அவர் ஏறும் தேர், பூமியிலேயே படாமல் தரைக்கு மேலேயே அந்தரத்தில் ஓடும் என்கிறார்கள். அவ்வளவு உத்தமரின் மனத்தில் கர்வம் என்ற நச்சுக் கிருமி நுழைந்தது எப்படி?
இவர் தான் செய்த தான தர்மத்தைப் பற்றி கர்வம் கொள்கிறாரே? கெளரவர் அணியில் உள்ள கர்ணன் செய்யும் தான தர்மங்களின் கால் தூசுக்கு இவை ஈடாகுமா? அள்ளி அள்ளி அல்லவா கொடுக்கிறான் கர்ண வள்ளல்?
நாடெங்கும் அவன் கொடைக் குணத்தைப் புகழாதவர்கள் இல்லை. ஆனாலும் கர்ணனிடம் தன் வள்ளல் தன்மை காரணமாக எந்த கர்வமும் இல்லை.
என்ன செய்வது? அப்பேர்ப்பட்ட வள்ளலான மாவீரன் கர்ணன் எதிர் அணியில் இருக்கிறானே? எதிர்காலத்தில் ஏற்படப் போகும் போரில் கர்ணனை வெல்வதுதான் கடினமாக இருக்கும்.
இப்படிப்பட்ட சிந்தனைகள் கண்ணன் மனத்தில் ஓடின. ஒரு பெருமூச்சு புறப்பட்டது கண்ணனிடமிருந்து.
கண்ணன் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தர்மபுத்திரர் `என்ன கண்ணா பார்க்கிறாய்?` என்று கேட்டார்.
தர்மபுத்திரர் மனத்தில் எழும் கர்வ உணர்வை நீக்க வேண்டும் என முடிவு செய்த கண்ணன் நகைத்தான். `நான் உங்களை எங்கே பார்த்தேன்? கீழே தரையை அல்லவா பார்த்தேன்?` என்று சொல்லிச் சிரித்தான்.
கண்ணன் பார்வை சென்ற இடம் நோக்கி பஞ்ச பாண்டவர் அனைவரின் பார்வையும் போயிற்று...
அங்கே திடீரென வந்து நின்றது ஒரு கீரிப் பிள்ளை. எங்கிருந்து வந்தது இது? இவ்வளவு நேரம் இதுபோன்ற ஒரு பிராணியை இந்தக் கூடத்தில் எங்கும் பார்க்கவில்லையே?
பாண்டவர்கள் வியப்போடு அந்தக் கீரிப் பிள்ளையைப் பார்த்தார்கள். காரணம் அதன் பாதி உடல் வழக்கமான கீரிக்கு உள்ளதைப் போல்தான் இருந்தது. ஆனால் மீதிப் பாதி உடல் தங்க நிறத்தில் பளபளவென மின்னியது.
குந்தியின் ஐந்து பிள்ளைகளையும் பார்த்துக் கலகலவென ஏளனமாய்ச் சிரித்தது கீரிப் பிள்ளை.
தர்மபுத்திரர் திகைத்தார். ஒரு மன்னனைப் பார்த்து ஏளனமாக நகைக்கிறதே இது? இந்த நகைப்பின் பின்னணி என்ன?
அதன் பாதி உடலின் பொன்னிறம் வியப்பளிக்கிறதே? உலகில் இப்படி ஒரு விந்தையான கீரியை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தத் தங்க நிறம் அதற்கு எப்படி வந்தது?
கீரியிடமே கேட்போம் என முடிவு செய்த தர்மபுத்திரர் அதைக் கனிவோடு பார்த்துப் பேசலானார்:
`கீரியே! நீ சிரித்தது எங்களுக்கு வியப்பளிக்கிறது என்றால் உன் மேனியில் பாதிப்பகுதி தங்க நிறத்தில் மின்னுவது அதைவிட அதிக வியப்பைத் தருகிறது. நீ சிரித்த காரணம் என்ன? உன் தங்க நிறம் உனக்கு எப்படி வந்தது? நாங்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். கொஞ்சம் சொல்லேன்!`
தர்மபுத்திரரின் கேள்விகளுக்கு பதில்சொல்லும் எண்ணத்தில் கீரிப் பிள்ளை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஒரூ கனைப்புக் கனைத்த பின்னர் கணீரென்ற குரலில் பேசத் தொடங்கியது. பஞ்ச பாண்டவர்களோடு எல்லாம் தெரிந்த கண்ணனும் எதுவுமே தெரியாததுபோல் கீரியின் பேச்சைக் கேட்கலானான்.
`மன்னனே! என்ன பெரிய தானம் செய்துவிட்டாய் நீ? இருப்பதில் கொடுப்பது தானமா? யோசித்துப் பார். இருப்பதையே கொடுப்பதல்லவா தானம்?
முன்பு சக்துப்ரஸ்தர் என்றொரு முனிவர் இருந்தார். வறுமையில் வாடிய ஏழை முனிவர். மனைவியோடும் மகனோடும் மருமகளோடும் ஒரு குடிசையில் வசித்து வந்தார்.
அவர்கள் அனைவருமே பலநாள் பட்டினி. அவர்கள் வீட்டில் அடிக்கடி இப்படி எதிர்பாராத நிர்பந்த ஏகாதசிகள் வரும். அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் தண்ணீரைக் குடித்து சமாளித்து விடுவார்கள்.
ஆனால் அதென்னவோ சோதனைபோல் இப்போது கொஞ்ச நாளாய் அவர்கள் உண்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
அதன்பின் பலநாட்களுக்குப் பிறகு ஒருநாள் மிகக் குறைவாக அந்த முனிவருக்குக் கொஞ்சம் உணவு கிடைத்தது. அந்த உணவையேனும் அந்தக் குடும்பத்தினர் உண்ணவில்லையென்றால் பட்டினியால் அவர்கள் சாக வேண்டியதுதான். அவ்வளவு பசி அவர்களுக்கு.
கிடைத்த உணவை குடும்பத்தில் இருந்த நால்வரும் சமமாகப் பகிர்ந்துண்ண எண்ணி ஒன்றாக அமர்ந்தார்கள். சமமாகப் பிரித்தும் விட்டார்கள்.
அப்போது வாயிலில் வந்து நின்றான் பசியால் தவித்த ஒருவன். அவனது ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்களும் அவனும் பலநாள் பட்டினி என்பதை உணர்ந்தின. எனக்கு ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என வாய்விட்டுக் கேட்டான் அவன்.
என்ன இக்கட்டு! என்ன செய்வது இப்போது? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதே?
முனிவர் யோசித்தார். தான் பட்டினியால் இறந்தாலும் பரவாயில்லை. வந்தவன் முதலில் பசியாறட்டும். அதுவே இப்போது முக்கியம்.
முனிவர் தன் பங்கு உணவை அன்போடு அவனுக்களித்தார். பலநாள் பட்டினிக்காரன். அதைச் சாப்பிட்டும் அவன் பசி தீரவில்லை.
முனிவர் ஏதொன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். முனிவரின் மனைவி யோசித்தாள். பின் தானே முன்வந்து தன் பங்கு உணவையும் அவனுக்கு அளித்தாள். அதைச் சாப்பிட்டும் அவன் பசி முழுமையாக அடங்கவில்லை.
பின்னர் முனிவரின் மனைவியைப் பின்பற்றி, அடுத்தடுத்து முனிவரின் மகனும் அதன்பின் மருமகளும் தங்கள் பங்கு உணவையும் மகிழ்ச்சியோடு அவனுக்குக் கொடுத்துவிட்டார்கள். பசியாறியபின் விருந்தினன் முகத்தில் தென்பட்ட மலர்ச்சியைக் கண்டு அவர்கள் களிப்படைந்தார்கள்.
இந்தக் குடும்பத்தினர் தங்களிடம் இருந்த அனைத்தையும் அப்படியே தானம் செய்துவிட்டார்களே! தங்களுக்குக் கொஞ்சமேனும் வேண்டும் என்று அவர்கள் கருதவில்லையே!
அந்தக் குடிசையில் ஒரு பொந்தில் வாழ்ந்துவந்த நான், வியப்புடன் அந்த அரிய காட்சியைப் பார்த்தவாறிருந்தேன்.
வந்து நின்ற விருந்தாளி மறுகணம் மகாவிஷ்ணுவாய் மாறியதைப் பார்த்தேன். அவர்களின் விருந்தோம்பல் நெறியையும் உயிர்போகும் வேளையிலும் தானம் செய்யத் தயங்காத ஈகைக் குணத்தையும் பாராட்டினார் திருமால்.`
கீரிப்பிள்ளை பேசும் பேச்சை எல்லோரும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். திருமால் என்று கீரி குறிப்பிடுவது தன்னைத்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணனும் அதைக் கேட்டவாறிருந்தான். கீரி தன் பேச்சைத் தொடர்ந்தது:
`அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? அடுத்த கணம் புஷ்பக விமானம் குடிலின் வாயிலுக்கு வந்தது. அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் அந்த விமானம் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டேன் நான்.
பரவசத்தில் தத்தளித்த நான் அந்தப் புனிதக் குடிசை மண்ணில் விழுந்து புரண்டேன். என்ன ஆச்சரியம்! என் மேனியின் ஒரு பாதி தங்கமாயிற்று. இப்போது எல்லாக் கீரிப் பிள்ளைகளும் என்னை மிகுந்த மதிப்போடு பார்க்கின்றன.
அந்த நிகழ்வுக்குப் பின் எங்கெங்கே தானதர்மங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று விழுந்து புரண்டு பார்க்கிறேன். என் உடலின் இன்னொரு பாதியையும் தங்கமாக்க வேண்டும் என்ற ஆசைதான் காரணம்.
ஆனால் மன்னனே! என் ஆசை இதுவரை நிறைவேறவே இல்லை. நீ நிறைய தானதர்மங்கள் செய்தாய் என மக்கள் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டு ஆவலோடு இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். ஆனால் எனக்கு இங்கும் ஏமாற்றம்தான்!`
கீரியின் பேச்சைக் கேட்ட தர்மபுத்திரர் அளவற்ற வியப்படைந்தார். கீரியின் விழிகளைச் சற்று உற்றுப் பார்த்தார். அந்த விழிகளில் கண்ணன் விழிகளின் சாயல் தெரிவதுபோல் தோன்றியது. எல்லா உயிர்களிலும் இருக்கும் பரம்பொருள் கீரியின் விழிகளில் மட்டும் தென்பட மாட்டானா என்ன?
அடுத்த கணம் கண்ணனை ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கீரிப்பிள்ளை வாயிலைத் தாண்டி வெளியே ஓடியது.
தானம் செய்த அந்தக் குடும்பத்தினரை மனத்தால் நினைத்து இருகரம் கூப்பி வணங்கினார் தர்மபுத்திரர். தானே பெரிய வள்ளல் என்ற அவர் கர்வம் அன்று ஒடுங்கியது. தன் பக்தன் மனம் மேம்பட்டதைக் கண்டு மகிழ்ந்தது கண்ணன் மனம்...
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இடுப்புத்தள தசை தளர்வடைவதால் சிறுநீர்ப்பை இறங்கி விடும்.
- பிரசவத்தின்போது ஒரு சரியான மருத்துவர் இருக்க வேண்டும்.
பெண்களை பாதிக்கின்ற கருப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, இளம் வயது பெண்களையும் பாதிக்கிறது. பெண்களின் இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், இதற்கு எளிமையான நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. கருப்பை குடலிறக்கத்துக்கு முக்கிய காரணமான இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதை தடுப்பதற்கு, இளம் வயது பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பிரசவத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
முதல் குழந்தை பிறந்த பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:
இளம் வயது பெண்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதால் சிறுநீர் கசிவு மற்றும் பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுவே 40 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு வருமா என்று கேட்டால் 10 சதவீதமான பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு இது, ஒரு பிரசவம் ஆன பின்பு ஏற்படுகின்ற பிரச்சினையாகும். இதில் அவர்களுக்கான முதல் பிரச்சினை தம்பதிகளின் பாலியல் உறவுகள் மூலம் ஏற்படுகிறது. இதுபற்றி சிகிச்சைக்கு வரும் பெண்கள் கூறும்போது, 'டாக்டர், எனது இடுப்புத்தள தசை மிகவும் தளர்வாக இருக்கிறது. இதனால் எனது கணவரை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை. பாலியல் உறவின்போது ஏதோ மாற்றம் இருப்பதாக எனது கணவர் கூறுகிறார். குழந்தை பெறுவதற்கு முன்பு இருந்தது போன்று இப்போது பாலியல் உறவு இல்லை என்கிறார்' என்பார்கள்.
அதாவது முதல் பிரசவத்துக்கு பிறகு யோனிப்பகுதி மிகவும் தளர்வுடன் காணப்படுகிறது என்று சிகிச்சைக்கு வருகின்ற ஏராளமான பெண்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இதுபற்றி பொதுவாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும்போது தான் பல தம்பதியினர் இந்த விஷயத்தை சொல்கிறார்கள். குறிப்பாக முதல் குழந்தை பிறந்தவுடனே இந்த மாதிரியான பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்பார்கள்.
சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இடுப்புத்தள தசை தளர்வடைவதால் சிறுநீர்ப்பை இறங்கி விடும். அதனால் அவர்களுக்கு சிறுநீர் கட்டுப்பாட்டில் இருக்காது. சிகிச்சைக்கு வரும்போது அவர்கள் இதை சொல்வார்கள். 'டாக்டர், எனக்கு முதல் பிரசவம் ஆன பிறகு சிறுநீர் அவசரமாக வருகிறது. ஆனால் கழிவறைக்கு செல்வதற்கு முன்பு என்னை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டு விடுகிறது. அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல நேரங்களில் இருமும் போது, தும்மும் போது சிறுநீர் கசிவு அதிகமாக ஏற்படுகிறது' என்பார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுடன் நிறைய பெண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
சாதாரண பிரசவத்தின்போது விரிவடையும் இடுப்புத்தள தசை:
பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு முக்கியமாக ஒருவித மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவுகளில் ஏற்படும் பிரச்சி னையால் அவர்களுடைய திருமண வாழ்க்கை யிலும் பிரச்சினை வருகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மனரீதியாக கருத்து வேறுபாடும் ஏற்படுகிறது.
பல நேரங்களில் இதை யாரிடம் போய் சொல்வது என்பது தெரியாத நிலையில் நிறைய பெண்கள் இந்த பிரச்சினைகளை தங்களுக்குள்ளேயே வைத்து தவித்து வருகிறார்கள். ஆனால் அந்த பெண்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு கண்டிப்பாக இருக்கிறது.
முக்கியமாக பிரசவ நேரத்தின்போது இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால், முந்தைய காலத்தில் சிசேரியன் இல்லாத சாதாரண பிரசவத்தின்போது நிறைய பேருக்கு போர்செப்ஸ் என்ற கருவியை பயன்படுத்துவார்கள். போர்செப்ஸ் என்பது 2 உலோக கரண்டி போன்ற சாதனங்களை கொண்ட ஒரு கருவி ஆகும். அதை குழந்தையின் தலையை சுற்றி வைத்து குழந்தையை மெதுவாக வெளியே இழுப்பார்கள்.
அந்த மாதிரி குழந்தை பிரசவம் ஆகும்போது பெண்ணின் இடுப்புத்தள தசை விரிவடைந்து விடும். ஏனென்றால் அந்த இடுப்புத்தள தசை விரிவடையும்போது தான், யோனியின் திறப்பும் அதிகமாகும். அப்போதுதான் குழந்தை வெளியே வரும். பல நேரங்களில் அந்த இடுப்புத்தள தசை விரிவடைந்து திரும்பவும் இயல்பான நிலைக்கு வருவதற்கு நாம் அதற்கு தேவையான சப்போர்ட்டிவ் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அப்படி சப்போர்ட்டிவ் அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் பல நேரங்களில் அந்த இடுப்புத்தள தசை கிழிந்துவிடும். அதை முறையாக குணப்படுத்தாவிட்டால், தசைகள் தளர்வாகி அதனுடைய செயல்பாட்டு தன்மை குறைவாகிறது.
இடுப்புத்தள தசையை சீராக கிழிப்பதற்கு எபிசியோடமி முறை:
நமது உடலில் உள்ள ஏதாவது தசைகளுக்கோ அல்லது திசுக்களுக்கோ காயம் ஏற்பட்டால் அதை சரியாக குணப்படுத்தினால் தான் அதன் செயல்பாடு மீண்டும் நன்றாக வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த பெண்களுக்கு பொதுவாக பிரசவ நேரத்தில் இடுப்புத்தள தசை விரிவடைந்துதான் குழந்தை பிரசவம் ஆகும். இந்த விரிவடையும் தசைகளை மீண்டும் சரிப்படுத்தி கொடுப்பதற்கு பல நேரங்களில் சப்போர்ட்டிவ் அமைப்பு சீராக இல்லையென்றால் இந்த தசைகள் காயம் அடைந்த பிறகு சரியான வகையில் குணம் அடைவதில்லை.
அந்த காலத்தில் பெண்களுக்கு தாய் பிரசவம் பார்ப்பது, இடுப்புத்தள தசையை துண்டிக்காமல் சப்போர்ட்டிவ் கொடுப்பது ஆகிய விஷயங்கள் பின்நாட்களில் கருப்பை குடலிறக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபி டித்ததால்தான், பிரசவத்தின்போது இடுப்புத்தள தசையை சீராக கிழிப்பதற்கு எபிசி யோடமி என்ற முறை கண்டறி யப்பட்டது. இந்த முறையில் குழந்தை பிரசவமாகும் நேரத்தில் இடுப்புத்தள தசைகளை சீராக கிழித்து, குழந்தை பிறந்த பிறகு சீராக தையல் போடும்போது, இந்த பகுதி எளிதில் குணம் அடையும். எபிசியோடமி முறையில் இதை செய்து, அதற்கான சப்போர்ட்டிவ் கொடுக்கும் போது, இந்த இடுப்புத்தள தசையின் சிதைவு, காயம் ஆகியவை குறைவாகி, அதனுடைய குணமடைதல் தன்மையும் நன்றாக இருக்கிறது. அதனால் தான் சாதாரண பிரச வத்தின் போது மிகவும் சரியாக கவனமாக பெரிணியத்துக்கு சப்போர்ட்டை நாங்கள் கொடுப்போம். இதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
பிரசவம் ஆகும்போது குழந்தையின் தலை எப்படி வேண்டுமானாலும் வரும். ஆனால் அதற்கான சப்போர்ட்டிவ் அமைப்பு கொடுக்கவில்லை என்றால் இந்த இடுப்புத்தள தசையில் ரொம்ப காயம் ஏற்பட்டு, அது சரியாக குணமடையாமல் அதனுடைய செயல்பாட்டு திறன் குறைவாகி பலவிதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
முறையான வகையில் பிரசவம் பார்க்க வேண்டும்:
பிரசவத்தின்போது ஒரு சரியான மருத்துவர் இருக்க வேண்டும். எனவே தான் குழந்தை பிரசவம் ஆகும்போது அவர்களுக்கு எப்போதுமே பார்த்து ஆலோசனை சொல்லும் மருத்துவர்கள் வந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த மாதிரியான நுணுக்கமான விஷயங்கள் சில நர்சுகளுக்கு தெரிவது இல்லை.
அதனால் தான் பிரசவத்தின்போது மருத்து வர்கள் எபிசியோடமி முறையில் இடுப்புத்தள தசையை சரியாக கிழித்து பின்னர் சரியாக தையல் போடும் போது குணமடைதல் நன்றாக இருக்கும். இடுப்புத்தள தசை தளர்வு என்பது குறைவாகும். இந்த பிரச்சினையை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் பின் நாட்களில் அந்த பெண்களுக்கு பாலியல் உறவுகளின் போது வலிகள் ஏற்படலாம்.
ஏனென்றால் சரியாக குணமடையாவிட்டால் அந்த தசைகளில் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே அவர்களுக்கு பாலியல் உறவின் போது வலிகள் இருக்கும். பல நேரங்களில் ரொம்ப தளர்வு அடைவதால் சரியான முறையில் அவர்களுக்கு திருப்தி இல்லாத நிலை ஏற்படலாம். சில நேரங்களில் இந்த பெண்களுக்கு வாயு வெளியேறும் போது யோனி வழியே போகிறது என்பார்கள். இவை எல்லாமே இடுப்புத்தள தசை தளர்வுகளால் ஏற்படுகின்ற விஷயம் தான்.
இதனை தடுப்பதற்கான வழிமுறை என்பது முறையான பிரசவ முறை தான். எனவே பிரசவத்தை முறையாக பார்க்க வேண்டும். பல நேரங்களில் பெண்கள் இந்த பிரச்சினையில் கொஞ்சம் கவனக்குறைவாக இருப்பதால் இந்த பிரச்சினை சரியாவதில்லை. இன்றைக்கு நிறைய பேர் என்னிடம் பிரசவத்தின் போது டாக்டர், இடுப்புத்தள தசையை துண்டிப்பீர்களா, தையல் போடுவீர்களா என்று கேட்டு, அப்படி இல்லாமல் செய்யுங்கள் என்பார்கள். அது தவறு. இதை துண்டிப்பது எல்லாமே அவர்களுக்கு நன்றாக குணமடைவதற்கும், பிற்காலத்தில் பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்குமான வழிமுறைகள் தான்.
இதெல்லாம் சரியாக செய்தால் கூட சில பெண்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படும். பிரசவத்துக்கு பிறகு இடுப்புத்தள தசை குணமாகும்போது பழைய வலிமை மீண்டும் வராத நிலை ஏற்படுகிறது. ஒருவர் குழந்தை பெற்றதும் அடிவயிறு தளர்வான பிறகு, கண்டிப்பாக அதில் சுருக்கங்கள், தளர்வுகள் ஏற்படும். இதனை சீராக்கி மீளுருவாக்கம் செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? அதற்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- குழந்தையின் முதல் ஆறு மாத வயது வரையில் தாய்ப்பால் மட்டுமே முக்கியமான, போதுமான உணவு.
- நாற்பத்தியெட்டு விழுக்காடு மட்டுமே பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த வருடம் உலகத்தாய்ப்பால் வாரத்தின் கருப்பொருள் பச்சிளங்குழந்தைகளுக்கு "தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கவும், அதற்குத்தேவையான ஆதரவை மேம்படுத்தவும்" என்பதேயாகும்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் என்பது ஒரு அருமருந்து மட்டுமல்ல, அது பிறப்புரிமையும் ஆகும். இயற்கையான இச்செயலை ஏன் ஒவ்வொரு ஆண்டும் ஒருவார நிகழ்வாக உலகம் முழுவதும் பின்பற்றுகிறோம்?
ஏனென்றால் உலகளவில் தாய்மார்கள் தாய்ப்பால் தரும் சதவிகிதம் குறைந்துக்கொண்டே வந்தது, இதனால் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைந்து வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு இலக்காவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதை தடுப்பதற்கும், ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவுமே தாய்ப்பாலின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது.
குழந்தையின் முதல் ஆறு மாத வயது வரையில் தாய்ப்பால் மட்டுமே முக்கியமான, போதுமான உணவு. இதனை சரிவர பின்பற்றுவதில் தாய்க்கு மட்டுமல்லாது, கணவருக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருமித்த கருத்தும், புரிதலும், ஈடுபாடும் இருத்தல் அவசியம்.
தாய்ப்பாலில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது? ஏன் வேறெந்த பாலையோ அல்லது டின் பவுடரையோ தரக்கூடாது? தாய்க்கும் சேய்க்குமான நன்மைகள் என்ன? இவற்றை ஒரு பச்சிளங்குழந்தையின் குடும்பத்தினர் நன்கு உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் மட்டுமே எவ்வித சூழ்நிலையிலும் தாய்ப்பாலைத்தவிர மற்ற உணவுப்பக்கம் யோசித்துப் பார்க்க மாட்டார்கள்.
பாலூட்டி இனங்களான பல மிருகங்கள் தத்தம் குட்டிகளுக்கு பாலூட்டுவதை பல முறை நாம் பார்த்திருப்போம். ஏன் நம் வீட்டில் வளர்க்கும் பூனை நாய் போன்றவைக்கூட!
"கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிறங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர"
என்ற திருப்பாவை வரிகளும் தம் இளங்கன்றை நினைத்த மாத்திரத்தில் பால் சுரப்பதாகக் கூறப்பட்டிருக்கும். அனைத்து பாலூட்டியினத்திற்கும் மனித இனத்தையும் சேர்த்து இது பொருந்தும்.
அப்படி இருக்கையில், ஏன் வெறும் நாற்பத்தியெட்டு விழுக்காடு மட்டுமே பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அறுபத்தியெட்டு விழுக்காடு குழந்தைகள் மட்டுமே ஆறுமாத வயது முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிறார்கள் என்றும் அறிக்கைகள் தெரியப்படுத்துகின்றன. அப்படியென்றால் மீதமுள்ள முப்பத்திரண்டு விழுக்காடு குழந்தைகளுக்கு மிக சீக்கிரமாகவே இணை உணவு அளிக்கப்படுகிறது என்பது அறியப்படுகிறது.
குழந்தையின் முதல் ஆறுமாதம் வரை கட்டாயம் வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது, முக்கியமானது என்று வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அரசு அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டிருக்கின்றன. ஆயினும் குழந்தையின் முதல் ஆறுமாதம் வரை கட்டாயத்தாய்ப்பால் என்ற இலக்கை நூறு சதவிகிதம் இன்னும் அடைய முடியவில்லை.
இந்நிலைக்கு பற்பல காரணங்கள் ஆராயப்பட்டிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு பலமுனை சப்போர்ட் சிஸ்டங்களை உறுதுணையாகக் கொண்டு இலக்கை அடைய முடியும் என்பதையே இந்த வருட தாய்ப்பால் வார விழா வலியுறுத்துகிறது. அந்த பலமுனை சப்போர்ட் என்ன?
அவை குழந்தைப்பெற்றத் தாயை சுற்றி இருப்பவையே. சாதாரணமாக ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றாலோ அல்லது ஏதாவது சந்தேகம் என்றாலோ நாம் என்ன செய்கிறோம்? அதே பிரச்சனையை சமாளித்தவர்களிடம் பேசி, அலசி ஆராய்ந்து எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்கிறோமல்லவா?
சிம்பிள் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு புதிய ஊருக்கு நாம் பயணம் செய்கிறோமென்றால், அங்கு ஏற்கனவே சென்று வந்திருக்கும் நண்பர்களிடமோ, சுற்றத்தினர்களிடமோ ஏன் யூடியூபிலோ கூட பார்த்து தெரிந்துகொண்டால் நமக்கு ஓர் நம்பிக்கை,தெளிவு கிடைக்கிறது அல்லவா? அதேபோல், ஒரு புதிய தாய்க்கு அவரைப்போலவே குழந்தைப்பெற்று பால்குடுக்கும் சகத்தாய்மார்கள் உறுதுணையாக இருக்கிறார்கள், இருக்கலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. எனவே இது ஒரு முதல் சப்போர்ட் சிஸ்டம்.

இரண்டாவது சப்போர்ட் சிஸ்டம் மருத்துவர்கள், செவிலியர்கள், சத்துணவு நிபுணர்கள், மற்ற பிற மருத்துவம்சார் துணை பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆவர். இவர்கள் தத்தம் துறைக்கேற்ப அந்தத்தாயின் சந்தேகங்களையும் தெளிவித்து, சவால்களை எதிர்க்கொண்டு சமாளித்து தாய்ப்பால் புகட்டும் சீரிய கடமையைச் செய்ய உறுதுணையாக இருக்கிறார்கள். எனவே இவர்களின் துணையையும் ஆலோசனைகளையும் நாடுவது நல்ல பலனளிக்கும்.
மிக முக்கியமான மூன்றாவது சப்போர்ட் அந்த பெண்ணின் குடும்பத்தினர். முதலில் அவரது கணவர். தமது குழந்தையின் வாழ்நாள் முழுவதற்குமான ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது தாய்ப்பால் என்பதை அறிந்து, உணர்ந்து, அதற்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் ஆதரவளிக்க வேண்டியது, கணவராக அப்பாவாக அவரது கடமையாகும். அந்தப் பெண்ணின் அம்மா, அப்பா, கூடப்பிறந்தவர்கள் என அனைவரும் சேய்க்கு சரிவர தாய்ப்பால் கிடைப்பதை அவர்களது உறுதுணை மூலமும் உற்சாகப்படுத்துவதன் மூலமும் உறுதி செய்யவேண்டும்.
பெண்ணின் புகுந்த வீட்டின் உறவுகளான மாமியார், நாத்தனார் என அத்தனை உறவுகளும் தங்கள் குலக்கொழுந்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை உணவான தாய்ப்பால் ஊட்ட வைப்பதில் துணைநிற்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்ணின் ஊண், உறக்கம், உற்சாகம், உடல் ஆரோக்கியம், மன அமைதி, என அனைத்தையும் முழுமையாகப்பெறுவதை உறுதிசெய்வதன் மூலம் அவளுக்கு ஒரு நல்ல சூழலையும் நம்பிக்கையையும், ஏற்படுத்துவது அவசியம்.
வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களுக்காகவும் பேறுகால விடுப்பும், மாற்றியமைக்கக்கூடிய வேலை நேர வசதி, வீட்டிலிருந்தே வேலை செய்யும் அமைப்பு போன்றவையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அப்பெண்ணை பணியிலமர்த்துபவர்களும் ஒரு முக்கிய பங்காற்ற முடியும்.
இவற்றைத்தவிர, பிள்ளைக்குப் பாலூட்டுவதை ஓர் உன்னத செயலாகவேக் கருதி, இச்சமுதாயமும் அப்பெண்ணிற்கு நம்பிக்கையான வசதியான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் தாய்ப்பாலூட்டும் வசதிகள் இருப்பதை நாம் பல இடங்களில் கண்டிருப்போம். இதுவும் ஒரு சிறந்த சமுதாய நோக்கமே ஆகும். அவற்றை பயன்படுத்துவதற்கும் விழிப்புணர்வு அவசியம்.

பேராசிரியர் டாக்டர். ஆ.ஜ.ஹேமமாலினி ராகவ்
இத்தகைய சப்போர்ட் சிஸ்டம் அந்தத்தாயின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தாய்ப்பால் நன்கு சுரக்கவும், தாய்சேய் பிணைப்பு அதிகரிக்கவும் கட்டாயம் உதவும். இதன்மூலம் நூறு சதவீத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அருமருந்து தங்குத்தடையின்றி கிடைத்து ஒரு ஆரோக்கியமான குழந்தையாக வளருவதுடன், ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்கும்.
எந்த சூழலிலும் பிறந்த குழந்தையின் ஆறு மாத முடிவு வரை புட்டிப்பாலைத்தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே தருவோம் என உறுதியெடுப்போம், அதனையே செயல்படுத்துவோம்!
பேராசிரியர் டாக்டர். ஆ.ஜ.ஹேமமாலினி ராகவ்,
சத்துணவு மருத்துவத்துறை.
- தெய்வ வழிபாட்டில் அபிஷேகம் மிக முக்கியமானதாகும்.
- கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பலர் அபிஷேகம் செய்வது உண்டு.
முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகுந்த ஆற்றல் தரும் வலிமை கொண்டவை. எதை நினைத்து நாம் அவருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த பலனை நிச்சயம் நமக்கு தருவார்.
பொதுவாகவே தெய்வ வழிபாட்டில் அபிஷேகம் மிக முக்கியமானதாகும். சிவபெருமானுக்கு எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறார்களோ அதே அளவுக்கு முருகனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது உண்டு. திருச்செந்தூர் ஆலயத்திலும் முருகப் பெருமானுக்கு தினமும் பல்வேறு விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. சிலர் முருகனுக்கு நடத்தப்படும் மொத்த அபிஷேகத்தையும் ஏற்றுக் கொண்டு சர்வ அபிஷேகத்தை நடத்துவது உண்டு.
பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட குறை தீர வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பொருள் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்களில் அதிகம் பேர் பாலாபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அதிலும் முருகனுக்குரிய சஷ்டி திதி நாட்களில் அபிஷேகம் செய்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும். கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பலர் அபிஷேகம் செய்வது உண்டு.
முருகனுக்கு மட்டுமின்றி வேல், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கும் அபிஷேகம் செய்யலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் வள்ளி, தெய்வானைக்கு செய்தாலும் கிடைக்கும். முருகனுக்கு செய்யும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரக்கூடியதாகும். அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் குறிப்பிட்ட பிரச்சினை தீர்வதற்கு உரிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யலாம்.

எந்தெந்த பிரச்சினைகள் தீர்வதற்கு முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்தால் தோல் நோய்கள் நீங்கும். பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் நோய்கள் விலகி ஆரோக்கியம் பெருகும். பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலைகளை இந்த அபிஷேகம் பெற்று தரும். அதனால்தான் பக்தர்களில் அதிகம் பேர் பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
எலுமிச்சை அபிஷேகம் செய்தால் எம பயம் நீங்கும். இளநீர் அபிஷேகம் செய்தால் மனதிலும், குடும்பத்திலும் உற்சாகம் மற்றும் அமைதி உண்டாகும். தயிர் அபிஷேகம் செய்தால் குல விருத்தி ஏற்படும். பழ வகைகள் அபிஷேகம் செய்தால் அவரவர் துறைக்கு ஏற்ப புகழ் பெற முடியும்.
கரும்பு சாறு அபிஷேகம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சந்தன அபிஷேகம் செல்வங்களை அதிகரிக்க செய்து உங்கள் அந்தஸ்தை உயர்த்தும். விபூதி அபிஷேகம் செய்து பார்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பன்னீர் அபிஷேகம் செய்பவர்களுக்கு அவர்களது தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மஞ்சள் அபிஷேகம் செய்தால் வீட்டில் உள்ள பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தை பெறுவார்கள்.
இப்படி முருகனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். ஒரு தடவை பக்தர் ஒருவர் சர்வ அபிஷேகம் செய்த போது திருச்செந்தூர் முருகன் ஒரு விளையாடல் நடத்தி அனைவரையும் வியக்க வைத்த சம்பவம் நடந்தது.
அந்த பக்தர் முருகனுக்கு அபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு பொருளாக பார்த்து... பார்த்து... சேகரித்துக் கொண்டு வந்திருந்தார். அபிஷேகம் தொடங்கியது. நல்ல எண்ணை, மஞ்சள், பால், தேன், தயிர் மற்றும் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பொருள் அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு மனம் குளிர்ந்தனர். திருச்செந்தூர் முருகா... என்று கரம்கூப்பி கண்ணீர் மல்க வழிபட்டனர். அப்போதுதான் சர்வ அபிஷேகத்துக்கு பொருட்கள் சேகரித்து வந்தவருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதற்கு காரணம் அபிஷேகத்துக்கு உரிய முக்கிய பொருட்களில் ஒன்றான இளநீர் வாங்கி வரவில்லை என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. அபிஷேகம் தொடங்கி விட்ட நிலையில் இப்போது இளநீருக்கு எங்கே செல்வது என்று எதுவும் புரியாமல் திணறினார். இரண்டே இரண்டு இளநீர் கிடைத்தால்கூட போதும். சமாளித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஆலயத்துக்குள் எங்கு போய் இளநீர் வாங்க முடியும்.

ஆலயத்தை விட்டு வெளியே வந்த அவர் கடற்கரைக்கும், பிரகாரத்துக்கும் இடையே ஓடியபடியே இருந்தார். அப்போது ஒருவர் அவரிடம், "இந்த பகுதியில் இளநீர் கிடைப்பது கடினம். இளநீர் அபிஷேகம் செய்தது போல பாவனை செய்து கொண்டாலும் போதும். சாஸ்திரங்களில் பாவனை செய்து அபிஷேகம் செய்யப்பட்டதாக கூறினாலும் அதை முருகப்பெருமான் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
ஆனால் சர்வ அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இளநீர் கொண்டு வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தே தீரவேண்டும் என்று மன உறுதியுடன் இருந்தார். எதிரே வந்தவர்களிடம் எல்லாம் இங்கே இளநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்டபடி அலைந்தார்.
அப்போது எதிரே மாற்று மதத்தை சேர்ந்த ஒரு இளைஞர் வந்தார். அவரிடமும் அந்த நபர், "உங்கள் வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் இருந்து இரண்டு இளநீர் தர முடியுமா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்" என்றார். அதை கேட்டதும் மாற்று மதத்தை சேர்ந்தவர் கேலியும், கிண்டலுமாக சிரித்தார். உங்களுக்கு இளநீர் தர மாட்டேன் என்று ஏளனமாக கூறினார். இதை கேட்டதும் சர்வ அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவருக்கு கண்ணீர் வந்தது.
அப்போதும் மாற்று மதத்தை சேர்ந்தவரின் மனம் இரங்கவில்லை. அவர் மீண்டும், "உங்களுடைய முருகனுக்கு ஆறுமுகம், பன்னிரண்டு கைகள் இருக்கிறது அல்லவா? அந்த பன்னிரண்டு கைகளால் உங்களுக்கு கேட்டதையெல்லாம் வாரி வாரி தருவதாக சொல்கிறீர்களே? அவரிடம் கேட்க வேண்டியது தானே? பன்னிரண்டு கை வைத்திருப்பவரால் இரண்டே இரண்டு இளநீர் தர முடியாதா? என்று கேலி செய்தார். இதை கேட்டதும் சர்வ அபிஷேக ஏற்பாட்டாளருக்கு கடும் கோபம் வந்தது. முருகா... என்று அழைத்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அந்த சமயத்தில் கடலில் அலைகளின் ஆரவாரம் மிக அதிகமாக கேட்டது. அனைவரது பார்வையும் கடலை நோக்கி திரும்பியது.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கடல் அலைகளில் மிதந்தபடி இரண்டு இளநீர் வந்தது. கடல் அலைகள் சுருண்டு சுருண்டு கரையை நோக்கி வந்தபோது அந்த இரண்டு இளநீரும் கரையை நோக்கி வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இரண்டு இளநீர்களும் கரை ஒதுங்கின.
அபிஷேக ஏற்பாட்டாளருக்கு அதை பார்த்தபோது மெய்சிலிர்த்தது. தான் காண்பது கனவா? அல்லது நினைவா? என்று திணறினார். கண்ணீர் மல்க முருகா... என்று கூவியபடி கடலோரத்துக்கு ஓடினார். அந்த இரண்டு இளநீர்களையும் கையில் எடுத்து ஆலய கோபுரத்தை நோக்கி வணங்கினார்.
பிறகு இரண்டு இளநீரையும் ஆலயத்துக்குள் எடுத்துக் கொண்டு ஓடினார். அவர் சன்னதிக்குள் செல்லவும் அர்ச்சகர் இளநீர் கேட்கவும் சரியாக இருந்தது. எந்தவித சிறு இடையூறும் இல்லாமல் இளநீராலும் முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.
இதை அறிந்ததும் மற்ற பக்தர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். அபிஷேக ஏற்பாட்டாளரை கிண்டல் செய்த மாற்று மதத்தை சேர்ந்தவரும் வாயடைத்து போனார். அபிஷேகத்துக்கு கடலில் மிதந்து வந்த இந்த இரண்டு இளநீர்களும் யாரால் போடப்பட்டு இருக்கும்? அந்த இரண்டு இளநீர்களும் மிக சரியாக திருச்செந்தூர் கடலோரத்தில் எப்படி கரை ஒதுங்கியது? முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் அவை எப்படி கிடைத்தன? என்பது எல்லாம் விடை காண முடியாத கேள்விகளாகவே உள்ளன.
இது திருச்செந்தூர் முருகன் நடத்திய அற்புதமான திருவிளையாடல்களில் ஒன்று என்று பக்தர்கள் இன்றும் சொல்கிறார்கள். திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூல் எழுதிய பகழி கூத்தரும் இந்த திருவிளையாடலை தனது தொகுப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது போன்ற மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.
- பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் எப்போதும் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்வது போல் இருக்கின்றது.
- என் குழந்தைக்கு இதெல்லாம் நடக்காது என கண் மூடிய பூனையாய் இருக்காதீர்கள்.
ரீல்ஸ் தலைமுறை என்று புதிய தலைமுறை தற்போது உருவாகி வருகிறது. சமூக வலைதளங்களால் இந்த தலைமுறை உருவாகி இருக்கிறது. இது இளைஞர்களில் கணிசமானவர்களை வக்கிரப்புத்தி கொண்டவர்களாக மாற்றி இருக்கிறது. அதோடு சில சமயங்களில் சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் ரீதியாக சீண்டும் அளவுக்கும் கொண்டு போய் விடுகிறது.
ஏற்கனவே பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளனர். வயதானவர்களைக் கூட நம்ப முடியவில்லை என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பலர் நல்லவன் முகமூடியுடன் பழகி, கடைசியில் பாலியல் ரீதியாக பெண்களை சூறையாடி விடுகிறார்கள்.
பெண்களை தெய்வமாக நினைக்கும் நமது நாட்டிலா இப்படி? நினைத்தாலே மனதை பதற வைக்கும் இந்த கொடூரத்தில் இருந்து சிறுமிகள், இளம் பெண்களை காப்பாற்றுவது எப்படி? மாலைமலர் மருத்துவர் கமலி ஸ்ரீபால் வழி காட்டுகிறார்... வாருங்கள் படிக்கலாம்....
ஒரு சிறுமி உணவு முறை, சூழ்நிலை இவற்றுக்கேற்ப 10 முதல் 12 வயதிலேயே பருவம் எய்தி விடுகின்றாள். இருப்பினும் அவள் மனதளவில் சிறுமிதான். ஆனால் காலத்தின் கொடூர நிகழ்வுகள் தலை விரித்து ஆடுகின்றன. 6 வயது ஏன் 3 வயது பெண் குழந்தை கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றது. பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் எப்போதும் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்வது போல் இருக்கின்றது. இந்த குழந்தைகளை இத்தகு தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
பெற்றோராக இருப்பது என்பது தாயும், தந்தையும் விரும்பி ஏற்கும் பொறுப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி தன் வாழ்க்கையே அந்த குழந்தைக்காகத்தான் என முடிவு எடுத்து மாறி விடுகின்றனர். அவர்களின் ஜீவ நாடியே அந்த குழந்தைதான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் உயிர் அந்த குழந்தை அல்லது குழந்தைகள் மீதுதான் இருக்கின்றது.
இன்றைய கால சூழ்நிலை- நிகழும் கொடூர நிகழ்வுகளால் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நிகழும் தாக்குதல்களால் பெற்றோர்கள் கதி கலங்கி அச்சத்தில் உறைந்து உள்ளனர் எனலாம். எப்படி என்னால் என் குழந்தையை பாதுகாக்க முடியும் என்ற பீதி அனைவரிடமும் உள்ளது.
உலகம் இன்று பெண்களை, பெண் குழந்தைகளை, பெண் சிறுமிகளை மிகவும் அச்சுறுத்துகின்றது. ஆய்வு ஒன்று கூறுவது....
* ஐந்தில் ஒரு பெண்ணாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள், ஆளாகின்றாள்.
* 10 பாலியல் கொடுமை நிகழ்வுகளில் 8 பேருக்கு அவர்கள் அறிந்தவர்களாலேயே நிகழ்கின்றது.

* 60 சதவீத பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் புகார் அளிக்கப்படாமலே இருக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்த விஷத்தன்மை வாய்ந்த செயல்களை வேர் அடி வரை சென்று அறுக்க வேண்டும். இதில் முதல் முக்கியத்துவம் பெறுபவர்கள் பெற்றோர்கள்தான். ஆம் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களால் அவர்கள் முயற்சியால் நிறைய மாற்றங்களை, நல்லவைகளை கொண்டு வர முடியும்.
* முதலில் குழந்தை ஆணோ, பெண்ணோ இரு பாலருக்குமே மனதில் படியும் படியான சில அறிவுரைகள் அவசியம் தான்.
* என்ன செய்ய முடியும் என்று விக்கித்து நிற்கக் கூடாது. செய்ய முடியும் என்ற முயற்சி வேண்டும்.
* என் குழந்தைக்கு இதெல்லாம் நடக்காது என கண் மூடிய பூனையாய் இருக்காதீர்கள்.
* 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தோன்றும். ஆனால் காலத்தின் கட்டாயம்.
* எப்படி தெரியாதவர் பிஸ்கட், மிட்டாய் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சின்ன குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கின்றோமோ அதுபோல...
* யாரும் உன்னை தூக்கக் கூடாது... கண்ட இடங்களைத் தொடக்கூடாது... என்று சொல்லித்தான் வளர்க்க வேண்டும்.
* பேசுங்கள், குழந்தைகளோடு நன்கு பேசுங்கள். அவர்கள் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். எதனையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்த குழந்தை மனதில் ஆணித்தரமான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
* குழந்தைகளுக்கு சங்கடம் இல்லாது பெற்றோரிடம் ஆரம்பத்திலேயே எதனையும் பகிர்ந்து கொள்ளலாம்.
* பல சிறுமிகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப் பற்றி பக்குவமாக அவர்களிடம் பேசுங்கள். இன்றைய 8 அல்லது 10 வயது குழந்தைக்கு சூழ்நிலை தெரிய வேண்டும். எந்த இடத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அம்மா, அப்பாவிடம் சொல்லி விட வேண்டும் என்று கண்டிப்பாய் புரியும். இதுவே அவர்கள் வளரும் காலத்திலும், திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டாலும் தன்னை காத்துக் கொள்ளும் தைரியத்தினை, நம்பிக்கையினைத் தரும்.
* அப்பா, அம்மாவிடம் ஒரு குழந்தையாய் எதனையும் பகிர்ந்து கொள்ள முடிந்தாலும், அந்த பிரச்சினையைத் தீர்க்க தயக்கமின்றி பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் அந்தச் சிறுமியை மட்டுமல்ல, மற்ற குடும்பங்களுக்கும் ஒரு ஆதரவாய் இருக்கும்.
* முடிந்த வரை தனியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* யாராவது சிறுமிகளிடம் வலிய வந்து பேசினால் கூட உஷார் ஆகி விட வேண்டும்.

கமலி ஸ்ரீபால்
* யாரையும் பழக்கமில்லாத புதிய நபரை நம்ப வேண்டாம் என்பதனை குழந்தைகள் உணரட்டும்.
குறிப்பிட்ட நபர்கள் தவிர அவர்களை யாருடனும் அனுப்பக் கூடாது என்பதனை பள்ளியிலும் சொல்லி விடுங்கள். பெற்றோர்களாகிய நீங்கள் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்து தான் வாழ வேண்டும்.
குட் டச், பேட் டச் என்பதனை சிறு வயதிலேயே சொல்லித் தாருங்கள்.
வீட்டில் ஆண் வேலை உதவியாளர்களைத் தவிருங்கள். பிறரின் உதவியைப் பெறுங்கள். பிறருக்கும் ஓடி உதவுங்கள்.
உங்கள் மீதான நம்பிக்கை உங்கள் குழந்தைகளுக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்.
15 வயதினை நெருங்கும் பெண் சிறுமிகளுக்கு உடல் ரீதியான உண்மைகளை சொல்லிக் கொடுங்கள்.
இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வினைக் கூட்டும்.
சிறு குழந்தைகளுக்கு தன் பெயர், பெற்றோர் பெயர், வீட்டு விலாசம், பெற்றோர் அலைபேசி, தொலைபேசி எண் இவற்றினை மனப் பாடமாய் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அன்றாடம் ஒருமுறை சொல்லச் சொல்லி கேளுங்கள்.
குழந்தைகளுக்கு-(13-18 வயது சிறுமிகளுக்கு) செல்போன் கொடுக்கும்பொழுது அது சில ஆபத்துகளையும் கொண்டு வரலாம். எனவே 'போன்' உங்கள் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இருக்கட்டும்.
உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கின்றதா?
ஏதாவது மாற்றம், பய உணர்வு தெரிகின்றதா? உடலில் காயங்கள், வலி இருக்கின்றதா? அவளது தோழிகளுடன் மகிழ்ச்சியாய் இருக்கின்றாளா? பள்ளி செல்ல ஏதும் முரண்டு செய்யாமல் செல்கின்றாளா? என ஒவ்வொரு சிறு மாற்றத்தினையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலை, கராத்தே போன்றவை அவசியம் கற்றுக் கொடுங்கள். கூடவே யோகா, தியானம் இவற்றினை கற்றுத் தருவது உறுதியான மனதினைத் தரும்.
* பெண் குழந்தைகளையும் நன்கு படிக்க வையுங்கள். வீட்டில் 'பொத்தி' பாதுகாப்பது பாதுகாப்பே ஆகாது. பெண்ணாய் பிறப்பது 'பாவம்' கிடையாது.
அதே நேரத்தில் ஐந்தில் ஒரு சிறுமி யாவது பாலியல் சீண்டல்கள், துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவர்கள் வாழ்க்கையே பயந்து ஒடுங்கி விடுகின்றது என்பதனையும் மறக்கக் கூடாது. தாய் ஒரு சிறந்த வழிகாட்டியாக, எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
பொதுவில் உலக அளவில் விடலை பருவ பெண்களின் பெற்றோர் அவர்களை கையாள்வது கடினமாக இருக்கின்றது என்றே கூறுகின்றனர்.
நம் நாட்டில் மீண்டும் நாம் கூட்டுக் குடும்ப முறையை ஆதரித்தால் ஆண், பெண் இரு பாலருக்கும் சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்றும் தோன்றுகின்றது.
பெண் குழந்தை ஆண் குழந்தைக்கு சமமே. முதலில் இதனை பெண்ணின் மனதில் நன்கு பதிய வையுங்கள். இது அவர்களுக்கு தேவையான சுதந்திரம், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஏற்படுத்தும். தீமைகளை தகர்த்து, மிதித்து முன்னேறும் மனோதிடம் உண்டாகும்.
8 வயது ஆகும் பொழுது பெண்களும் 9 வயது ஆகும் பொழுது ஆண்களும் சற்று மாறுதலாக இருப்பர் என ஆய்வுகள் கூறுகின்றன. அடம், எதிர்த்து பேசுதல், பொய் கூறுதல் போன்றவை இருக்கலாம். அன்பாலும், அரவணைப்பாலும் மட்டுமே இதனை மாற்ற முடியும். தேவைப்படின் 'கவுன்சிலிங்' எடுத்துக் கொள்ளுங்கள். 12, 14 வயதிலும் செல்போன் வழியாகவே நிறைய தவறான விஷயங்கள் மனதில் பதியும்.
உடல் நலம், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர பழகுங்கள். நல்ல பேச்சாளர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு பற்றி யூடியூப்- வீடியோக்கள் ஆக்கப் பூர்வமான பேச்சாளர்கள் இவர்கள் பேச்சினை கேட்கச் செய்யுங்கள்.
* எல்லைகளை சரியாக வகுத்திடுங்கள்.
* சரியாக, தெளிவாக பேசி புரிய வையுங்கள்.
* ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக பேசாதீர்கள். குழந்தைகள் குழம்பி விடுவார்கள். * தொடர்ந்து இதனைச் செய்யுங்கள்.
* பாதுகாப்பு முதல் முக்கியம் என புரிய வேண்டும். * 'ஏன்' என்று விளக்குங்கள்.
* பொறுமையாய் அவர்கள் பேசுவதை கேளுங்கள்.
* விழிப்புணர்வோடு இருக்க கற்றுக் கொடுங்கள். பொதுவில், வாழ்க்கை எந்திர வாழ்க்கை ஆகிவிட்டது. தாயும், தந்தையும் ஓடு ஓடு என ஓடுகின்றனர். பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் மிகக் குறைந்து விட்டது. கூட்டு குடும்பமும் இல்லை. இதுவே ஆண், பெண் இரு குழந்தைகளுக்குமே பிரச்சினை தான். சொல்ல, பகிர யாரும் இல்லாத நிலை என்று ஆகிவிடுகின்றது. இதற்கு தீர்வு கண்டாலே பல முன்னேற்றங்கள் வரும்.
இவைகளை பின்பற்றுவதால் மட்டுமே குற்றங்களை அடியோடு களைந்து விட முடியாது. நன்கு கட்டுப்படுத்த முடியும். தனி மனித ஒழுக்கம் ஏற்படும் பொழுது மட்டுமே சமுதாய முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் குழந்தைகள்
* தன்னை யாரேனும் வேண்டுமென்று தொடர்ந்து கமெண்ட் அடித்தால், வம்பிழுத் தால் 'என்ன?' என்று எதிர்த்து சத்தமாய் கேட்கும் துணிவு வேண்டும்.
* சற்று சத்தம் போட்டு ஊரை கூட்ட வேண்டும். * தனித்து இருக்கக் கூடாது.
* பஸ்சில் வேண்டுமென்றே மேலே அருவருப்பாக உரசுகின்றார்களா, பெரிய பின் கொண்டு சற்று குத்தி விடுங்கள். பரவாயில்லை.
* சிறு குடை வைத்து அவனை தள்ளி விடுங்கள். ஏதோ ெதரியாமல் நடந்தது போல் இருக்கட்டும்.
* காலை நன்கு மிதித்து 'சாரி' என சொல்லி விடுங்கள். ஆனால் இவை நிரந்தர தீர்வாக அமையாது. அப்படியானால் தீர்வு என்ன?
.....தொடரும்
- எல்லாவகை உயிரினங்களின் வாழ்க்கை ஆயுளும் அவ்வவற்றின் வலிமையைப் பொறுத்தே நீளவும் குறையவும் செய்கின்றது.
- ‘வலிமை உள்ளது வாழும்’ என்பது இயற்கை நமக்குக் கற்றுத்தருகிற வாழ்தலியல் தத்துவம்.
வலிமையைப் பெற என்றுமே விருப்பம் கொள்ளும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.
உலகில் உள்ள, புல் முதலான மனிதர் ஈறான உயிரினங்கள் அனைத்தையும் ஓரறிவு தொடங்கி, ஆறறிவு வரையில் உள்ளவைகளாகத் தொல்காப்பியர் பகுத்துக் காண்பார். இவற்றில் எல்லாவகை உயிரினங்களின் வாழ்க்கை ஆயுளும் அவ்வவற்றின் வலிமையைப் பொறுத்தே நீளவும் குறையவும் செய்கின்றது. 'வலிமை உள்ளது வாழும்' என்பது இயற்கை நமக்குக் கற்றுத்தருகிற வாழ்தலியல் தத்துவம்.
"ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறுஇணைக்கும்
கந்தாகும்
வாழ்தலும் அன்னதகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்"
என்கிற புகழ்மிக்க நாலடியார் பாடல், 'வலிமையுள்ளது வாழும்' என்கிற கோட்பாட்டை நம்பிக்கைக் கோட்பாடாக வலியுறுத்துகிற பாடலாகும். ஒற்றையடிப் பாதையில், நடந்துபோகிற கால்களால் மிதிபடுமாறு ஒரு இளஞ்செடி கிடக்கிறது. எத்தனை மிதி பட்டாலும் அந்தச் செடி, மனம் தளர்ந்து போகாமல், வாடிப்போகாமல், மனம் மற்றும் உடல் வலிமையோடு போராடிப் போராடி, பெருஞ் செடியாகிப், பெரு மரமாகி விடுகிறது. சிறு செடியாக இருந்தபோது மிதித்துக் கடந்தவர்கள் எல்லாம் இப்போது மரமானவுடன் விலகி விலகிக் கடந்துபோகத் தொடங்குகின்றனர்.
உருவத்திலும் வலிமையிலும் பெரிய ஆண் யானையைக்கூட அம்மரத்தில் கட்டி வைக்கவும் செய்கிறார்கள். இளம் வயதில் தோல்விகளும், துன்பங்களும் நம்மைத் தொடர்ந்து துன்புறுத்தல் செய்தாலும், தோல்விகளில் தளர்ந்து விலகிக் கொள்ளாமல், தன்னம்பிக்கை மற்றும் உடல், மன வலிமையோடு தன்னை உருவாக்கிக் கொண்டு மேலே வர முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
வாழ்க்கையை நாம் விரும்பிய திசைகளில் எல்லாம் நடத்திச் செல்வது கடினமானதுதான். என்றாலும் விரும்புகிற திசை களில் வாழ்க்கையைச் செலுத்தும்போது உண்டாகிற பல்வேறுவிதமான தடைகளையும் தடைகளின் தன்மைக்கேற்ப அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கு நமக்கு வலிமை வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வலிமை என்பது உடல் சார்ந்ததாகவும், உள்ளம் சார்ந்ததாகவும் இருக்கிறது. இவற்றை அன்றாடம் வளர்க்கவும், பெருக்கவும் இடைவிடாத பயிற்சிகளிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். துன்பமும், எதிர்ப்பும் இல்லாச் சூழ்நிலைகளில் உடம்பை உடற்பயிற்சிகள் மூலமாகவும், மனத்தை யோகம், தியானம் போன்ற மனப் பயிற்சிகள் வழியாகவும் வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். திடீரென்று ஏற்பட்டுவிடுகின்ற இடர்ப்பாட்டுக் காலங்களிலும் வலிபொறுக்கும் வலிமையும், வலிமாற்றும் வலிமையும் நம்முள் பெருகிடுமாறு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
மகாகவி பாரதி, 'உறுதிகொண்ட நெஞ்சும், கடுமைகொண்ட தோளும்' வலிமைக்கு அடையாளங்களாகக் கூறுகிறார். 'நெஞ்சில் உறுதி' என்பது மன வலிமை ஆகும்; 'கடுமை கொண்ட தோள்கள்' என்பது உடல் வலிமை ஆகும். இதில் எந்த வலிமை சிறந்தது என்று நிறுத்துப் பார்த்தால், மன வலிமை, உடல் வலிமை ஆகிய இரண்டுமே ஒன்றற்கொன்று வலிமையிற் குறைந்ததோ கூடியதோ கிடையாது என்பது புலப்படும். உடல் தளரும்போது, 'நானிருக்கிறேன் தளராதே!' என வலிமையான உள்ளம் உற்சாகப்படுத்துகிறது; உடலால் இயலாத செயலை அறிவின் துணைகொண்டு எவ்வளவுதூரம் எளிமையாக்கிச் செய்யமுடியுமோ அவ்வளவுதூரம் எளிமையாக்குவதற்கான வழிமுறைகளை புத்தி ஆராய்ந்து கண்டுபிடித்து செயல்படுத்துகிறது.
ஏற்கனவே செய்து தோற்றுப் போன ஒரு செயலை மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறதே என்று மனமும், அறிவும் தளரும்போது, ஆரோக்கியமான உடம்பு, உற்சாக வலிமையுடன் மீண்டும் முயன்று பார்ப்போமே! என மார்தட்டி ஓர் அடி முன்னெடுத்து வைக்கிறது. உடலும் மனமும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஒன்றற்கொன்று உதவிக்கொண்டு செயல் அக்கறை காட்டும்போது, இயலாத காரியம்கூட இமாலய வெற்றி அடைகிறது.
அறிவை மூலதனமாகக் கொண்டு மனம் வலிமை பெறுகிறது; அறிவு படிப்பறிவு மூலமாகவும், பட்டறிவு வாயிலாகவும் பெறப்படுகிறது. ஒரு மனிதன் தனது அறிவை நுட்ப அறிவினதாக ஆக்கிக் கொள்வதற்கு இடைவிடாத பயிற்சியும் முயற்சியும் கைகொடுக்கின்றன. நடைபெறும் காரியங்கள் சிக்கல்களை உடையனவாக மாறும்போது, அவற்றின் மூலங்களை உணர்ந்து, எந்தவிதச் சேதாரமுமின்றி, வெற்றிகரமான தீர்வினை எட்டுவதற்கு, அனுபவமும் துறைசார்ந்தஅறிவும் இணைந்த ஆழ்ந்த ஞானம் கைகொடுக்கிறது.
அதேபோல உடலை வலிமையாக்குவதற்குச் சத்துள்ள உணவும், உட்கொள்ளும் முறையும் அவசியமானது ஆகும். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றில்லாமல், உண்ண வேண்டிய உணவை, உண்ண வேண்டிய முறையில், உண்ண வேண்டிய நேரத்தில், உண்ண வேண்டிய அளவில் உண்ண வேண்டும்; 'கற்க கசடற' என்று வள்ளுவப் பெருந்தகை வாசிப்புக்குச் சொன்ன அதே அளவுகோல்களை உண்பதற்கும் வைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்; அறிவு வலிமை பெறுவது போல, உடலும் நோய்நொடியற்ற நிலையில் வலிமை பெறும்.

சுந்தர ஆவுடையப்பன்
ஒரு காலத்தில் ஒரு மல்யுத்த வீரன், ஊர் ஊராகச் சென்று தனது உடல் வலிமையைக் காட்டி, ஊர்மக்களை வெற்றிகண்டு அந்தந்த ஊர்களைத் தனக்குச் சொந்தமெனப் பட்டாப் போட்டுக் கொண்டிருந்தான். அவன் எந்த ஊருக்குள் நுழைந்தாலும் என்னவிதமான போட்டியாக இருந்தாலும் கலந்துகொண்டு அந்தப் போட்டியில் அவனே வென்று அந்த ஊரைச் சொந்தமாக்கி விடுவான். அடுத்து தங்களது ஊருக்குத்தான் அந்த பயில்வான் வரப்போகிறான் என்பதைக் கேள்விப்பட்ட ஓர் ஊரின் மக்கள், அவனது வெற்றியை எப்படித் தடுப்பது என்று கூடி ஆலோசனை செய்தார்கள்.
அந்த ஊரின் எல்லையில் கோட்டைச் சுவர் ஒன்று இருக்கிறது.
அந்தச் சுவருக்கு அருகில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தடியில் கடந்த வாரம்தான் ஒரு துறவி வந்து தங்கியிருப்பதைப் பற்றி ஆலோசனையில் ஊர்மக்கள் பேசிக் கொண்டனர். அவரிடம் சென்று உதவிகேட்டால் என்ன? என்றும் ஊர்மக்களில் சிலர் பேசினர். ஒரு மாமிசமலை பயில்வான் ரூபத்தில் உடல் வலிமையோடு போட்டிக்கு அழைக்கும்போது, வற்றல்போல உடல் இளைத்த துறவியால் என்ன செய்ய முடியும்? என்று சிலர் ஏளனமாகவும் பேசினர். வேறு வழியில்லாமல் இறுதியில் துறவியிடமே சென்று உதவி கேட்பது என்று முடிவு செய்து, அனைவரும் துறவியை நாடிச்சென்று விவரங்களைச் சொன்னார்கள். துறவி அமைதியாகச் சொன்னார்," அந்த பயில்வான் ஊருக்குள் வந்து போட்டிக்கு அழைக்கும்போது அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன்!".
இரண்டு, மூன்று நாட்களில் பரிவாரங்கள் புடைசூழ பயில்வான் அந்த ஊருக்குள் நுழைந்தார்; ஊர்மக்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பதுபோல வரவேற்றனர். ''என்ன போட்டி வைத்துக் கொள்ளலாம்?.. மல்யுத்தமா? வில், வாள் சண்டையா? அல்லது வலுதூக்கும் போட்டியா?" என்று தோள்களைத் தட்டி ஊர்மக்களைப் பார்த்து கர்ஜித்தார் பயில்வான். ஊர்ப் பெரியவர் ஒருவர், "ஐயா! போட்டிகளை ஊரோரத்திலுள்ள கோட்டைச் சுவர் அருகில் வைத்துக் கொள்ளலாம்!. போட்டியில் எங்கள் ஊர்மக்கள் சார்பில் அங்கிருக்கும் துறவி கலந்து கொள்வார்!" என்று கூறிவிட்டு பயில்வானைக் கோட்டைச் சுவர்ப் பக்கம் அழைத்துச் சென்றார்.
உடல் வற்றி வலிமையின்றி நின்றிருந்த துறவியைப் பார்த்துப் பயில்வான், "இவரா என்னோடு போட்டி போடப் போகிறார்?" என்று கேட்டார். என்னுடைய உடல் வலிமை எங்கே? இவரது வலிமை எங்கே?" என்று கூறிச் சிரித்து விட்டு, "ஐயா துறவியாரே! இதோ நம் கண்முன்னே கிடக்கிறதே ஒரு பெரிய பாறாங்கல், அதனை ஒற்றைக் கையால் தூக்கித் தோளில் நிறுத்தி, அதோ அந்த கோட்டைச் சுவருக்கு அப்பால் பத்தடி தூரம் தாண்டி விழும்படி செய்யட்டுமா? அப்படி உம்மாலும் செய்ய முடியுமா? எனக்குப் போதுமான உடல் வலிமை உள்ளது!; உமக்கு எப்படி?" என்று நக்கலாகக் கேட்டார் பயில்வான்." ஐயா பயில்வானே! எனக்கு உங்கள் அளவுக்கு உடல்வலிமை கிடையாது; இருந்தாலும் புத்தி வலிமை என்று சொல்லக்கூடிய மனோ வலிமை உண்டு.
நீங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்தப் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிக் கோட்டைச் சுவருக்கு அப்பக்கமாக எறிய வேண்டாம். ஒரே ஒரு எளிய காரியத்தை மட்டும் செய்யுங்கள் போதும். இதோ இந்த இளைஞனின் கைக்குட்டைத் துணியை வாங்கி உங்கள் கையில் தருகிறேன்; அந்தக் கைக்குட்டையை இங்கிருந்தே எறிந்து அந்தக் கோட்டைச் சுவர்தாண்டி விழும்படி செய்யுங்கள்! அது போதும்!" என்றார். அவ்வளவுதான்; பயில்வான் வாங்கிப் பலமுறை முயற்சி செய்தும், கைக்குட்டை அந்த இடத்தைவிட்டு ஒரு அடி தாண்டிக்கூட விழவில்லை; இருந்தாலும், ''இந்தக் கைக்குட்டையை நீங்கள் எப்படிக் கோட்டைச் சுவர்தாண்டி விழச் செய்வீர்கள்?" என்று அப்பாவியாய்க் கேட்டார் பயில்வான். அந்தக் கைக்குட்டை முனையில் ஒரு கல்லைவைத்து முடிச்சுப் போட்டு, வீசியெறிய, கைக்குட்டை இறக்கை முளைத்த பறவை போலக் கோட்டைச் சுவர் தாண்டி அப்பக்கமாக வீழ்ந்து மறைந்தது.
ஊர்மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; ''உடலைமட்டும் வளர்த்து வலிமையாக்கி, புத்தியை வளர்க்காமல் கோட்டைவிட்ட நான் பலசாலி இல்லை! நீங்களே பலசாலி!" என்று துறவிக்குப் புகழாரம் சூட்டிவிட்டு, இனி அறிவு வளர்க்கும் வேலையில் நானும் ஈடுபடுவேன் என்று ஊரைவிட்டுக் கிளம்பினார் பயில்வான்.
உடல் எவ்வளவுதான் ஆரோக்கியமானதாகவும், பலமுடையதாகவும் இருந்தாலும் அறிவுபலம் அதனைச் செலுத்தினால்தான், உண்மையிலேயே பயனுள்ள காரியங்களில் மனிதர்கள் வெற்றி அடைய முடியும்.
மனநிலை சரியில்லாதவர் கையில் கொள்ளிக்கட்டை கிடைத்தால், அவர் சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் உன்னத காரியத்தில் ஈடுபடுவதற்குப் பதில், சமையல் கூடத்தையே கொளுத்திவிடும் தீச்செயலில் ஈடுபட்டுவிடுவார். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் பெரும்பான்மையும் உடல் பலமுள்ளவர்களாக இருந்தாலும் வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிப்பவர்கள் நிச்சயம் மனோபலமும் நுட்ப அறிவும் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
இன்றைய இணைய வாழ்வியல் மனிதனை உடலியல் ரீதியாக இயங்க விடாத, நளினப் பணியாளர்களாக மாற்றிவிட்டது. அலுவலகம் வரைகூடச் செல்வது அவசியமற்றது என 'வீட்டிலிருந்த படியே வேலை' அறிவித்து விட்டது. உணவு விடுதி, பலசரக்கு, காய்கறிக் கடை, துணிக்கடை, திரையரங்கம் என எல்லாமே செயலிகளாக மாறிவிட்ட சூழலில், 'உடம்பு சிறுத்து, மூளைமட்டுமே பெருத்து' எனும் அவலநிலை எதிர்காலத்தில் உருவாகிவிடுமோ?.
கவனம் வைப்போம் மன வலிமையோடு கூடிய உடல் வலிமை கூட்டுவோம்!
தொடர்புக்கு 9443190098






