என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சூரிய ரேகை பலன்கள்
    X

    சூரிய ரேகை பலன்கள்

    • சூரிய ரேகை ஒருவர் கையில் பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்.
    • சூரிய மேட்டில் திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும்.

    கைரேகை சாஸ்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது. ஒருவரிடம் எவ்வளவு தான் திறமை இருந்தாலும் கூட அவருடைய கையில் சூரிய ரேகை இல்லாவிட்டால் வெளி உலகத்திற்கு அவருடைய திறமைகள் தெரியாமலே போய்விடும். அவர்கள் குடத்தில் இட்ட விளக்கு போல காணப்படுவார்கள்.

    சூரிய ரேகை ஒருவருடைய புகழையும், வசியத்தையும், திறமையையும், வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு தங்கு தடை இல்லாத சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால் அவர்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும். பெரும்பாலும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் கையில் சூரிய ரேகை காணப்படாது.

    சூரிய ரேகை ஒருவர் கையில் பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். எனினும் அது மோதிர விரலின் கீழே காணப்படும். சிலருக்கு பிறக்கும் போது காணப்படாமல் திடீர் என்று கூட ஏற்படலாம். ஆயுள் ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர் வாழ்க்கை சக்கரத்தில் ரேகை ஆரம்பிக்கும் வயதில் இருந்து முன்னேற்றம் ஏற்படும்.

    ஜாதகர் பல திறமைகளை தன்னுள் கொண்டு இருப்பார். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவார்கள். எழுத்து துறையில் மற்றும் கதை எழுதுவதில் கூட இவர்களிடம் ஆர்வமும் திறமையும் ஒளிந்து இருக்கும். அதனை புரிந்து பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எழுத்தாளராக இருப்பார்கள்.

    விதி ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அந்நபர் தன்னுடைய சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவார். இவர்கள் தன்னுடைய கடும் உழைப்பாலும் முயற்சியாலும் வாழ்க்கையின் வெற்றி விளிம்பிற்கு செல்வார்கள்.

    செவ்வாய் மேட்டில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் நிலம், சொத்துக்கள் சேரும். ராணுவம், காவல் துறைகளில் கூட உயர் பதவி கிடைக்கப்பெறும். விவசாயத்தின் மூலமாக நல்ல லாபத்தை பெறுவார். அரசியலிலும் கூட சாதிப்பார்கள்.

    சந்திர மேட்டில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அந்நபர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். அதிலும் சூரிய ரேகை நன்கு தெளிவாகத் தெரிந்தால் அந்நபர்கள் சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களாக இருப்பார்கள். வெற்றியாளராகவும் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்தவராகவும் இருப்பார். தொழில் அதிபராக இருந்து பல பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். பலர் இவர்களுடைய வெற்றிக்காக உழைப்பார்கள் மற்றும் உதவுவார்கள்.

    இருதய ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர்கள் கால சர்ப்ப தோஷத்தைக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு 33 வயதிற்கு பிறகு வாழ்க்கையில் அதீத அதிர்ஷ்டம் ஏற்படும். அதிலும் 40 வயதிற்கு பிறகு வாழ்க்கை ஏறுமுகமாக இருக்கும். அவர்களுக்கு பெண்கள் அல்லது தனது மனைவியினால் கூட அதிர்ஷ்டம் ஏற்படும்.

    அ.ச.இராமராஜன்

    புத்தி ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர்களுக்கு சமயோஜித புத்தி அதிகம் இருக்கும்.

    சூரிய ரேகை துண்டுபட்டு இருந்தால் ஜாதகர் தொழிலும் உத்தியோகத்திலும் பல சரிவுகளை சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.

    சூரிய ரேகை பல துண்டாக அமைந்து இருந்தால் எதிரிகளால் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும். இந்த அமைப்பு ஜாதகருக்கு எல்லா துறைகளிலும் தோல்வியை தான் தரும். சூரிய ரேகை வளைந்து நெளிந்து காணப்பட்டால் அந்த கைக்கு சொந்தக்காரர் தன்னமிபிக்கை இல்லாமல் இருப்பார். உத்யோகம் அல்லது தொழில் ரீதியாகப் பல தோல்விகளை சந்திப்பார். தொழிலில் அல்லது உத்யோகத்தில் எதிரிகள் ஏற்படுத்தும் தடையால் முன்னேற முடியாத நிலை உண்டாகும்.

    சூரிய மேட்டில் திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும்.

    சூரிய மேட்டில் சூரிய வளையம்: புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழ் இருப்பது. சூரிய மேட்டையும், புதன் மேட்டையும் ஒரு ரேகை உருவாகி இணைக்கும். இதனை சூரிய வளையம் என்று அழைப்பார்கள். ஆனால் இது எல்லோர் கையிலும் காணப்படாது. மிகவும் அரிதானது. அப்படிப்பட்டவர்கள் அரசியலில் உயர் பதவி, அரசு துறை செயலாளர்கள், பிரதமர், ஜனாதிபதி போன்ற பெரிய பதவிகளில் இருப்பார்கள்.

    சூரிய மேட்டில் நட்சத்திரம் தென்பட்டால் அது பெரிய பெயரையும், புகழையும் உடன் பெற்றுத் தரும்.

    சூரிய மேட்டில் இருக்க வேண்டிய குறிகள்:-

    சூரிய ரேகையில் சதுர குறி இருந்தால் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை பெறுவதை குறிக்கும்.

    சூரிய மேட்டில் அல்லது மோதிர விரலின் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய ரேகை காணப்பட்டால் பல தொழிலில் ஈடுபாட்டை காட்டுவார்கள். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். திருமண ரேகையானது சூரிய ரேகையுடன் இணைந்தால் அதிர்ஷ்டமான மணவாழ்வு அமையப்பெறும்.

    சூரிய ரேகையில் பெருக்கல் குறி காணப்படுவது நல்லதல்ல. சூரிய ரேகையில் சதுர குறி காணப்பட்டால் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை தரும். சூரிய மேடு பல துண்டுகளாக வெட்டப்பட்டு காணப்பட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். திருமண ரேகை சூரிய ரேகையை வெட்டினால் மணமுறிவு ஏற்பட இடம் உண்டு.

    சூரிய ரேகையில் தீவுக்குறி காணப்படுவது நல்லதல்ல. அது ஜாதகருக்கு எதிலும் தோல்வியை பெற்றுத் தரும்.

    ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டமான வாழ்வு அமைய வேண்டும் என்றால், சூரிய ரேகை நன்கு தெளிவாக கையில் அமைய வேண்டும். தெளிவு இல்லாமல் அமைந்த ரேகைகள் ஒருவருக்கு முழு பலனை தராது.

    அதேபோல, ஒருவரது கையில் சூரிய ரேகையை இல்லை என்றாலும் கூட வாழ்க்கை மிகுந்த போராட்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சூரிய வழிபாடு செய்ய வேண்டும். வசிஷ்டர் அருளிய ஆதித்ய ஹ்ருதய மந்திரம் சொல்லி வர சூரிய ரேகை கைகளில் தோன்றி தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதே போல சூரிய ரேகை கையில் இல்லாதவர்கள் பரிகாரமாக மாணிக்கம் அணிவது நன்மை தரும். சூரியனார் கோயில் போக வேண்டும்.

    செல்பேசி: 9965799409

    Next Story
    ×