என் மலர்
புதுச்சேரி
விநாயகர் சிலைகளை கரைத்த நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்தனர். இதனால் இறைச்சி, மீன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. காமராஜர் சாலையில் தொடங்கும் இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரைகளில் கரைக்கப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது.
புதுவை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது45). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (42). இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் என்பவர் அறிமுகமானார். டாக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ஜெயந்தியின் 2-வது மகளுக்கு பிறந்த நாள் என்பதால் அதற்கு விலையுயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக எரிக் வால்க்கர் கூறினார். அதன்படி பரிசு பொருளை செல்போனில் படம் பிடித்து ஜெயந்திக்கு அனுப்பினார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜெயந்திக்கு போன் வந்தது. அதில் பேசிய அங்கிதா என்ற பெண் தான் விமான நிலையத்தில் பணிபுரிவதாகவும், உங்களுக்கு இங்கிலாந்திலிருந்து விலையுயர்ந்த பரிசு பொருள் வந்திருப்பதாகவும் கூறினார். அந்த பரிசை பெறுவதற்கு பணம் கட்டவேண்டும் என கூறினார். பணம் அனுப்புவதற்காக வங்கி கணக்கு விபரத்தையும் ஜெயந்திக்கு அனுப்பி வைத்தார்.
இதனை உண்மையென நம்பிய ஜெயந்தி, அங்கிதா அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.50 ஆயிரம், 1 லட்சம் என 4 தவணையாக ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் பரிசு பொருள் வீடு வந்து சேரவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஜெயந்தி சந்தேகமடைந்தார். பின்னர் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து ஜெயந்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மேல்-சபை எம்.பி.க்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடக்கிறது.
வருகிற 15-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-
புதுவை மேல்-சபை எம்.பி. பதவி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் பாரதியார் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தான் பாரதியார் 10 ஆண்டுக்கு மேல் வசித்தார். அந்த காலத்தில்தான் பல புத்தகங்களை எழுதினார். பகவத் கீதையையும் மொழி பெயர்த்தார்.
புதுவையில் பாரதியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 21). கார் டிரைவர். இவருக்கும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமோதரன், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவியுடன், தாமோதரன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
அதாவது புதுச்சேரியில் 71 பேரும், காரைக்காலில் 30 பேரும், மாகியில் 8 பேரும், ஏனாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் இதுவரை 1,820 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு 1.90 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 934 பேரும் தடுப்பூசி செலுத்திகொண்டனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 493 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் பழனி நகரை சேர்ந்தவர் அங்காளன் (வயது49) இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அங்காளன் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு வில்லியனூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்தது.
ஒரிரு நாட்கள் அந்த பெண் வீட்டிலேயே அங்காளன் தங்கிவிடுவது வழக்கம். அங்காளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் அங்காளன் தங்கியிருந்தார். அப்போது மது குடிப்பதற்காக கள்ளக்காதலியிடம் அங்காளன் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அங்காளன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கள்ளக்காதலி வீட்டிலேயே எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்காளன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் ஹேமக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.

தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.
அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.
புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.
தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.







