search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுகுடிக்க கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை

    மதுக்குடிக்க கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் பழனி நகரை சேர்ந்தவர் அங்காளன் (வயது49) இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    அங்காளன் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு வில்லியனூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    ஒரிரு நாட்கள் அந்த பெண் வீட்டிலேயே அங்காளன் தங்கிவிடுவது வழக்கம். அங்காளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் அங்காளன் தங்கியிருந்தார். அப்போது மது குடிப்பதற்காக கள்ளக்காதலியிடம் அங்காளன் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அங்காளன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கள்ளக்காதலி வீட்டிலேயே எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்காளன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் ஹேமக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×