search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுவை மேல்-சபை எம்.பி. பதவி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி

    மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
    புதுச்சேரி:

    புதுவை மேல்-சபை எம்.பி.க்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடக்கிறது.

    வருகிற 15-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    புதுவை மேல்-சபை எம்.பி. பதவி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×