என் மலர்
விருதுநகர்
- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- 2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் தேரடி திடலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செய லாளரும், முகவூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.எம்.குருசாமி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், தில்லுமுல்லு ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார். அதேபோல் கனிமொழி ஒரேயொரு கையெழுத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றார். ஆனால் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் மீதும், கடவுள் மீதும் அச்சம் கிடையாது. ஆகையால் தான் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி யாரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க தயாராகி விட்டனர்.தி.மு.க. ஆட்சி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் ராஜபாளையம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ராஜ பாளையம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.ஜி.ஆர். இளை ஞரணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், மகளிரணி துணை செயலாளர் சந்திரபிரபா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியம்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ்,மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணைசெயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் வனராஜ், ராஜபாளையம் நகர செயலாளர்கள் துரைமுருகேசன்(வடக்கு), பரமசிவம்(தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் பஸ் நிறுத்தங்கள் மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
- டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 60 ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பழைய பஸ் நிலையம் உள்ளது.
இந்த பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்க ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு 21 கடைகள், 2 உணவு விடுதிகள், 2 காத்திருக்கும் அறைகள், ஒரு புறக் காவல் நிலையம், பெண்களுக்கான பாலூட்டும் அறை போன்ற வசதிகளுடன் 2 நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட உள்ளன.
பஸ் நிலையம் புதுப்பி க்கும் பணிகள் காரணமாக பஸ்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஞ்சு மார்க்கெட் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ெரயில்வே பீடர் ரோடு சென்று அங்கிருந்து தென்காசி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லவும், கிழக்கே செல்லும் பஸ்கள் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக மலையடிப்பட்டி ெரயில்வே கேட் சென்று மலையடிப்பட்டி வழியாக கிழக்கே செல்லவும், தெற்கே இருந்து வரும் பஸ்கள் தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானா வந்து மேற்கு புறமாக முடங்கியார் ரோடு திரும்பி வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக, மாடசாமி கோவில் சாலை வழியாக பஞ்சு மார்க்கெட் சென்று வடக்கே செல்லவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும், பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மலையடிப்பட்டி வழியாக கிழக்கு பகுதி செல்லவும், பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து டி.பி. மில்ஸ் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு வழியாக ஒரு டவுன் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே ெரயில்வே மேம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், பழைய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளால் எந்தெந்த டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.
கிராமங்களுக்கு ெசல்லும் டவுன் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்தும், அரசுமகப்பேறு மருத்துவமனை முன்பிருந்தும் புறப்ப டுவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு வைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலை சுற்றுவது கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.
கூடுதலாக சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள் மீது ராஜபாளையம் ெரயில் நிலையத்தையும் மேம்ப டுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. நடிகர் வடிவேல் பாணியில், ''அடிக்குமேல அடியா அடிச்சுக்கிட்டே இருந்தா' எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருக்கமுடியும்'' என்ற நிலை தான் ராஜபாளையம் மக்களின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
- நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை:
களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).
இவரது நண்பர்கள் விபின், றிஜூ, ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.
இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ, ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.
மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றிஜியை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆனந்தகுமார் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள மருதுபாண்டி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் உள்ள மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
தந்தையின் டீக்கடையை கவனித்து வந்த ஆனந்தகுமார் அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவதானம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி மருதுபாண்டி என்பவரிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனந்தகுமார் ரூ. 15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக மாதந்தோறும் வட்டியும் செலுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஆனந்தகுமார் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மருதுபாண்டி நெருக்கடி கொடுத்து வந்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆனந்தகுமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனில் பேசி முடித்த பின்பு ஆனந்தகுமார் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் ஆனந்த குமாரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிைடயில் இன்று காலை சேத்தூர் மேற்கு பகுதியில் உள்ள பட்டு ராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடப்பதாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தவர் ஆனந்தகுமார் என தெரியவந்தது. அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று நள்ளிரவு ஆனந்த குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மருதுபாண்டி அவரை வெளியே வருமாறு கூறியுள்ளார்.
வீட்டின் அருகில் இசக்கயம்மன் கோவில் பகுதிக்கு வந்த ஆனந்தகுமாரிடம் பணம் கேட்டு மருதுபாண்டி தனது கூட்டாளிகள் 4 பேருடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த மருதுபாண்டி மோட்டார் சைக்கிளில் ஆனந்தகுமாரை சேத்தூரில் உள்ள செங்கல் சூளைக்கு கடத்தி வந்துள்ளார்.
பின்னர் மருதுபாண்டி மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேர் ஆனந்தகுமாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள மருதுபாண்டி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிலாளர்களும் விபத்து தடுப்பு பயிற்சி பெற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
- பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப் படுவதை உறுதி செய்வது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடன் கலெக்டர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் நடைபெறும் விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விபத்துகளை குறைக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டரால் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது. ஆய்வின்போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப்பட்டால் பட்டாசு தொழிற்சாலை உரிமை யாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்ற வியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
ஆலை உரிைமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிக கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறப்பு ஆய்வு குழுக்களை தவிர்த்து, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களால் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். உயர் அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்யும்பொழுது, அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவிலான வெடி பொருட்கள் இருப்பு வைத்தல் மற்றும் தயாரித்தல், உள்குத்தகை போன்ற மிகக் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, இந்திய தண்டனை சட்டம், பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
மேலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்ளிட்ட இதர பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அனைத்து பட்டாசு தொழிற்சா லைகளில் பணிபுரியும், போர்மேன், மேலாளர் மற்றும் ரசாயனக் கலவைப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி நடவடிக்கைகளை முழுமைப்படுத்தும் நோக்கத்தில் குறுகிய காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் வெடி விபத்துகளை தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, பாது காப்பான முறையில் தொழில் செய்து, விபத்தில்லா விருதுநகரை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்த இடங்கள் மீட்கப்பட்டது.
- ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் சர்வே எண் 176 உட்பிரிவின் கீழ் இடங்கள் வீட்டுமனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் வாங்கியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அதில் 8 பேருக்கு சொந்தமான 60 சென்ட் இடங்களை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வளர்த்து வந்தனர்.
இடத்தின் உரிமையாளர்கள் கேட்டு சென்றால் அவர்களை ஆபாசமாக பேசி மிரட்டியும் வந்தனர். இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தர உத்தரவு வாங்கினர். கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமசந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் புல்டோசர்களை கொண்டு அதிரடியாக ஆக்கிமிப்புகளை அகற்றினர்.
அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வட்டாட்சியரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவர் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ராஜ்குமாரின் சகோதரி சத்யவாணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல். வெளியூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற அன்னலெட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மைக்கலின் தாயார் ராணி அளித்த புகாரின் பேரில் அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள நாட்டா மங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 17 வயது மகள் சிவகாசி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மொபட்டில் கல்லூரி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாரி முத்து அளித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டையில் ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- விருதுநகர் சாலையில் உள்ள துணைமின் நிலையம் அருகில் ரூ.133.5 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை -மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
இந்த புறவழிச் சாலை யானது அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து வலதுபுறம் பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.
இதனுடைய தூரம் 10 கி.மீ. ஆகும். 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ரூ.98.58 கோடி சாலை பணிக்கும், ரூ.35.4 கோடி நில எடுப்புக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் போது விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்திற்கும், ராமேசுவரம், ராமநாதபு ரத்தில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்கா சிக்கும் செல்லும் வாக னங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறு கலானஅருப்புக்கோட்டை நகர பகுதியை தவிர்த்து பயணிக்க ஏதுவாக அமையும்.
அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் வாகன நெரிசலுள்ள நகர பகுதியை தவிர்த்து
சுலபமாக பயணிக்க ஏதுவாக இந்த புறவழிச்சாலை அமையும். மேலும், அருப்புக்கோட்டை நகரபகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட், கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவபிரகாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற சிவகாசி சகோதரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த சரவணன். அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி. பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள்கள் அஸ்வினிபிரியா 11-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.
இதில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வினிபிரியாவும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹேமலதாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சகோதரிகளின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற திருத்தங்கல் சகோதரிகளை பள்ளி தாளாளர் கணேசன் மற்றும் தலைைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.
- அருப்புக்கோட்டையில் 6 டன் பட்டாசு கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது.
- பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களாக தொடர் வெடிவிபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் காரத் அறிவுறுத்தலின் படி, தனிப்படை அமைக்கப்பட்டு பட்டாசு தயாரிக்க பயன்படும் கருந்திரியை பதுக்கிவைப்பதை தடுக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சின்னபுளியம்பட்டி, பெரிய புளியம்பட்டி, தெற்கு தெரு, எம்.டி.ஆர். நகர், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு நபர்கள் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 6.15 டன் கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த லோகநாதன் (62), விஜயகுமார் (46), செல்வராஜ் (58), ராமசாமி (68), வீரராஜன் (62), பாலமுருகன் (51), பாண்டி கணேசன் (55) முருகேஸ்வரி (60), கணேசன் (53) ஆகிய 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலைய புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது.
- மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ்நிலையத்தில் மேம்படுத்தும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்காக இன்று (20-ந் தேதி) முதல் பழைய பஸ் நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழி த்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும், காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி ரெயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருப்பதையொட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பும், காவல்துறை யின் அறிவி ப்பும் பொருத்த மற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது.
எனவே சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால த்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது. மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






