என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தங்கள் மாற்றம்"

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ராஜபாளையம் பஸ் நிறுத்தங்கள் மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 60 ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பழைய பஸ் நிலையம் உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்க ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு 21 கடைகள், 2 உணவு விடுதிகள், 2 காத்திருக்கும் அறைகள், ஒரு புறக் காவல் நிலையம், பெண்களுக்கான பாலூட்டும் அறை போன்ற வசதிகளுடன் 2 நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட உள்ளன.

    பஸ் நிலையம் புதுப்பி க்கும் பணிகள் காரணமாக பஸ்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஞ்சு மார்க்கெட் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ெரயில்வே பீடர் ரோடு சென்று அங்கிருந்து தென்காசி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லவும், கிழக்கே செல்லும் பஸ்கள் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக மலையடிப்பட்டி ெரயில்வே கேட் சென்று மலையடிப்பட்டி வழியாக கிழக்கே செல்லவும், தெற்கே இருந்து வரும் பஸ்கள் தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானா வந்து மேற்கு புறமாக முடங்கியார் ரோடு திரும்பி வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக, மாடசாமி கோவில் சாலை வழியாக பஞ்சு மார்க்கெட் சென்று வடக்கே செல்லவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும், பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மலையடிப்பட்டி வழியாக கிழக்கு பகுதி செல்லவும், பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து டி.பி. மில்ஸ் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு வழியாக ஒரு டவுன் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஏற்கனவே ெரயில்வே மேம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், பழைய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளால் எந்தெந்த டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    கிராமங்களுக்கு ெசல்லும் டவுன் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்தும், அரசுமகப்பேறு மருத்துவமனை முன்பிருந்தும் புறப்ப டுவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு வைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலை சுற்றுவது கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

    கூடுதலாக சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள் மீது ராஜபாளையம் ெரயில் நிலையத்தையும் மேம்ப டுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. நடிகர் வடிவேல் பாணியில், ''அடிக்குமேல அடியா அடிச்சுக்கிட்டே இருந்தா' எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருக்கமுடியும்'' என்ற நிலை தான் ராஜபாளையம் மக்களின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
    • அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

    சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.

    அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

    முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி, தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

    ×